search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gujarat govt"

    • குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
    • கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார்

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது. ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்" என உத்தரவிட்டது.

    இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர்.

    இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான, ரமேஷ் பாய் சந்தனா, மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் தனது சகோதரியின் மகன் திருமணத்தில் பங்கேற்க வசதியாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் 10 நாட்கள் பரோல் கேட்டு கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், இன்று அவருக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார். பிரதீப் மோதியா என்ற குற்றவாளி, கடந்த பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது. ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அத்தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், குஜராத் அரசு குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் தேவையற்றவையாகும். மேலும் அவை குஜராத் அரசு மீது தப்பெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதில் இருந்து ஆஸ்திரேலியா பின் வாங்கியது.
    • 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடத்த குஜராத் அரசு ஆர்வமாக இருக்கிறது.

    காந்திநகர்:

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது.

    23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு மார்ச் 17 முதல் 29-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் காமன் வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதில் இருந்து ஆஸ்திரேலியா பின் வாங்கியது. போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விக்டோரியா மாகாணம் திடீரென விலகியது. போட்டியை நடத்த திட்டமிட்ட தொகையை விட அதிகமாக செலவாகும் என்பதால் இந்த முடிவை எடுத்தது.

    இதனால் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் கடும் அதிர்ச்சி அடைந்தது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடத்த குஜராத் அரசு ஆர்வமாக இருக்கிறது. அகமதாபாத் நகரில் போட்டியை நடத்துவதற்காக ஏலத்தில் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இதற்கான ஏற்பாடுகளை குஜராத் அரசு செய்யும்.

    2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உள்கட்டமைப்புகள் அகமதாபாத்தில் செயல்பட்டு வருகின்றன.

    இதனால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தி விடலாம் என்பதில் அம்மாநில அரசு தீவிரமாக உள்ளது.

    குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கலவரத்தின்போது கொடூரமாக கற்பழிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும் அரசுப் பணியும் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. #SC
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது ஆமதாபாத் பகுதியை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 10–க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இவ்விவகாரத்தில் குஜராத் மாநில அரசு வழங்கிய நிதியுதவி ரூ. 5 லட்சத்தை ஏற்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு சென்று கூடுதல் நிவாரணம் கோரினார்.


    இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு,  குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மீது இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. #SC
    ×