என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்5 Nov 2021 6:55 AM GMT (Updated: 5 Nov 2021 6:55 AM GMT)
திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க சென்றவரின் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தன். இவர் திருவொற்றியூரில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டிக்கெட் எடுக்க சென்றார். பின்னர் திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதனை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து திருவொற்றியூர்போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்த ஜெகன் மற்றும் காஜா மொய்தீன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X