என் மலர்
நீங்கள் தேடியது "SLvENG"
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 189 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து டக் வொர்த் லூயிஸ் முறையில் 173 ரன் எடுத்து வென்றது.
பல்லேகலே:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்
தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது.
பவன் ரத்தினநாயகெ 40 ரன்னும், கமில் மிஸ்ரா 36 ரன்னும், பதும் நிசங்கா 34 ரன்னும், குசால் மெண்டிஸ் 32 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
டக்வொர்த் லெவிஸ் முறைப்படி 17 ஓவரில் 168 ரன்கள் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். சிறப்பாக ஆடிய டாம் பெண்டன் அரை சதம் கடந்து 54 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 34 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், இங்கிலாந்து 16.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வென்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 16.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 11 ரன் வித்தியாசத்தில் வென்றது.
பல்லேகலே:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்
தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 16.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 37 ரன்னும், பதும் நிசங்கா 23 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், சாம் கர்ரன் தலா 3 விக்கெட்டும், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 46 ரன்னில் அவுட்டானார். டாம் பெண்டன் 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 15 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 219 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் அசத்தலான ஆட்டத்தால் வெற்றி பெற்றது.
கொழும்பு:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரித் அசலங்கா 45 ரன்னும், தனஞ்செய டி சில்வா 40 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், ஜோ ரூட், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 75 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 42 ரன்னும், பென் டக்கெட் 39 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து 46.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.
இலங்கை அணி சார்பில் தனஞ்செய டி சில்வா, ஜெப்ரி வாண்டர்சே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஜோ ரூட்டுக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 271 ரன்கள் எடுத்தது.
- குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 93 ரன் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
கொழும்பு:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்
தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 93 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஜனித் லியாங்கே 46 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட்டுடன் ஜோ ரூட் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர்.
2வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 62 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 61 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜேமி ஓவர்டன் 17 பந்தில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து 49.2 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷான் 3 விக்கெட்டும், துனித் வெல்லாலகே, ஜெப்ரி வாண்டர்சே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது துனித் வெல்லாலகேவுக்கு அளிக்கப்பட்டது.
இந்த தொடரில் அறிமுகமான விக்கெட் கீப்பர் பென் போக்ஸ், சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, லீச் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். பென் போக்ஸ் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்த தொடரில் கடைசி டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து 3-0 என தொடரை கைப்பற்றியதில் பென் ஸ்டோக்ஸிற்கும் பங்கு உண்டு என்றால் அதை மிகையாகாது.
ஆனால் ‘உணவு மீதான அலங்காரம்தான்’ என்று கிரிக்கெட் வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மஞ்ச்ரேக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சமையல் கலைஞர்கள் ஒன்றுகூடி கடுமையாக உழைத்து உணவு தயாரி்த்து இருக்கிறார்கள். ஆனால் உணவிற்கு மேல் அலங்காரத்திற்காக வைக்கப்படும் பொருள் பெயரை தட்டிச் சென்றுவிடும். அதேபோல் அனைத்து புகழையும் நீங்கள் பெறுகிறீர்கள். மொயீன் அலி, லீச், போக்ஸ் மோசமான கலைஞர்கள். ஸ்டோக்ஸ் அலங்கார பொருள் (Garnish)’’ என்று பதிவிட்டிருந்தார்.So you have these hardworking chefs who have made a great dish. Someone comes and puts a little garnish on top and he gets all the credit. Moeen, Leach, Foakes are those poor chefs and Stokes the one with the garnish.
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) November 28, 2018
இதை ஒரு பத்திரிகையாளர் பென் ஸ்டோக்ஸிற்கு சுட்டிக்காட்டிருந்தார். அதற்கு பென் ஸ்டோக்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாங்கள் தனிப்பட்ட புகழைப் பற்றி கவலைக் கொள்வது கிடையாது. எந்தவகையான உணவாக இருந்தாலும் ‘கார்னிஷ்’ என்பது அர்த்தமற்றது. நாங்கள் வெற்றியை பற்றிதான் கவலைப்படுவோம். கிரிக்கெட் டீம் விளையாட்டு. நாங்கள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளோம். சியர்ஸ் சஞ்சய்’’ என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
We don’t care about personal credit,and garnish is pointless on all food anyways,we care about winning,it’s a team sport and we won as a team #3-0 Cheers Sanjay 💤 https://t.co/4oVhPVm1d5
— Ben Stokes (@benstokes38) November 28, 2018
முதல் இரண்டு போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள்தான் அசத்தினார்கள்.
கொழும்பு டெஸ்டிற்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில்தான் தயார் செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டர்சனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் குர்ரானுக்குப் பதில் பேர்ஸ்டோவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
301 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து இருந்தது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 75 ரன் தேவை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.
மேலும் 17 ரன் எடுப்பதற்குள் அந்த அணி எஞ்சிய 3 விக்கெட்டையும் எளிதில் இழந்தது. இலங்கை அணி 243 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் அதிகபட்சமாக 88 ரன் எடுத்தார். ஜேக் லீக் 5 விக்கெட்டும், மொயீன் அலி 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது சோகமே. ஏற்கனவே ஒரு நாள் தொடரையும் 1-3 என்ற கணக்கில் இழந்து இருந்தது. மேலும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது.
இரு அணிகளும் மோதும் 3-ம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி கொழும்பில் தொடங்குகிறது.
இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவதற்கு ஒரு ஓவர் மட்டுமே இருந்ததால் ஜேக் லீச் தொடக்க வீரராக ரோரி பேர்ன்ஸ் உடன் களம் இறங்கினார்.
நேற்றைய 2-வது நாளில் இங்கிலாந்து ரன்ஏதும் எடுக்கவில்லை. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லீச் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோரி பேர்ன்ஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஜென்னிங்ஸ் 26 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 146 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (0), ஜோஸ் பட்லர் (34), மொயீன் அலி (10), சாம் குர்ரான் (0), அடில் ரஷித் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தனஞ்ஜெயா
விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து 76 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. பென் போக்ஸ் 51 ரன்னுடனும், ஆண்டர்சன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து தற்போது வரை 278 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 22 ரன்கள் அடித்தால் 300 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயித்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 19 ரன்னுடனும், புஷ்பகுமாரா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஷ்பகுமாரா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருணாரத்னே உடன் தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. கருணாரத்னே 63 ரன்னிலும், டி சில்வா 59 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் மெண்டிஸ் 1 ரன்னிலும், மேத்யூஸ் 20 ரன்னிலும் வெளியேறினார்கள். 7-வது வீரராக களம் இறங்கிய ரோஷென் சில்வா 85 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 103 ஓவரில் 336 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. லீச் மற்றும் ரஷித் தலா மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.
46 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்று ஒரேயொரு ஓவர் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து ரன் கணக்கையும் துவக்கவில்லை. விக்கெட்டும் இழக்கவில்லை.
3 போட்டிகள் கொண்ட டிடெஸ்ட் தொடரில் கொழும்பில் நடந்த முதல் டெஸ்டிலும் இங்கிலாந்து 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பல்லேகெலேயில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இலங்கை அணி பதிலடி கொடுத்து சமன் செய்யும் வேட்கையில் உள்ளது. அந்த அணி கேப்டன் சன்டிமால் காயத்தால் இதில் ஆடவில்லை.
காயத்தில் இருக்கும் பேர்ஸ்டோவ் 2-வது போட்டிக்கான இங்கிலாந்து அணிக்கு திரும்பினால், பென் போக்ஸிற்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பேர்ஸ்டோவ் நாளை பல்லேகெலேயில் தொடங்கும் 2-வது போட்டியில் களம் இறங்கமாட்டார் என்றும், பென் ஸ்டோக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொயீன் அலி 3-வது வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்து வந்தார். ஆனால் எதிர்பார்த்த வகையில் அவர் விளையாடவில்லை. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோ பட்லரை 3-வது வீரராக களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஜோ பட்லர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்டில் இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் செய்யும்போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இரண்டு வாரம் என்பதால் 23-ந்தேதி கொழும்பில் தொடங்கும் 3-வது போட்டியிலும் பங்கேற்பாரா? என்ற சந்தேகமே.

சரித் அசாலங்கா
சண்டிமலுக்குப் பதிலாக புதுமுக வீரர் சரித் அசாலங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ரோஷன் சில்வாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.






