search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron Man"

    • ஆணழகன் போட்டியிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் போட்டியிலும் திருவாரூர் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மன்னார்குடியை சேர்ந்த வீரர்கள் விமல்ராஜ், சசிகுமார், விஜயகுமார், சுதர்சன், சமிர் அஹமது வீரவேல், சக்திவேல் மற்றும் பலர் சாதனை படைத்தனர்.
    • வலுதூக்கும் போட்டியில் மன்னார்குடி வீரர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

    மன்னார்குடி:

    மாநில அளவில் பழனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் போட்டியிலும் திருவாரூர் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மன்னார்குடியை சேர்ந்த வீரர்கள் விமல்ராஜ், சசிகுமார், விஜயகுமார், சுதர்சன், சமிர் அஹமது வீரவேல், சக்திவேல் மற்றும் பலர் சாதனை படைத்தனர். முகிலன் என்பவர் இரும்பு மனிதன் என்ற சிறப்பு பட்டம் வென்றார்.

    சாதனை படைத்தவர்கள் திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் -பிட்னஸ் சங்கத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான டாக்டர் மன்னார்குடி அசோக்கு மார், செயலாளர் ரத்தி னபாலன், பொருளாளர் விஜய்ஜேசி, மண்டலத் தலைவர் என்.எஸ்.அசோக்குமார், என். எஸ். பாலசுப்ரமணியம், எஸ்.ராமதாஸ், உலக வலுதூக்கும் வீரர் சி.விமல்ராஜா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் சங்கத்தின் தலைவர் டாக்டர் மன்னார்குடி அசோக் குமார் வீரர்களை பாராட்டி பரிசளித்தார்.

    சர்தார் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் படேல் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். #SardarVallabhbhaiPatel
    இந்தியாவின் ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள படேல் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வல்லபாய் படேல் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டுள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 



    நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. 



    படேல் சுதந்திர இந்தியாவின் முதலாவது துணைப் பிரதம அமைச்சராகவும், முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் படேல் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SardarVallabhbhaiPatel #StatueOfUnity

    ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதை போன்ற ஐயன் மேன் சூட் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #IronMan #JetPack


    ஹாலிவுட் சினிமாவின் கற்பனை கதாபாத்திரமான ஐயன் மேன் மார்வெல் காமிக் புத்தகங்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து வருகிறது. 

    திரைப்படம் மற்றும் காமிக் புத்தகங்களின் படி பணக்கார வியாபாரி ஒருவர் அதிநவீன சூட் ஒன்றை உருவக்கி உலகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் ஐயன் மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    உலக பிரபலமாக இருக்கும் ஐயன் மேன் கதாபாத்திரத்தை தழுவிய நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய ஐயன் மேன் போன்ற சூட் ஒன்றை வியாபாரி ஒருவர் உருவாக்கி இருக்கிறார். ரிச்சர்டு பிரவுனிங் எனும் தொழிலதிபர் ஐயன் மேன் போன்று இயங்கும் சூட் ஒன்றை உருவாக்கியதை நாம் அறிந்திருப்போம். 

    இந்த உடை தற்சமயம் லண்டனில் விற்பனைக்கு வந்திருக்கிறது. லண்டனில் இயங்கி வரும் விற்பனையகத்தில் இந்த உடையின் விலை 3,40,000 பவுன்ட்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,04,76,290) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏழு சூட் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கிறது. 3D ப்ரின்ட் செய்யப்பட்ட பாகங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் கொண்ட சூட் மொத்த எடை 27 கிலோ ஆகும்.

    ஜெட் ஃபியூயல் அல்லது டீசல் மூலம் இயங்கும் இந்த பறக்கும் சூட் மணிக்கு 32 மைல் (51 கிலோமீட்டர்) வேகத்தில் செல்லும். வானில் அதிகபட்சம் 12,000 அடி வரை பறக்கும் திறன் கொண்டிருக்கிறது. எனினும் ரிச்சர்ட் பிரவுனிங் பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் இருந்து சில மீட்டர்கள் உயரத்தில் பயன்படுத்துகிறார்.



    கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை துவங்கி, மனிதர்களை காற்றில் பறக்கச் செய்யும் உடையை ரிச்சர்ட் கண்டறிந்தார். திரைப்படங்களில் வருமளவு அதிநவீன வசதிகள் இன்றி, இன்றைய காலத்துக்கு ஏற்ப முதற்கட்டமாக மனிதர்களை காற்றில் பறக்க வைக்கும் திறனை இவர் கண்டறிந்து இருக்கும் சூட் வழங்குகிறது.

    டேடுலஸ் மார்க் 1 (Daedalus Mark 1) என பெயரிடப்பட்டிருக்கும் இவரது ஐயன் மேன் போன்ற சூட் ஆறு மினியச்சர் ஜெட் இன்ஜின்களை கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின்கள் மனிதர்களை செங்குத்தாக காற்றில் பறக்க வைக்கிறது. இவர் தனது சூட்டில் பொருத்தியிருக்கும் இன்ஜின்களின் மொத்த செயல்திறன் 1,001 ஹெச்பி என கணக்கிடப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் இவரது சூட் புகாட்டி வெரான் மாடல் காரில் உள்ளதற்கு இணையான செயல்திறன் வழங்குகிறது. சூட் பறக்கும் வேகம், திசை உள்ளிட்டவற்றை கைகளாலேயே கட்டுப்படுத்த முடியும் என்றும், எரிபொருள் பயன்பாடு மற்றும் இதர தகவல்கள் இவரது ஹெல்மெட் திரையில் தோன்றுகிறது. 

    உலகில் அதிவேகமாக செல்லும் திறன் படைத்த ஜெட் இன்ஜின் கொண்ட சூட் என கின்னஸ் சாதனை படைத்திருக்கும் டேடுலஸ் மார்க் 1 மணிக்கு 51.53 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக சான்று அளிக்கப்பட்டு இருக்கிறது. 

    எனினும் இவரது பறக்கும் சூட் மணிக்கு அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் ஆயிரம் அடிகளுக்கு கீழ் தொடர்ச்சியாக பத்து நிமிடங்களுக்கு பறக்க முடியும் என ரிச்சர்டு பிரவுனிங் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வேகம் மற்றும் பறக்கும் உயரம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    டேடுலஸ் மார்க் 1 பறக்கும் சூட் HUD சிஸ்டம் பயன்படுத்துகிறது, இதில் சோனி ஸ்மார்ட் ரிளாஸ் டெவலப்பர் எடிஷன் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் வைபை டேட்டா லின்கேஜ் சிஸ்டம் ஃபிளைட் சூட்டில் இருந்து கிரவுன்ட மானிட்டரிங்-க்கு லைவ் ஸ்ட்ரீம் செய்கிறது. மெடிக்கல் பபுள் டெடக்டர்கள் ஃபெயில்-சேஃப் ஃபியூயல் அலெர்ட் செய்கிறது. இதன் ஏர்பேக் சிஸ்டம் மோட்டார்சைக்கிள் ஏர்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
    புகாட்டி வெரான் மாடல் காரில் உள்ளதை போன்ற செயல்திறன் கொண்ட பறக்கும் சூட் ஒன்றை கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் கண்டறிந்திருக்கிறார்.
    புதுடெல்லி:

    ஹாலிவுட் சினிமாவின் கற்பனை கதாபாத்திரமான ஐயன் மேன் மார்வெல் காமிக் புத்தகங்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து உலக பிரபலமாக இருக்கிறது.

    திரைப்படம் மற்றும் காமிக் புத்தகங்களின் படி பணக்கார வியாபாரி ஒருவர் அதிநவீன சூட் ஒன்றை உருவாக்கி உலகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் ஐயன் மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கற்பனை கதாபாத்திரம் என்ற வகையில் ஐயன் மேன் முற்றிலும் கற்பனையானவர் என எண்ணிவிட வேண்டாம்.

