என் மலர்
நீங்கள் தேடியது "ICC Awards"
- ஐசிசி ஆண்கள் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதுக்கு, சுப்மன் கில்- ஜோ ரூட், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
- இந்த விருதை இதுவரை 5 இந்தியர்கள் வென்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் ஐசிசி ஆஸ்கார்கள் வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. மிக முக்கியமான விருதுகளான இந்த விழா இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளன. இதில் மிகவும் புகழ்பெற்ற சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் டிராஃபி (Sir Garfield Sobers Trophy) என்ற ஐசிசி ஆண்கள் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதுக்கு, இந்தியாவின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் பேட்டர் ஜோ ரூட், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இந்த விருது, ஒரு ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதை இதுவரை 5 இந்தியர்கள் வென்றுள்ளனர். அதில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி (இருமுறை), பும்ரா ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர். சுப்மன் கில் வென்றால், 6-வது இந்திய வீரராவார்.
இந்திய அணியின் தலைவராக, 2025-ல் அனைத்து வடிவங்களிலும் அசாதாரணமான பேட்டிங் செயல்திறனை காட்டியுள்ளார். குறிப்பாக ஒருநாள் தொடர்களில் அதிக ரன்கள் அடித்து, அணியை வழிநடத்தியது அவரது பலம். அவர் இந்த விருதுக்கு இந்தியர்களில் முதல் தேர்வாக உள்ளார்.
இங்கிலாந்தின் மூத்த பேட்ஸ்மேனாக ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் (குறிப்பாக ஆஷஸ் தொடர்) சதங்களைத் தொடர்ந்து அடித்து, அணியின் முதுகெலும்பாக இருந்தார். அவரது நிலையான செயல்திறன் அவரை இரண்டாவது முன்னிலை வீரராக்குகிறது. ஆஷஸ் தொடரில் மேலும் ரன்கள் சேர்த்தால், அவரது வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தற்போதைய நிலவரப்படி, சுப்மன் கில் இந்த விருதை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவரது அணி தலைமைப் பொறுப்பும், பல்வேறு வடிவங்களில் சமநிலை காட்டியதும் காரணம். ஜோ ரூட், டெஸ்ட் அளவில் சிறப்பாக இருந்தாலும், ஒருநாள், டி20-யில் குறைந்த பங்களிப்பு அவருக்கு சவாலாக இருக்கும்.
விருது வழங்கல் விழா, 2025 டிசம்பர் அல்லது 2026 ஜனவரியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்தாண்டு பும்ராவுக்கு சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருது அறிவிக்கப்பட்டது.
- கடந்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார்.
கடந்தாண்டு மிக சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதற்காக பும்ராவுக்கு சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருது அறிவிக்கப்பட்டது.
மேலும், ஐசிசி தேர்வு செய்த கடந்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுகளுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா இருக்கும் புகைப்படத்தை ஐசிசி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியின் தொப்பியின் முன்பு பும்ரா சிரித்தபடியாக உள்ளார்.
அதேபோல் 2018-ல் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இரண்டு அணிக்கும் விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2018-ம் ஆண்டின் ஐசிசி டெஸ்ட் அணி (பேட்டிங் வரிசைப்படி):-
டாம் லாதம் (நியூசிலாந்து), கருணாரத்னே (இலங்கை), வில்லியம்சன் (நியூசிலாந்து), விராட் கோலி (இந்தியா- கேப்டன்), நிக்கோல்ஸ் (நியூசிலாந்து), ரிசப் பந்த் (இந்தியா- விக்கெட் கீப்பர்), ஹோல்டர் (வெஸ்ட்இண்டீஸ்), ரபாடா (தென்ஆப்பிரிக்கா), நாதன் லயன் (ஆஸ்திரேலியா), பும்ரா (இந்தியா), முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்).

ஐசிசி ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (இந்தியா), பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து), விராட் கோலி (இந்தியா-கேப்டன்). ஜோ ரூட் (இங்கிலாந்து), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து). பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (இருவரும் இங்கிலாந்து), முஷ்டாபிஜூர் ரஹ்மான் (வங்காள தேசம்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ், பும்ரா (இந்தியா).
விராட் கோலியை போலவே பும்ராவும் இரு அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஐசிசி-யின் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனை ஆகிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே ஹீலி சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.






