search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sport"

    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின .
    • ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று 15 வயது முதல் 25 வயது வரையிலான மாணவ- மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின .

    முதல் நாளான இன்று ஆண்களுக்கான கைப்பந்து , கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண் .ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி.

    உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், தி.மு.க. பகுதி செயலாளர் சதாசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், விளையாட்டு பயிற்சியாளர் பாபு மற்றும் ஆசிரிய , ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளை பெண்களுக்கான கையுந்து விளையாட்டு போட்டிகள், கால்பந்து போட்டிகள் 26-ந் தேதியும் நடைபெறும்.

    இதேபோல் ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு கையுந்து பந்து விளையாட்டு போட்டிகள் ( ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.15000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    கால்பந்து போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.25000, 2-ம் பரிசாக ரூ.20000, 3-ம் பரிசாக ரூ.10000 வழங்கப்படும். கபடி போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.20000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    • பாஸ்ட் புட் மேற்கத்திய கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ளதால் பல நோய்கள் இளைஞர்களை தாக்குகிறது.
    • ரத்த சோகை, ரத்த அழுத்தம், இருதய நோய் பிரச்சனைகள் சிறுவயதிலேயே வருகிறது.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி கிராமத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி ஒதுக்கீடு செய்த தொகுதி நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து சிறிது நேரம் விளையாடவும் செய்தார்.

    பின்னர் விழாவில் பேசியதாவது:-

    இன்றைய இளைஞர்களுக்கு விளையாட்டு அவசியமானது.

    ரத்த சோகை, ரத்த அழுத்தம், இருதய நோய் பிரச்சனைகள் சிறுவயதிலேயே வருகிறது.

    30 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு என்றால் 55 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு தான் வந்ததாக கேள்விப்பட்டி ருக்கிறோம்.

    ஆனால் இன்று பாஸ்ட் புட் மேற்கத்திய கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ள தால் பல நோய்கள் இளைஞர்களை தாக்குகிறது.

    எந்த ஒரு உடற்பயிற்சியும் விளை யாட்டும் இல்லாமல் நாள் முழுவதும் கம்ப்யூட்டர், கைபேசியை பார்த்துக் கொண்டிருப்பதை மாற்றி அமைக்க அரசும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராம்பிரசாத், திருபுவனம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், துணைத்தலைவர் கமலாசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ம.க.பாலு, சமிம்நிஷா ஷாஜகான், முத்துபீவி ஷாஜகான், பரமேஸ்வரிசரவணன், பா.ம.க மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், மாநில உழவர் பேரியக்க செயலாளர் ஆலயமணி, பா.ம.க முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், கிராம நாட்டான்மைகள் இளங்கோவன், பாலகி ருஷ்ணன், அசோக்குமார், ரமேஷ், பாலகுரு, ராமன், பொறுப்பாளர்கள் சாமிநாதன், வினோத், இளஞ்செழியன், ஒப்பந்த க்காரர் ஞானபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
    • நோக்கு திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு வைக்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நொடக்கப் பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி இயக்கங்கள் இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா பள்ளி தலைமை ஆசிரியர் மதியரசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.

    பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் எழிலாரசி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முருகேசன், சத்தியா, ஜோதிலட்சுமி தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் ஜெயம், அன்னமேரி ஜான்சிலின் வரவேற்றனர்.

    விழாவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்காள் தயாநிதி, நிறைவாணி, உமா, யோகா, அஸியா, சிவசங்கரி, சுவேதா, எழிலாரசி, பத்மா, கயல்விழி, ஆனந்தி, பிரதீபா, ஹேமமாலினி, சுகந்தி, பிரியா, கலைச்செல்வி, பங்கேற்றனர்.

    திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் பிரகாஷ் மேனன், அனுப்பிரியா, பித்தௌஸ் பர்வின், தயாநிதி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித நுணுக்கங்களை விளை யாட்டின் மூலமாகவும், பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாகவும் கற்றுக் கொடுத்தனர்.

    மாண வர்களின் உற்று நோக்குத் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் பொம்மலாட்ட கலைஞர்கள் ஆர்த்தி, ஆஷா, ஹரிணி ஆகியோர் பொம்மலாட்ட கலையை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி மீண்டும் மஞ்சப்பை எனும் கருத்தை அவர்களுக்கு கண் முன் நிறுத்தினார்கள்.

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் நிறைவாணி நன்றி கூறினார். 

    • மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் இணைந்து போட்டியை நடத்தியது.
    • மேலும், அவர் மாணவர்களோடு ேடபிள் டென்னிஸ் விளையாடினார்.

     தஞ்சாவூர்:

    தஞ்சையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டியை நடத்தியது. நிகழ்ச்சியில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஹெர்பர்ட் ஜோன்ஸ் வரவேற்றார்.

    புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெரோம் அடிகளார், மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் செயலர் அண்ணாமலை, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைவர் கிளமெண்ட் அந்தோணிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் மாணவர்களோடு மேபிள் டென்னிஸ் விளையாடினார்.

    இந்த நிகழ்ச்சியை எழுத்தாளர் தஞ்சை ராமதாசு தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் பால்பிண்டோ நன்றி கூறினார்.

    ×