search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contractor"

    • வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

    அவர்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 2 இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வீடு, அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.
    • போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாசூரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது50).

    இவர் ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் காண்டிராக்டராக உள்ளார்.

    இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு வேத விக்னேஷ்வரி(13) என்ற மகளும் மோகன்ராம், அகிலேஷ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    வேத விக்னேஷ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சுப்புராஜூக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரது மில்லில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

    தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தார்.

    ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி அடைக்க முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். கடனை அடைக்க முடியாததை நினைத்து வருத்தப்பட்டும் வந்துள்ளார்.

    வேதவிக்னேஷ்வரியை, தினமும் சுப்புராஜ் தான் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு, மீண்டும் அழைத்து வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மகளை அழைப்பதற்காக பள்ளிக்கு சென்றார்.

    பின்னர் அங்கு மகளை அழைத்து கொண்டு கொல்லிமலைக்கு சென்றார். அங்குள்ள மலை உச்சிக்கு சென்ற அவர், திடீரென, அங்கிருந்து, மகளை தள்ளி விட முயற்சித்தார்.

    அப்போது சிறுமி தனது தந்தையிடம் பஸ்சுக்கு லேட் ஆகுது, எனக்கு பசிக்கிறது என கூறி தந்தையை அழைத்தார். இதையடுத்து, சுப்புராஜ் மகளுடன் ஈரோட்டுக்கு சென்றார்.

    பின்னர் பன்னாரி அம்மன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டு, அதனை மகளின் வாயில் ஊற்றி குடிக்க சொல்லியுள்ளார். ஆனால் சிறுமி குடிக்க மறுப்பு தெரிவித்து கதறி அழுதார்.

    குழந்தை அழுததை பார்த்ததும் பதறிபோன சுப்புராஜ், தனது மகளிடம் ரூ.70-யை கொடுத்து, நீ வீட்டுக்கு செல் நான் வந்து விடுகிறேன் என தெரிவித்து அனுப்பி வைத்தார்.

    சிறுமியும் அங்கிருந்து நேராக வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். வரும் வழியில் பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

    அன்னூர் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூச்சி மருந்துடன் காட்டுக்குள் சென்ற சுப்புராஜை வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுவரை அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பிரசாத கடையை அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயன்றார்.
    • தீ விபத்து எதிரொலியாக கோவுல் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலில் பிரசாத கடை நடத்துவதற்கான உரி மையை ராமர் என்பவர் ஏலம் எடுத்து ஆண்டாள் சன்னதி கொடி மரம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலை யில் மதுரை மீனாட்சி அம் மன் கோவில் வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக கோவுல் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து இந்த ஆண்டு நடந்த கோவில் கடைகளுக்கான ஏலத்தில் கோவில் வளாகத்திற்கும் கொடிமரம் அருகே கடை வைக்க கூடாது. மாறாக கோயில் முன் உள்ள மண்ட பத்திலோ, ஆடிப்பூர கொட் டகையிலோ சொந்த மாக செட் அமைத்து பிரசாத கடை வைத்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை யுடன் ஏலம் விடப்பட்டது.

    இந்த ஆண்டு பிரசாத கடை நடத்துவதற்கான உரிமையை ரூ.21 லட்சத்திற்கு ஏலம் எடுத்த ராமர் கொடி மரம் அருகிலேயே கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று கோவில் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடையை அப்புறப்படுத்த முயன்ற போது, எதிர்ப்பு தெரிவித்த ஒப்பந்ததாரர் ராமர், அவரது சகோதரி மற்றும் மகளுடன் உடலில் நெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர்களை போலீசார் தடுத்தனர். கடை யில் இருந்த பொருட்களை அகற்றிய ஊழியர்கள் கோவில் முன் உள்ள மண்ட பத்தில் வைத்தனர்.

    இதுகுறித்து செயல் அலுவலர் முத்துராஜா கூறுகையில், இந்த ஆண் டுக்கான ஏலத்தில் கோவில் வளாகத்திற்குள் கடை வைக்க அனுமதி கிடையாது. அதற்கு பதில் கோவில் முன் உள்ள மண்டபத்திலோ அல்லது ஆடிப்பூர கொட்ட கையில் பிரசாத கடை அமைத்துக் கொள்ள வேண்டும் தெளிவாக குறிப்பிடப்பட்டது. இது ஒப்பந்தத் தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஆடிப்பூர திருவிழா முடிந்த பின் கடையை இடமாற்றம் செய்து கொள் கிறேன் எனக்கோரி யதால் ஒரு மாதம் அவகாசம் வழங் கப்பட்டது. அதன்பின் 4 முறை நோட்டீஸ் அனுப்பி யும் கடையை அகற்றவில்லை. அதனால் கோவில் பணியா ளர்கள் மூலம் கொடிமரம் அருகே இருந்த பொருட்கள் எடுக்கப்பட்டு, கோவில் முன் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது என் றார்.

