என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காட்சி தொடங்கியது"

    • இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
    • தேன் சோப்புகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி இன்று காலை தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

    சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிய வடிவமைப்பு ரகங்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்த கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உலகப் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் பட்டு வேட்டிகள், படுக்கை விரிப் புகள், மற்றும் பருத்தி ஆடைகள், நீலகிரி மாவட்டத்தில் தோடர் இனத்தவர் பயன்படுத்தும் ஆடைகள் என விதவிதமான ஆடைகள் கண்காட்சியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சீபுரம், திருபுவனம், ஆரணி, சேலம், ராசிபுரம், திருப்பூர் என கைத்தறி மற்றும் பட்டுக்கு பெயர் பெற்ற பல்வேறு ஊர்களில் இருந்தும் விதவிதமான சேலைகள் பட்டு வேட்டிகள் படுக்கை விரிப்புகள், விரிப் புகள் என விதவித மான அனைத்து வகையான ஆடைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

    கைத்தறி நெசவாளர்களால் வடிவமைக்கப்பட்ட பூம்பட்டு புதுமணப்பட்டு மாங்கல்ய பட்டு, பருத்தி நூலால் செய்யப்பட்ட யோகா விரிப்புகள், தாய் மார்கள் பயன்படுத்தக்கூடிய தாய்-சேய் பெட்டகம் என்று அழைக்கப்படும் சிறப்பு பை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    தாய்-சேய் பெட்டகப்பையில் குழந்தைகளுக்கு தேவையான பால் பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவர்களை வைப்பதற்கு தனித்தனியாக உள்பகுதியில் பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளது.

    பூம்புகார் நிறுவனத்தின் மூலமாக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தேன் சோப்புகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கைத்தறி ரகங்கள் அனைத்துக்கும் 30 சதவீதம் முதல் 50 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதன்மூலம் பெண்கள் தங்களுக்கு பிடித்தமான ஒரிஜினல் பட்டு சேலைகளை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிஜினல் பட்டுச்சேலைகள் ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் ஆயிரம் ரூபாயில் இருந்தும் சேலைகள் கிடைக்கிறது.

    பூம்புகார் நிறுவனம் சார்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரங்கில் ரூ.250-லிருந்து ரூ.12 லட்சம் வரையில் கலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திருவள்ளுவர் சிலை, கலைஞர் கருணாநிதி சிலை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    ஐம்பொன் லட்சுமி சிலை ஒன்று ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் கையில் விளக்குடன் கூடிய ஒரு ஜோடி பாவை விளக்கு ஒன்று ரூ.12 லட்சத்துக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், அரியானா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த கைத்தறி துணி வகைகளும் கண்காட்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர். கண்காட்சியின் முகப்பில் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்த எந்த வகையான சேலைகள் கண்காட்சியில் உள்ளன என்பது பற்றிய தகவல்களும் விரிவாக விளக்கி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை, ஜெயங்கொண்டம், மதுரை, பரமக்குடி, அருப்புக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, வேலூர், கோவை, சேலம் ஆகிய ஊர்களில் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் துணி வகைகள் ஆகியவைகள் பற்றி விரிவான விளக்கங்களுடன் கண்காட்சி பலகை வைத்திருப்பதும் பொது மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.

    தீபாவளியை கருத்தில் கொண்டு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் என்பதால் வரும் நாட்களில் மக்கள் அதிக அளவில் கண்காட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக வார இறுதி விடுமுறை நாட்களான நாளையும் மறுநாளும் கண்காட்சியை பார்வையிட்டு பெண்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 10 நாட்கள் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெற உள்ளது.
    • பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற உள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணி வகுப்பு குறித்து ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது.

    இந்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இன்று முதல் வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெற உள்ளது.

    இந்த புகைப்படக் கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னூர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டு மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற உள்ளன.

    இப்புகைப்படக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் தினமும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளை கொண்டு கலைநிகழ்ச்சிகளும், கலைப்பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×