search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Westbengal"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" - விஷ்வ ஹிந்து பரிஷித்
    • சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி சீதா, அக்பர் சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    இதனையடுத்து, 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    அன்பினால் பெண் சிங்கத்திற்கு சீதா என பெயரிட்டிருப்பார்கள். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது" என நீதிபதி இதற்கு பதில் அளித்தார்.

    இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது" என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு 'சூரஜ்' என்ற பெயரும், சீதா பெண் என்ற சிங்கத்திற்கு 'தயா' என்று புதிய பெயர்களை மேற்கு வங்காள அரசு மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளது

    • 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
    • திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு வேறு பெயர் வைக்குமாறு மேற்கு வங்க அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திரிபுரா மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி சீதா, அக்பர் சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

    • அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு வேறு பெயர் வையுங்கள்
    • "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல"

    அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு வேறு பெயர் வைக்குமாறு மேற்கு வங்க அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    அன்பினால் பெண் சிங்கத்திற்கு சீதா என பெயரிட்டிருப்பார்கள். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது" என நீதிபதி இதற்கு பதில் அளித்தார்.

    இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது" என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி சீதா, அக்பர் சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.

    • "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல"
    • இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது”

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    அன்பினால் பெண் சிங்கத்திற்கு சீதா பெயரிட்டிருப்பார்கள். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது" என நீதிபதி இதற்கு பதில் அளித்தார்.

    இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது" என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    ரிட் மனுவான இதனை பொதுநல வழக்காக மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவு. மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்குப் அக்பர், சீதா என பெயர் சூட்டப்பட்டதா இல்லையா என்பது தொடர்பான அறிவுறுத்தல்களைப் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.

    • திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
    • 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    சிலிகுரி உயிரியல் பூங்காவில் 'சீதா' என்ற பெண் சிங்கம் மற்றும் 'அக்பர்' என்ற ஆண் சிங்கத்தை ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அம்மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு வருகின்ற 20 தேதி விசாரணைக்கு வருகிறது. 

    • மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாக பாஜக விமர்சனம்.
    • மம்தா பானர்ஜி பதில் அளிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    மேதினிபூர்:

    மேற்கு வங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதி அருகே உள்ள பூபதிநகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஓலை கூரையுடன் கூடிய அந்த வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும், அங்கிருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அமைதியாக இருப்பது ஏன் என்றும், அவர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி முதன் முறையாக மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். #Loksabhaelections2019 #SivasenaContestWestbengal
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி, மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும்.



    இது குறித்து சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அசோக் சர்கார் கூறுகையில்,  ‘மேற்கு வங்கத்தில் சிவசேனா சார்பில் போட்டியிடவிருக்கும் 15 வேட்பாளர்களில் 11 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளோம். மீதமுள்ள 4 வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

    மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக தலைமை, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசிடம் போட்டியிட முடியாததால் தான், இந்த தேர்தலில் சிவசேனா தனித்து களமிறங்கியிருக்கிறது. மேலும்  திரிணாமுல் காங்கிரசில் இருந்த ஊழல் கறைப்படிந்த தலைவர்கள் பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ளனர்’ என்றார்.

    மேற்கு வங்கத்தின் தம்லுக், கந்தாய், மித்னாபூர், வடக்கு கொல்கத்தா, பராக்பூர், பங்குரா, பராசாத், பீஷ்னுபூர், வடக்கு மல்டா, ஜதாவ்பூர் ஆகிய தொகுதிகளில் இந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தப்போவதாக சிவசேனா கூறியுள்ளது.

    மித்னாபூர் தொகுதியில், பாஜகவின் மாநில தலைவர் திலீப் கோஷ், மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மானஸ் புனியா ஆகியோரை எதிர்த்து அசோக் சர்கார் போட்டியிடுவதாக தெரிய வந்துள்ளது. #Loksabhaelections2019 #SivasenaContestWestbengal


    பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தை பதற்றம் நிறைந்த தேர்தல் களமாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். #BJP #WestBengalElection
    புதுடெல்லி:

    பாஜக மத்திய மந்திரிகள் ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கொண்ட பாஜக குழு, மத்திய தேர்தல் ஆணையரை இன்று காலை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

    மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றம் நிறைந்த தேர்தல் களமாக அறிவிக்க வேண்டும் எனவும், அனைத்து பூத்களிலும் மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம்.



    சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த  கிராம பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் 100 பேர் பலியாகினர். இதுபோன்ற விபரீதங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை தேவை. ஊடகங்கள் தேர்தல் நேரத்தில் சுதந்திரமாக செயல்படுவது மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களின் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

    1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பள்ளிகள்,  கோவில்கள் அருகே பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுக்கிறார்கள். இது மிகவும் தவறான மற்றும் வருந்தத்தக்க செயலாகும். மேற்கு வங்கத்தில் பல்வேறு கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

    பாராளுமன்ற தேர்தல்  ஜனநாயகத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியது. இந்த தேர்தல் முறைப்படி எவ்வித பாரபட்சமும் இன்றி நடைபெறும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது, மேற்கு வங்கத்தின் பாஜக பொறுப்பாளர்கள் பூபேந்திரா யாதவ், கைலாஷ் விஜயவர்கயா ஆகியோர் உடனிருந்தனர். #BJP #WestBengalElection 
    டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் பலத்த மழைக்கு 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #Duststorm
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இன்று உக்கிரமான வெயில் தாக்கியது. ஆனால் மாலையில் வானிலை முற்றிலுமாக மாறியது.

    மாலையில் மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டன.



    இந்நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயலுக்கு 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    புழுதி புயல் தாக்கியதில் தலைநகர் டெல்லியில் 2 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    இதேபோல், மேற்கு வங்காளத்தில் பெய்து வரும் மழையில் மின்னல் தாக்கியதில் 8 பேர் இறந்தனர். 

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Duststorm #tamilnews
    ×