search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnant woman HIV Blood"

    பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் வழங்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #AnbumaniRamadoss #HIVBlood
    கோவை:

    கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அத்திக்கடவு -அவினாசி திட்டம் 3500 கோடியில் திட்டமிட்டு தற்போது 1500 கோடியாக குறைத்து மாற்று வழியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது சாத்தியமில்லை.

    உயர் மின்னழுத்த கோபுரங்களுக்காக 13 மாவட்ட விவசாயிகள் போராடி வருகிறார்கள். கேரளாவை போல் நிலத்தடியில் கொண்டு செல்லலாம். விவசாயிகளை அழித்து இத்திட்டம் எங்களுக்கு தேவையில்லை.

    விவசாயிகளை அரசு ஏளனமாக பார்க்கிறது. குறைந்த பட்சம் அவர்களிடம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும்.

    மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தால் முல்லை பெரியார், பரம்பிகுளம் ஆகியவை கேரள மாநிலத்திற்கு செல்லும். இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பு தரும். அதனை அனைத்து கட்சிகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.

    மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போது மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். சட்டமன்றம் ஜனவரி முதல் வாரம் கூட இருக்கிறது.

    காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதி என சட்டம் இயற்றி ஜனாதிபதியிடம் கையெழுத்து பெற வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வரவில்லை. 500 கோடி கொடுத்துள்ளது போதவில்லை.

    அவர்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க மறு சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும்.

    என்.எல்.சியில் 12,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது தேவையில்லை. அந்த நிறுவனமே தேவையில்லை. நிலத்தடி நீர் அந்த மாவட்டத்தில் 800 அடியாக குறைந்து விட்டது.

    மக்களுக்கு வேலையில்லாமல் அவர்களுக்கு மட்டும் 3000 கோடி லாபம் வருகிறது. எனவே என்.எல். சி. விரிவாக்கத்தை தடை செய்ய வேண்டும். அந்த பகுதி பாலைவனமாகி விடக்கூடாது.


    ஒரு மருத்துவராக நான் கூற விரும்புவது எச்.ஐ..வி ரத்தம் வழங்கியது மிகப்பெரிய தவறு. அதனை ஏற்க முடியாது. அதற்கு துறை அமைச்சரும் அதிகாரிகளும் தான் பொறுப்பு.

    தமிழக சுகாதார துறை சரியான முறையில் செயல்படவில்லை. இதற்கு பொறுப்பேற்று அமைச்சர்களும் அதிகாரிகளும் பதவி விலக வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை சட்டத்தை மதிக்காமல் செயல்படுகின்றது. தமிழக அரசு அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. எனவே மூத்த வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும்.

    டாஸ்மாக் பிரச்சனைக்கு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்படி வாதிடவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு அல்லது குஜராத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss #HIVBlood

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி மற்றும் தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர்கள் மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர். #HIVBlood
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.

    அப்போது அவருக்கு ரத்தசோகை குறைபாட்டை போக்க சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது.

    ரத்தம் செலுத்திய சில மணி நேரத்திலேயே அந்த பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக விருதுநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் கர்ப்பிணி பெண்ணின் ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் பற்றி அறிந்ததும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாத்தூர், விருதுநகர் வந்து நேரடியாக விசாரணை நடத்தினார்.

    அவரது ஆலோசனையின் பேரில் கர்ப்பிணி பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்ததானம் செய்த வாலிபர், மிரட்டல்கள் காரணமாக தற்கொலைக்கு முயன்றார். அவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் மாதவி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவினர் நேற்று சிவகாசி அரசு ஆஸ்பத்திரி மற்றும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர், ரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் ஊழியர்கள் என 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.

    அந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் பணியில் கவனக்குறைவாக இருந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    கர்ப்பிணி பெண் மற்றும் தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-


    ரத்தம் செலுத்தப்பட்டதால் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி மற்றும் அவருக்கு ரத்ததானம் வழங்கிய வாலிபருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனித்தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேரும் நலமாக உள்ளனர்.

    தொடர் சிகிச்சை காரணமாக எச்.ஐ.வி. நோய் தாக்கிய பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது அதிகரித்துள்ளது. அவருக்கு பிறக்கப்போகும் குழந்தையை எச்.ஐ.வி. பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக முயற்சி செய்து வருகிறோம்.

