என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக- எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை 31ந்தேதி வரை ஒத்திவைப்பு
Byமாலை மலர்28 Dec 2018 6:58 AM GMT (Updated: 28 Dec 2018 6:58 AM GMT)
மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 31-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று கூடியது.
பாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது அ.தி.மு.க., காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் எழுந்து தங்கள் மாநில பிரச்சனைகளை எழுப்பினார்கள்.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்தும், தெலுங்குதேசம் எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டும் கோஷம் எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்கள் ரபேல் போர் விமான பிரச்சனை பற்றி பேசினார்கள்.
இதனால் அமளி ஏற்பட்டதைத்தொடர்ந்து பாராளுமன்றம் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் 31-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. #WinterSession #RajyaSabha #TripleTalaq
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று கூடியது.
பாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது அ.தி.மு.க., காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் எழுந்து தங்கள் மாநில பிரச்சனைகளை எழுப்பினார்கள்.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்தும், தெலுங்குதேசம் எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டும் கோஷம் எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்கள் ரபேல் போர் விமான பிரச்சனை பற்றி பேசினார்கள்.
இதனால் அமளி ஏற்பட்டதைத்தொடர்ந்து பாராளுமன்றம் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் 31-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. #WinterSession #RajyaSabha #TripleTalaq
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X