என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 99216
நீங்கள் தேடியது "விமானம்"
கோவையில் தரை இறங்கிய விமானங்கள் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது.
கோவை:
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.
தற்போது கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் இருந்து விமானம் வந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அருகே உள்ள விமான நிலையமான கோவை விமான நிலையத்துக்கு சவுதி அரேபியா விமானம் திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் காலை 7.10 மணிக்கு கோவைக்கு வந்து சேர்ந்தது. இதேபோல கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த 2 விமானங்களும் கோவை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. காலை 7.20, 7.40 மணி என ஒன்றன்பின் ஒன்றாக வந்து தரை இறங்கியது.
பின்னர் கோழிக்கோடு விமான நிலைய பகுதியில் வானிலை சரியானது. இதனையடுத்து கோவையில் தரை இறங்கிய விமானங்கள் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மோசமான வானிலையின்போது கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 19-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.
தற்போது கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் இருந்து விமானம் வந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அருகே உள்ள விமான நிலையமான கோவை விமான நிலையத்துக்கு சவுதி அரேபியா விமானம் திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் காலை 7.10 மணிக்கு கோவைக்கு வந்து சேர்ந்தது. இதேபோல கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த 2 விமானங்களும் கோவை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. காலை 7.20, 7.40 மணி என ஒன்றன்பின் ஒன்றாக வந்து தரை இறங்கியது.
பின்னர் கோழிக்கோடு விமான நிலைய பகுதியில் வானிலை சரியானது. இதனையடுத்து கோவையில் தரை இறங்கிய விமானங்கள் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மோசமான வானிலையின்போது கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 19-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X