என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே 'லிப்ட்' கேட்ட தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு- 2 பேருக்கு வலைவீச்சு
- பாலசுப்பிரமணியன் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக உள்ளார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் பாலசுப்பிரமணியன் லிப்ட் கேட்டுள்ளார்.
களக்காடு:
நெல்லை, பாளை குலவணிகர்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது48). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக உள்ளார்.
நேற்று முன் தினம் இவருக்கு இரவு பணி என்பதால் நெல்லையில் இருந்து நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கிருந்து மில்லுக்கு செல்வதற்காக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் லிப்ட் கேட்டார். அவர்களும் பாலசுப்பிரமணியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி மில்லுக்கு சென்றனர்.
மில் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து பாலசுப்பிரமணியன் இறங்கியதும், 2 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.500 தருமாறு கேட்டனர். அதற்கு பாலசுப்பிரமணியன் மறுத்தார். எனினும் அவர்கள் அவரை மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ரேசன்கார்டு, பான்கார்டு ஆகியவற்றையும் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிர மணியன் இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியிடம் செல்போன் மற்றும் ஆவணங்களை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