    பொதுவாக கருவில் இருக்கும் சிசுவுக்கு நோய் பரவாது. ஆனால் பிரசவத்தின் போது குழந்தைக்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் கர்ப்பிணிக்கு தொடர்ச்சியாக தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கர்ப்பிணிக்கு பிரசவம் முடிந்த பின்னரும் பிறக்கும் குழந்தைக்கு 84 நாட்கள் தொடர்ந்து எச்.ஐ.வி. தடுப்பிற்கான சிகிச்சைகள் நீடிக்கும்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கர்ப்பிணியும், தற்கொலைக்கு முயன்ற வாலிபரும் மன உளைச்சலில் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர்கள் மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

    நோய் பாதிப்பில் இருந்து விடுவிக்கும் வகையில் 2 பேரையும் மன ரீதியாக தைரியப்படுத்தி டாக்டர்களின் சிகிச்சையை எதிர்கொள்ள இந்த ஆலோசனை உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HIVBlood #SatturPregnantWoman
    சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பு கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்கள் அம்பலமாகி வருகிறது.#HIVBlood #PregnantWoman
    விருதுநகர்:

    ரத்த தானம் செய்த கமுதியைச் சேர்ந்த வாலிபருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது 2016-ம் ஆண்டே கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவரை உரிய முறையில் மருத்துவத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அறிவுறுத்தவில்லை என்று தெரிய வந்து உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக அந்த வாலிபரும் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியாமலேயே இருந்துள்ளார். இந்த 2 ஆண்டுகளில் அவர் வேறு எப்போதாவது ரத்த தானம் செய்தாரா? என்பது தெரியவில்லை. இதுபற்றிய தகவல்களை மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்ய இயலவில்லை.

    அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காக ரத்த பரிசோதனை செய்த போது தான் அவருக்கே எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் ரத்தம் பரிசோதனை செய்த ரத்த வங்கி ஊழியர்களுக்கு முன்பே இதுபற்றி தெரிந்து இருந்தும் அலட்சியமாக நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இது தவிர சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளும் ரத்தம் செலுத்தும் வி‌ஷயத்தில் சற்று கவன குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. உண்மையில் முதல் தவறு எங்கு நடந்தது என்பதை அறிய தமிழக அரசு 6 பேர் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறது.



    மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் எஸ். மாதவி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் மருத்துவ துறையைச் சேர்ந்த மேலும் 5பேர் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    ஒரு வாரத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஓரிரு நாட்களில் இந்த குழு விசாரணையை முடித்து விடும் என்று தெரிகிறது.

    அதன்பிறகு அந்த குழு பரிந்துரை செய்வதற்கு ஏற்ப தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
    சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றுடன் இருந்த ரத்தத்தை செலுத்திய விவகாரம் தொடர்பாக டாக்டர், நர்சு உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சாத்தூர்:

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக அந்த கர்ப்பிணியும், அவருடைய கணவரும் சாத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதில், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய தினத்தன்று பணியில் இருந்த சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர், செவிலியர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி பணியாளர் ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 269 (கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் செயல்படுத்தல்), 338 (கொடுங்காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் ரத்த தானம் செய்த வாலிபர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #HIVBlood #PregnantWoman
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரின் உறவினர் பெண், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக அந்த வாலிபர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்ததானம் வழங்கினார். ஆனால், அந்த ரத்தம் அவருடைய உறவினர் பெண்ணுக்கு ஏற்றப்படவில்லை. ரத்த வங்கியில் இருந்து கைமாறி சென்ற அந்த ரத்தம்தான் சாத்தூர் ஆஸ்பத்திரியில் 9 மாத கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.

    இந்தநிலையில் வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்ட அந்த வாலிபர், அதற்காக மதுரையில் தனியார் நிறுவனம் மூலம் உடல்-ரத்த பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் சிவகாசி ரத்த வங்கிக்கு சென்று தன்னிடம் எடுக்கப்பட்ட ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என கூறினார். அதற்குள் அந்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ரத்தத்தை ஏற்றியதால் கர்ப்பிணி எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.


    இதுபற்றி அறிந்ததும் விரக்தி அடைந்த அந்த வாலிபர் நேற்று வீட்டில் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #HIVBlood #PregnantWoman 
    ×