என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
    X

    தொழிலாளியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

    • சதீஷ் நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
    • சுடலைக் கண்ணு கத்தியை காட்டி மிரட்டி சதீஷிடம் பணம் பறிக்க முயன்றார்.

    நெல்லை:

    ஈரோட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது34). இவர் நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இவர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது சி.என். கிராமத்தை சேர்ந்த சுடலைக் கண்ணு (27) என்பவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.

    அங்கிருந்து தப்பிய சதீஷ் இது தொடர்பாக சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி சுவாதிகா வழக்குப்பதிவு செய்து சுடலைக்கண்ணுவை கைது செய்தார்.

    Next Story
    ×