என் மலர்
நீங்கள் தேடியது "PBKSvRR"
- நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
- இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது சஞ்சு சாம்சன் கோபத்தில் "பேட்"டை தூக்கிப்போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சண்டிகர்:
ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ரியான் பராக் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 30 ரன்னில் அவுட்டானார். 5வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்களைக் குவித்தது.
சண்டிகர்:
ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது அந்த அணியின் டிரஸ்சிங் ரூமில் ஜோப்ரா ஆர்ச்சர் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. முதல் ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் விசினார்.
முதல் ஓவரின் முதல் பந்தில் பிரியான்ஷு ஆர்யாவை டக் அவுட்டாக்கினார். தொடர்ந்து கடைசி பந்தில் ஷ்ரேயஸ் ஐயரை 10 ரன்னில் அவுட்டாக்கினார். ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதைக் கண்ட நெட்டிசன்கள், தூக்கம் முக்கியமுங்கோ... ஜோப்ரா ஆர்ச்சர் இதற்காகத்தான் குட்டித்தூக்கம் போட்டாரோ என இந்தப்ப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
- பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை சாம் கர்ரன் எடுத்துள்ளார்.
- ராஜஸ்தான் ஐந்தில் நான்கில் வெற்றி பெற்று 5-வது வெற்றியை பதிவு செய்யும் வகையில் களம் காண்கிறது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டம் இன்று சண்டிகரில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் அணியில் இன்று அந்த அணியின் கேப்டன் தவான் களம் இறங்கவில்லை. அதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் 5-ல் இரண்டு வெற்றிகளுடன் 8-வது இடத்தை பெற்றுள்ளது.
- ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும் அடித்தனர்.
- இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் தவான் விளையாடவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வை செய்தார். அதன்படி பஞ்சாப் அணியின் அதர்வா தைடே, பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதர்வா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்.
பவர் பிளேயில் பஞ்சாப் அணி 38 ரன்கள் எடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 14 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பேர்ஸ்டோ 19 பந்தில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி சரிவை நோக்கிச் சென்றது.
கேப்டன் சாம் கர்ரன் 10 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 120 ரன்னை தாண்டுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும், இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தில் ஹெட்மையர் ரன் எடுக்கவில்லை.
- 3-வது மற்றும் 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.
பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஜித்தேஷ் சர்மா (24 பந்தில் 29 ரன்), லிவிங்ஸ்டன் (14 பந்தில் 21 ரன்), இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா (16 பந்தில் 31 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக விளையாடினார். அதேசமயம் ரபடா அபாரமாக பந்து வீச ராஜஸ்தான் அணியால் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆகவே, தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்து கொண்டே சென்றது.
பவர் பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 9-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. கோட்டியன் 31 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. சாம்சன் 14 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 6 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. 15 மற்றும் 16-வது ஓவரில்களில் முறையே 9 மற்றும் 6 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் ரியான் பராக் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.
கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் ஜுரேல் 11 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 17.2 ஓவரில் 115 ரன்கள் எடுத்து நெருக்கடிக்கு உள்ளாகியது.
16 பந்துக்கு 33 ரன்கள் என்ற நிலையில் ஹெட்மையர் உடன் ரோவன் பொவேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹெட்மையர் பவுண்டரிக்கு விரட்டியதுடன், கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். இதனால் 18-வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.
கடைசி இரண்டு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பொவோல் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 9 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி 3 பந்தில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ராஜஸ்தான் 19-வது ஓவரில் 10 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்ஷ்தீப் பந்து வீச ஹெட்மையர் எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளில் ஹெட்மையர் ரன்ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ஹெட்மையர்.
இதனால் கடைசி 3 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் 2 ரன் அடித்த ஹெட்மையர் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.5 ஓவரில் 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