    • கோவிலில் புனரமைப்பு பணியில் ஒப்பந்ததாரர் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது52). அங்குள்ள ஒரு சமுகாத்தினருக்கு சொந்தமான கோவிலில் நிர்வாகியாக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சுப்பையா. கோவிலில் புனரமைப்பு பணிகளை ரூ.79 லட்சத்து 40 ஆயிரத்து 375 மதிப் பீட்டில் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து அந்த தொகை கோவில் நிர்வா கத்தின் சார்பில் சுப்பையா விடம் கொடுக்கப்பட்டது.

    முழுவதுமாக பணிகள் முடிவடையாத நிலையில் நிர்வாகத்திடம் கூடுதலாக சுப்பையா பணம் கேட்டார். அப்போது ஏற்கனவே கொடுத்த பணத்திற்கு வரவு-செலவு கணக்கு களை ஒப்படைக்குமாறு நிர்வாகத்தின் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் கணக்கு கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போதும் செலவு கணக்கு கொடுக்க சுப்பையா மறுத்துவிட்டார். இதையடுத்து கோவில் பணிகளில் சுப்பையா ரூ.12 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.

    கோர்ட்டு உத்தர வின்பேரில் ஒப்பந்ததாரர் சுப்பையா, மற்றொரு சுப்பையா, ராமராஜ், ஜெயக்குமார், சரவணன், சிற்பி சீனிவாசன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் புகழேந்தி என்ற ரவிக்குமார் (37), எம்.பி.ஏ. பட்டதாரி.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தனர். இவர்களுடன் ரவிக்குமாரின் அண்ணன் செல்வக்குமார் (44), இவர்களது சித்தப்பா மகன் யவுன் (27) ஆகியோரும் பெயிண்ட் அடித்து வந்தனர்.

    இந்நிலையில் சதீசுக்கு தெரியாமல் புதிதாக ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் காண்டிராக்டை ரவிக்குமார் எடுத்துள்ளார். இது சதீசுக்கு தெரிய வந்ததால் இது குறித்து பேசுவதற்காக பா.ஜனதா கட்சியின் தொழில் நுட்ப பிரிவு சேலம் மாவட்ட செயலாளர் சாமுவேல் (37) என்பவரை அழைத்தனர்.

    இதையடுத்து நேற்றிரவு 7 மணியளவில் வீரகனூர் அருகே பெரம்பலுர் தேசிய நெடுஞ்சாலையில் சதீஷ், ரவிக்குமார், சாமுவேல் ஆகியோர் கூடினர். அப்போது சதீசுக்கு தெரியாமல் ஏன் காண்டிராக்ட் எடுத்து செய்கிறாய் அவருடன் சேர்ந்து செய் என ரவிக்குமாரிடம், சாமுவேல் கூறினார். இதனை ரவிக்குமார் ஏற்காததால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    அப்போது ரவிக்குமார் அங்கிருந்த கல்லை எடுத்து சாமுவேலை தலையில் தாக்கினார். இதில் சாமுவேல் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து ரவிக்குமாரை கழுத்து, முகம், தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வகுமாரும், யுவனும் அங்கு வந்து தடுக்க முயன்றனர். அப்போது செல்வகுமாரையும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாமுவேல் கத்தியால் குத்தினார். யுவனுக்கும் நெற்றியில் வெட்டு விழுந்தது. இதையடுத்து வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த மோதலில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், செல்வக்குமார், யுவன் ஆகிய 3 பேரையும் மேல் சிசிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சாமுவேல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டாக்டரிடம் கருத்து கேட்டு அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை அழகுபெருமாள் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த மூக்காயி(52), தொண்டிச் சாமி, கட்டையன்(46), ஜோதி(52) ஆகிய 4 தொழிலாளர்கள் நேற்று கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மாடிக்கு செல்வதற்காக அமைக்கப் பட்ட படிக்கட்டு கட்டுமானம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை பார்த்து கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

    மேலும் 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர் பாக கூடல்புதூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் ஒப்பந்ததாரர் அழகு பெருமாள், பொறியாளர் இளமதி மற்றும் வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசு ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள மாவடி, நெரிஞ்சிவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது40). இவர் கட்டுமான தொழில் காண்ட்ராக்டராக உள்ளார்.
    • காயமடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மாவடி, நெரிஞ்சிவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது40). இவர் கட்டுமான தொழில் காண்ட்ராக்டராக உள்ளார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு மலையடிபுதூரை சேர்ந்த செல்லத்துரை மகன் சாமுவேல் (20) தாமரை குளம் அருகே உள்ள ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் அனுமதி இன்றி பனை மரத்தில் ஏறி நொங்கு களை வெட்டி யுள்ளார். இதனை பார்த்த பன்னீர்செல்வம், சாமுவேலை கண்டித்து உள்ளார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று சாமுவேல், பன்னீர் செல்வத்திற்கு போன் செய்து, கட்டுமான பணி உள்ளது என்றும், அதுபற்றி பேச ராஜபுதூர் ஊருக்கு தென்புறமுள்ள பாலத்திற்கு வரும் படி அழைத்துள்ளார்.

