search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    கோப்பு படம்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    • மோட்டார் சைக்கிளை காணாமல் லோகநாதன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
    • வாரசந்தை அருகே சாராயக்கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறிகள் வாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் அண்ணாவீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் புதுவை கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று லோகநாதன் கடற்கரை சாலையில் உள்ள துமாஸ் வீதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு சென்றார்.

    பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் லோகநாதன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றி ருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து லோகநாதன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரைண நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்த ராஜ துரை(27). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் உறவினரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றார். வாரசந்தை அருகே சாராயக்கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறிகள் வாங்கினார்.

    பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் ராஜதுரை திடுக்கிட்டார். யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராஜதுரை திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×