search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா
    X

    அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா

    • பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
    • நோக்கு திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு வைக்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நொடக்கப் பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி இயக்கங்கள் இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா பள்ளி தலைமை ஆசிரியர் மதியரசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.

    பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் எழிலாரசி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முருகேசன், சத்தியா, ஜோதிலட்சுமி தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் ஜெயம், அன்னமேரி ஜான்சிலின் வரவேற்றனர்.

    விழாவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்காள் தயாநிதி, நிறைவாணி, உமா, யோகா, அஸியா, சிவசங்கரி, சுவேதா, எழிலாரசி, பத்மா, கயல்விழி, ஆனந்தி, பிரதீபா, ஹேமமாலினி, சுகந்தி, பிரியா, கலைச்செல்வி, பங்கேற்றனர்.

    திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் பிரகாஷ் மேனன், அனுப்பிரியா, பித்தௌஸ் பர்வின், தயாநிதி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித நுணுக்கங்களை விளை யாட்டின் மூலமாகவும், பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாகவும் கற்றுக் கொடுத்தனர்.

    மாண வர்களின் உற்று நோக்குத் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் பொம்மலாட்ட கலைஞர்கள் ஆர்த்தி, ஆஷா, ஹரிணி ஆகியோர் பொம்மலாட்ட கலையை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி மீண்டும் மஞ்சப்பை எனும் கருத்தை அவர்களுக்கு கண் முன் நிறுத்தினார்கள்.

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் நிறைவாணி நன்றி கூறினார்.

    Next Story
    ×