search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரையில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது

    மதுரையில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் விபசாரம் தொடர் கதையாகி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தர விட்டார்.

    மாநகர தலைமையக துணை கமி‌ஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில், விபசார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் மாநகரம் முழுவதும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அப்துல்கலாம் ஆரிப்பை (23) செல்போனில் பெண் தொடர்பு கொண்டார். அவர், “எங்களிடம் விபசார அழகிகள் உள்ளனர். வீட்டில் வைத்து தொழில் செய்து வருகிறோம். போலீஸ் பிரச்சினை இல்லை” என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

    பயந்துபோன அப்துல்கலாம் பதில் சொல்லாமல் செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து அவர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் அப்துல்கலாம் மூலமாகவே குற்றவாளிகளை கைது செய்வது என்று போலீசார் திட்டமிட்டனர். போலீசாரின் திட்டப்படி அப்துல்கலாம் மீண்டும் அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அவர், “நான் பணம் கொடுக்க தயார், எங்கு வரவேண்டும்?” என்று கேட்டுள்ளார். அந்த பெண் கண்ணனேந்தல் பகுதிக்கு வரச் சொல்லியதன் பேரில் அங்கு சென்றார்.

    அவரை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் பாரதிநகர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு 2 பெண்கள் இருந்தனர். அப்துல் கலாமிடம் பணம் வாங்கிக் கொண்ட கும்பல், அவரை பெண்ணுடன் தனி அறைக்கு அனுப்பி வைத்தது. அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் நாராயணபுரம் கோகலே தெருவைச் சேர்ந்த பாண்டிகுமார் (36), புதூர் மகாலட்சுமி நகர் தேவராஜ் மனைவி பிரசன்னாதேவி (33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார். போலீசார் இருவரையும் திருப்பாலை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×