

புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனைகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று அந்த மிரட்டலில் கூறப்பட்டு இருந்தது. மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் வெளியாகி இருந்தது.
தமிழகத்தில் பல மருத்துவமனைகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மருத்துவமனைகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
ஓசூர் மாருதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு மிரட்டல் காாரணமாக நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
அதுபோல நாடு முழுவதும் 30 விமான நிலையங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.