search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mirage 2000"

    ராஜஸ்தான் மாநிலம் தாப்ரா கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பாகிஸ்தானில் புகுந்து தாக்கிய மிராஜ் விமானத்தின் பெயரை சூட்டியுள்ளனர். #Miraj2000 #MirajSinghRathore
    ஜோத்பூர்:

    பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

    இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் தாப்ரா கிராமத்தை சேர்ந்த மகாவீர் சிங், சோனம் சிங் தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் அதிகாலை 3.50 மணிக்கு அவர்களுக்கு குழந்தை பிறந்தது. பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய நேரத்தில் பிறந்ததால், குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிட்டுள்ளனர். 
    இந்திய விமான படையின் மிராஜ் போர் விமானங்கள் பாகிஸ்தான் படையை ஏமாற்றி பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தது எப்படி? என்ற விவரம் வெளியாகி உள்ளது. #Mirage2000 #PulwamaAttack #IAFAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்ரவாதிகள் முகாம்களை குண்டுகளை வீசி அழித்தனர்.

    இந்த அதிரடி தாக்குதலுக்கு ‘மிராஜ்-2000’ போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

    பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு, ரேடார்களை ஏமாற்றி விட்டு வெற்றிகரமாக தாக்குதலை மிராஜ்-2000 விமானங்கள் நிறைவேற்றியது. இந்த போர் விமானங்கள் துல்லியமாக தாக்குதலை நடத்தியது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    முதலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு வளையத்தில் குழப்பத்தை உண்டாக்க முடிவு செய்யப்பட்டது அதன்படி இந்தியாவின் மேற்கு-மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு விமானப்படை தளத்தில் போர் விமானங்களும், பிற விமானங்களும் ஒரே நேரத்தில் புறப்பட்டு சென்றன.

    இப்படி ஒரே சமயத்தில் பல விமானங்கள் புறப்பட்டு சென்றதால் அதன் எண்ணம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் குழம்பி விட்டனர்.

    அப்போது பல்வேறு விமானங்களுக்கும் சென்று பறந்து சென்று கொண்டிருந்த மிராஜ் போர் விமானங்கள் உள்ளிட்ட 12 விமானங்கள் மட்டும் தனிக்குழுவாக பிரிந்து பாகிஸ்தானுக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது.

    தீவிரவாதிகள் முகாம்கள் மீது 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசியது. 20 நிமிட தாக்குதலை முடித்து விட்டு வெற்றிகரமாக இந்திய பகுதிக்குள் திரும்பின.

    மிராஜ்-2000 ரக விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இஸ்ரேல் நாட்டிலிருந்து பெறப்பட்ட பி.ஜி.எம். என்ற நவீன குண்டுகள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன.

    மிராஜ் போர் விமானம் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளையும் மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. மேலும் பல்வேறு வகையிலான வெடிகுண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றையும் வீசும் திறன் கொண்டது.



    ‘மிராஜ் 2000’ போர் விமானம் 30 ஆண்டுக்கு முன்பே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. அதன்பிறகு ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தர மேம்பாடு செய்யப்பட்டது.

    அனைத்து சீதோஷ்ண நிலைகள் மற்றும் குறைந்த உயரத்திலும் பறக்க கூடியது. ஒரு நிமிடத்துக்கு 60 ஆயிரம் அடி என்ற வகையில் தரையிலிருந்து வானில் உயரும்.

    இரவிலும் துல்லியமாக பார்க்க வசதி, கூகுள் வசதியுடன் கூடிய காக்பிட் கண்ணாடிகள் மிகவும் முன்னேறிய வழிகாட்டுதல் வசதி என பல நவீன வசதிகளை உள்ளடக்கியது. 14.36 மீட்டர் நீளமுள்ள இந்த விமானம் 7,500 கிலோ எடை கொண்டது. 17 ஆயிரம் கிலோ எடையை தூக்கி செல்லக்கூடியது.

    ரேடார் கருவிகளாலும் மிராஜ் விமானத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாது. இந்த விமானத்தின் தாக்குதல் வெற்றி 100 சதவீதமாகும்.

    இதுபோன்ற காரணங்களால் தாக்குதலுக்கு மிராஜ் விமானங்கள் தேர்வு செய்யப்பட்டன. #Mirage2000 #PulwamaAttack #IAFAttack
    பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை அழிப்பதற்கு மிராஜ்-2000 விமானங்களை தேர்வு செய்தது ஏன் என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. #PulwamaAttack #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    இந்தியாவில் தொடர்ந்து வாலாட்டிக்கொண்டிருந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை நிர்மூலம் ஆக்குவதற்கு 12 ‘மிராஜ்-2000’ விமானங்கள பயன்படுத்தப்பட்டன.

    இதன் பின்னணி குறித்து தெரிய வந்துள்ளது.

    இந்த விமானங்கள் அதிநவீன வசதிகளைக் கொண்ட நான்காம் தலைமுறை விமானம்.

    ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்குகிற பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான், இந்த மிராஜ்-2000 விமானங்களும். இந்தியாவிடம் இந்த விமானங்களின் 3 அணிகள் உள்ளன. அவற்றில் சுமார் 50 விமானங்கள் உள்ளன.

    இவை ஒற்றை என்ஜினை கொண்டவை. இந்த விமானங்கள் அதி நவீனமானவை.

    இவற்றில் இருந்து ஏவுகணைகளை ஏவ முடியும். லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் போட முடியும்.

    இவை, தாக்குதல் இலக்கை மிகத்துல்லியமாக சென்று நிர்மூலம் ஆக்கும் வல்லமை படைத்தவை ஆகும். ஏனென்றால், இந்த விமானங்களில் ‘தேல்ஸ் ஆர்.டி.ஒய். 2’ ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைதான் 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு வழிநடத்தக்கூடியவை. மேலும் நீண்ட தூர இலக்கை குறிவைப்பதிலும் இந்த ‘மிராஜ்-2000’ விமானங்கள் நிபுணத்துவம் பெற்றவை.

    எனவே தான் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விமானங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. ரூ.20 ஆயிரம் கோடியில் தர மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.

    1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில்தான் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.

    இப்போது 48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×