    உண்மையில் ரிச்சர்டு பிரவுனிங் எனும் தொழிலதிபர் ஐயன் மேன் போன்று இயங்கும் சூட் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை துவங்கி, மனிதர்களை காற்றில் பறக்கச் செய்யும் உடையை ரிச்சர்ட் உருவாக்குகிறார். திரைப்படங்களில் வருமளவு அதிநவீன வசதிகள் இன்றி, இன்றைய காலத்துக்கு ஏற்ப முதற்கட்டமாக மனிதர்களை காற்றில் பறக்க வைக்கும் திறனை இவரது சூட் வழங்குகிறது.



    டேடுலஸ் மார்க் 1 (Daedalus Mark 1) என பெயரிடப்பட்டிருக்கும் இவரது ஐயன் மேன் போன்ற சூட் ஆறு மினியச்சர் ஜெட் இன்ஜின்களை கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின்கள் மனிதர்களை செங்குத்தாக காற்றில் பறக்க வைக்கிறது. இவர் தனது சூட்டில் பொருத்தியிருக்கும் இன்ஜின்களின் மொத்த செயல்திறன் 1,001 ஹெச்பி என கணக்கிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இவரது சூட் புகாட்டி வெரான் மாடல் காரில் உள்ளதற்கு இணையான செயல்திறன் வழங்குகிறது. சூட் பறக்கும் வேகம், திசை உள்ளிட்டவற்றை கைகளாலேயே கட்டுப்படுத்த முடியும் என்றும், எரிபொருள் பயன்பாடு மற்றும் இதர தகவல்கள் இவரது ஹெல்மெட் திரையில் தோன்றுகிறது.

    உலகில் அதிவேகமாக செல்லும் திறன் படைத்த ஜெட் இன்ஜின் கொண்ட சூட் என கின்னஸ் சாதனை படைத்திருக்கும் டேடுலஸ் மார்க் 1 மணிக்கு 51.53 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக சான்று அளிக்கப்பட்டு இருக்கிறது.



    எனினும் இவரது பறக்கும் சூட் மணிக்கு அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் ஆயிரம் அடிகளுக்கு கீழ் தொடர்ச்சியாக பத்து நிமிடங்களுக்கு பறக்க முடியும் என ரிச்சர்டு பிரவுனிங் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வேகம் மற்றும் பறக்கும் உயரம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    டேடுலஸ் மார்க் 1 பறக்கும் சூட் HUD சிஸ்டம் பயன்படுத்துகிறது, இதில் சோனி ஸ்மார்ட் ரிளாஸ் டெவலப்பர் எடிஷன் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் வைபை டேட்டா லின்கேஜ் சிஸ்டம் ஃபிளைட் சூட்டில் இருந்து கிரவுன்ட மானிட்டரிங்-க்கு லைவ் ஸ்ட்ரீம் செய்கிறது. மெடிக்கல் பபுள் டெடக்டர்கள் ஃபெயில்-சேஃப் ஃபியூயல் அலெர்ட் செய்கிறது. இதன் ஏர்பேக் சிஸ்டம் மோட்டார்சைக்கிள் ஏர்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

    டேடுலஸ் மார்க் 1 பறக்கும் சூட் விளக்க வீடியோவை கீழே காணலாம்..,
    ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ‘அயன்மேன்’ அணிந்திருந்த உடை திருடப்பட்டிருக்கிறது.
    ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது ‘அயன்மேன்.’ இந்த படத்துக்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட அயன்மேன் உடை குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்து போனது. அந்த உடையை அணிந்து அயன்மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டோவ்னி ஜூனியர் நடித்து இருந்தார். ஜோன் பேவ்ரியூ இயக்கினார்.

    2008-ல் வெளியான இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. தொடர்ந்து அயன்மேன் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி அதுவும் வசூலில் சக்கை போடு போட்டது. முதல் பாகத்தில் அயன்மேன் அணிந்திருந்த உடையை அமெரிக்காவில் உள்ள திரைப்பட பொருட்களை பாதுகாக்கும் மையத்தில் பத்திரப்படுத்தி வைத்து இருந்தனர்.



    அந்த உடை இப்போது திடீரென்று காணவில்லை. இது படக்குழுவினருக்கும் அயன்மேன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயமான உடையின் இந்திய மதிப்பு ரூ.2 கோடியே 60 லட்சம் ஆகும். இந்த உடையை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ×