search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nlgiris"

    • குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி
    • நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் பங்கேற்பு

    அருவங்காடு,

    குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு- ஜெகதளா இடைேயேயான ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அங்கு அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்தன.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருவங்காடு- ஜெகதளா ரோட்டை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அந்த சாலையை சீரமைக்க தற்போது ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அருவங்காடு- ஜெகதளா ரோட்டில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

    இதற்கான நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், செயற்பொறியாளர் வின்சென்ட், பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணைத்தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாதம் ரூ.500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி,

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்த தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் இதர சுகாதார ஆய்வாளர்களின் நீலகிரி மாவட்ட கூட்டமைப்புக்கான தேர்தல், ஊட்டியில் நடந்தது. இதில் தேர்தல் அலுவலராக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் வேணுகோபால் பணியாற்றினார். ேதர்தலில் தலைவராக கே.டி.மூர்த்தி, செயலாளராக பி.குமாரசாமி, பொருளாளராக ஏ.கார்த்திக், துணைத்தலைவராக ஆர்.சங்கரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த கிரேடு-2 நிலையில் உள்ள சுகாதார ஆய்வாளர்களை கிரேடு-1 ஆக பதவி உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் தினசரி, வாராந்திர, மாதாந்திர அறிக்கைகளை தயார் செய்து அனுப்ப எழுதுபொருள் மற்றும் இதர கட்டணமாக மாதம் ரூ.500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×