என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான போக்குவரத்து துறை"

    • தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை.
    • இங்கு சர்வதேச விமானங்களின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

    அவரது கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி கிஞ்சராப்பு ராம்மோகன் நாயுடு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை. எனவே, இதை கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையத்தின் மேம்பாட்டுக்காக அரசு குறிப்பாக விமானப் போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தற்போது விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி சர்வதேச விமானங்களின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையத்துக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிர பரிசீலனையில் உள்ளது.

    மதுரை-சென்னை மற்றும் மதுரை-பெங்களூரு விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் நிச்சயம் பேசப்படும். அந்த நிறுவனங்களின் திறனுக்கு உட்பட்டு நிச்சயம் அது அமல்படுத்தப்படும்.

    மதுரை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து இரண்டையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    எங்களைப் பொறுத்தவரை மதுரை விமான நிலையம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான இடம். எனவே, அதை மேம்படுத்தும் நோக்கில் எங்கள் பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று நாடு திரும்பியது.
    • உலகக் கோப்பையுடன் டெல்லி வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படாசில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர். உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசில் ஏற்பட்ட புயல் மழையால் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்துசெய்யப்பட்டது.

    அந்த பயணிகள் விமானம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அழைத்துச் செல்ல பார்படாசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மாற்று விமானம் எதுவும் வழங்கப்படவில்லை என பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை டிஜிசிஏ கோரியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×