என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் பண பரிவர்த்தனை"
- டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் PIN (இரகசிய எண்) மூலம் நிதி மோசடிகள் மற்றும் அருகில் உள்ளவர்களால் திருட்டுத்தனமாக PIN பார்க்கப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதி (Biometric Authentication) அறிமுகப்படுத்தப்படுகிறது.
பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்
இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும். இந்த புதிய முறை இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
- கடந்த 2023-24 நிதியாண்டில் ₹1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது
- 22-23 நிதியாண்டில், 573 கோடி ரூபாய் மதிப்பிலான 7.25 லட்சம் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இன்றைய தினம் மக்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அப்போது ஆன்லைன் யுபிஐ பணப் பரிவர்த்தனை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரை UPI பணப் பரிவர்த்தனையில், 6.32 லட்சம் மோசடிகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்தார்.
அறிக்கைபடி, மோசடிகளில் தொடர்புடைய தொகையின் மதிப்பு ₹458 கோடி ஆகும். கடந்த 2023-24 நிதியாண்டில் ₹1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டில் செப்டம்பர் வரையில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடத்தை விட 85 சதவீதம் மோசடிகள் அதிகம் பதிவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக 22-23 நிதியாண்டில், 573 கோடி ரூபாய் மதிப்பிலான 7.25 லட்சம் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.

UPI பரிவர்த்தனை மோசடிகள் உட்பட, பணம் செலுத்துதல் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆகியவற்றால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில், வாடிக்கையாளர்களின் மொபைல் எண் சரிபார்ப்பு, தினசரி பரிவர்த்தனை வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், NPCI மூலம் மோசடிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக எஸ்எம்எஸ், ரேடியோ பிரச்சாரம், விழிப்புணர்வு பிரச்சாரங்களை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.