    கொலை மிரட்டல்

    இதையடுத்து பன்னீர்செல்வம் அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த சாமுவேல் உள்பட 5 பேர் சேர்ந்து, பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசி தாக்கினர். கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதனால் காயமடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பு ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பன்னீர்செல்வத்தை தாக்கிய சாமுவேல் உள்பட 5 பேரையும் தேடி வருகிறார்.

    • ராகவானந்தத்திற்கு சொந்தமான காரில் நேற்று இரவு நண்பர்கள் 2 பேரும் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.
    • அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராகவானந்தம் (வயது56). ஒப்பந்ததாரர்.

    இவரது நண்பர் அண்ணாநகரை சேர்ந்த முருகன். இந்நிலையில் ராகவானந்தத்திற்கு சொந்தமான காரில் நேற்று இரவு நண்பர்கள் 2 பேரும் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

    பின்னர் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது அவர்க ளுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன், ராகவானந்தத்தை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் கற்களால் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். காயமடைந்த ராகவானந்தம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி விவாகரத்து பெற்றதால் விபரீத முடிவை எடுத்தார்.
    • ‘வங்கி பணத்தை எடுத்து இறுதிச் சடங்கு செய்ய வேண்டுேகாள் விடுத்தார்.

    கோவை

    கோவை தடாகம் அருகே உள்ள பன்னிமடை ஏ.என்.டி. நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). டிரான்ஸ்போர்ட் காண்டிராக்டர்.இவருக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து வனிதா தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 5 ஆண்டுகளாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.வனிதா விவாகரத்து கேட்டு தனது கணவர் வினோத்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அவரும் விவாகரத்து கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது வந்தது. வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி 2 பேருக்கும் விவாகரத்து வழங்கினார். இதனால் வினோத்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த வினோத்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு வினோத்குமார் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அண்ணா, பாப்பாவை நன்றாக பார்த்துக்கொள். கடந்த 10 மாதங்களாக எனக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக்கொண்ட பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு நன்றி. அண்ணா என்னுடைய எல்.ஐ.சி. பணத்தை எடுத்து வங்கியில் டெபாசிட் செய்து உள்ளேன். அந்த பணத்தை எடுத்து என் இறுதி சடங்கிற்கு செலவிடவும். இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.பின்னர் போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.
    • தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வடக்கூர் வடக்கு தெற்கு தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்த வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.

    ஆனால் தற்போது அந்த சாலை வழியாக செல்ல ஆக்கிரமித்தவர் தடுக்கிறார்.

    எனவே மீட்டு தரப்பட்ட சாலையை எங்களது பயன்பாட்டுக்கு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பூதலூர் ஒன்றியம் புதுக்கரி யாபட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-

    சானூரப்பட்டி ஊரா ட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

    எனவே அரசுக்கு இழப்பீடு செய்த பணியாளர்கள், ஒப்பந்தகாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சம்பந்தபட்ட தனியார்களிடம் இருந்து மேற்படி தொகையை திரும்ப பெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • மணிராஜை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்
    • பலத்த காயம் அடைந்த மணிராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முத்தையா புரம் சுந்தர் நகரை சேர்ந்தவர் மணிராஜ் ( வயது 60). பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இவர் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பாரதிநகர் அருகே மணிராஜ் வந்த போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மணிராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து மணிராஜை அரிவாளால் வெட்டியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மதுரையில் சமையல் காண்டிராக்டர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் தான் சமையல் காண்டிராக்டர் வீட்டிலும் ைகவரிசை காட்டியது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை வசந்தநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாச சங்கர நாராயணன். சமையல் காண்டிராக்டராகன இவர் கடந்த 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து 40 பவுன் நகை, ரூ. 20 லட்சம் ரொக்கம் திருடிவிட்டு தப்பினர்.

    இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்ேபாது 2 பேர் நள்ளிரவில் சீனிவாச சங்கர நாராயணன் வீட்டுக்கு செல்வது தெரியவந்தது.

    இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த 26-ந் தேதி ஆண்டாள்புரம் பகுதியில் நரேந்திரன் என்பவரது வீட்டில் கேமரா செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர்கள் சமையல் காண்டிராக்டர் வீட்டிலும் ைகவரிசை காட்டியது தெரியவந்தது.

    போலீசார் கேமிராவில் பதிவான 2 பேரின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தியதில் அதில் ஒருவர் மதுரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அந்தோணி கணபதி மகன் பாண்டியராஜன் (வயது 22) ஆவார். இவர் மீது அடிதடி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் மதுரை நகர் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன.

    இதனை தொடர்ந்து போலீசார் பாண்டியராஜன் வீட்டில் சென்று அவரை கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் அழைத்து விசாரணை நடத்தியதில் தனது கூட்டாளி கணேசன் என்பவருடன் சேர்ந்து அவர் சமையல் காண்டிராக்டர் வீட்டில் நகை, பணம் திருடியுள்ளார்.

    அவரிடம் இருந்து 30 பவுன் நகை, ரூ. 8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதம் 10 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் கணேசன் எடுத்து சென்றுள்ளார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சமையல் காண்டிராக்டர் வீட்டில் கொள்ளை நடந்த 13 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ×