search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murder threats"

    இளையான்குடி அருகே மணல் அள்ளியதை கண்டித்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி ஒன்றியம் வடக்கு கீரனூர் கிராமத்தில் மணல் அள்ளுவதாக இளையான்குடி தாசில்தார் தமிழரசனுக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவர், வருவாய் ஆய்வாளர் காசியம்மாள், கிராம உதவியாளர் பாலமுருகன் ஆகியோருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது 3 லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் சென்று அதிகாரிகள் விசாரித்த போது, சவடு மண் அள்ள அனுமதி பெற்று, மணல் அள்ளியது தெரியவந்தது. இதை தடுக்க முயன்ற அதிகாரிகளை லாரி டிரைவர்கள் சிவகங்கையை சேர்ந்த சரவணன் (வயது 44), காளையார் கோவிலை சேர்ந்த ஆறுமுகம் (35) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

    இதையடுத்து அதிகாரிகள் இளையான்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் டிரைவர்களை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரும்பச்சேரியை சேர்ந்த ஒப்பந்தகாரர் முருகன், லாரி உரிமையாளர்கள் சிவகங்கையை சேர்ந்த புவியரசன், காளையார்கோவில் காளீஸ்வரன், மானாமதுரை சிங்காரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #tamilnews
    தேனி அருகே பெண் தர மறுத்ததால் விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    தேனி:

    தேனி அருகில் உள்ள ஆதிப்பட்டியை சேர்ந்தவர் கருணைராஜன் (வயது44). இவரது தங்கையை அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (34) என்பவருக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சில வாரங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே கருணைராஜன் தனது தங்கையை அவருக்கு திருமணம் செய்து தர முடியாது என கூறினார்.

    ரஞ்சித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பலமுறை வற்புறுத்தியும் அவர் சம்மதிக்காததால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கருணைராஜன் ஆதிப்பட்டி விநாயகர் கோவில் அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது ரஞ்சித்குமாரும், அவரது தந்தை ரத்தினசாமியும் வழிமறித்து அவரிடம் தகராறு செய்தனர். மேலும் தரக்குறைவாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து பழனி செட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்தனர். #tamilnews
    ×