என் மலர்
நீங்கள் தேடியது "Urvil Patel"
- சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
- ஐதராபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த போட்டியில் சர்வீசஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய சர்வீசஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய குஜராத் அணி 12.3 ஓவரில் வெற்றி இலக்கை விரட்டிப் பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் உர்வில் படேல் 37 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர் ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் 31 பந்தில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் மீண்டும் இணைந்துள்ளார்.
ஏற்கனவே 28 பந்தில் அவர் சதமடித்து அந்தப் பட்டியலில் அபிஷேக் சர்மாவுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது 31 பந்துகளில் சதமடித்து 2வது இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்தில் உர்வில் படேல் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடர் கிட்டதட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் முதல் இடத்தில் ஆர்சிபி அணியும் கடைசி இடத்தில் சென்னை அணியும் உள்ளது.
கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை அணி அடுத்த போட்டியில் நாளை மறுநாள் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது .
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் வான்ஷ் பேடி ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். இடது கணுக்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக விலகியுள்ள வான்ஷ் பேடிக்கு பதிலாக உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

உர்வில் படேல்- வான்ஷ் பேடி
உர்வில் படேல், சையத் முஷ்டாக் அலி டிராபியில் திரிபுராவுக்கு எதிராக வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியரின் வேகமான டி20 சதத்தை குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்டர் உர்வில் பதிவு செய்தார்.
அவர் 47 டி20 போட்டிகளில் விளையாடி 1162 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியில் இணைவார்.
- குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ஊர்வில் படேல் படைத்துள்ளார்.
- 2018-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் 32 பந்தில் சதம் விளாசினார்.
சையது முஷ்டாக் டிராபி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் நாக்வாஸ்வல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யா தேசாய்- ஊர்வில் படேல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டிய ஊர்வில் படேல் 28 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் குஜராத் அணி 10.2 ஓவரில் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஊர்வில் படேல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 113 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 12 சிக்சர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் 32 பந்தில் சதம் விளாசினார். அதனை தற்போது ஊர்வில் முறியடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஊர்வில் படேலை எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






