search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selection committee"

    • சேலம் மாவட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய ஏற்கனவே எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 311 பேர் தேர்வாகினர்.
    • தொடர்ந்து அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நாளை (7-ந் தேதி), நாளை மறுநாள் (8-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

    சேலம்:

    போலீஸ் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய ஏற்கனவே எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 311 பேர் தேர்வாகினர்.

    உடல் தகுதி தேர்வு

    தொடர்ந்து அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நாளை (7-ந் தேதி), நாளை மறுநாள் (8-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி அவர்களுக்கு அழைப்பு கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

    இந்த உடல் தகுதி தேர்வில் 2 நாட்களும் சேர்த்து மொத்தம் 311 பெண்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், வட்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆலோசனை

    இந்த நிலையில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் உடல் தகுதி தேர்வுக்கு வருபவர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக எந்த இளம் வீரரையும் கேப்டனாக செயலாற்றும் அளவிற்கு உருவாக்கவில்லை.
    • ஐ.பி.எல். மூலமாகவும், தொலைக்காட்சி உரிமம் மூலமாகவும் கோடிகளை குவிப்பது மட்டுமே சாதனையல்ல.

    மும்பை:

    லண்டன் ஓவல் மைதானத்தில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. இந்த தோல்வியால் கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

    அவரது கிரிக்கெட் வாழ்க்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.

    இந்நிலையில் எதிர்கால கேப்டனை உருவாக்குவதில் தேர்வுகுழு உறுப்பினர்களுக்கு தொலைநோக்கு பார்வையில்லை என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக நான் பார்த்த சில தேர்வாளர்களுக்கு தொலைநோக்கு பார்வையோ, விளையாட்டை பற்றிய ஆழமான அறிவோ அல்லது கிரிக்கெட் உணர்வோ இல்லை. 2021-ம் ஆண்டு பெரும்பாலான சீனியர் வீரர்கள் இங்கிலாந்தில் ஆடியபோது இலங்கை சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவானை கேப்டனாக நியமித்தனர்.

    இது போன்ற தொடர்களில் தான் எதிர்கால கேப்டனை உருவாக்க முடியும். அதுதான் சிறந்த வழி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த இளம் வீரரையும் கேப்டனாக செயலாற்றும் அளவிற்கு உருவாக்கவில்லை.

    ஐ.பி.எல். போட்டியை நடத்தினால் மட்டும் போதாது. மாற்று வீரர்கள் யார் தயாராக இருக்கிறார்கள்? ஐ.பி.எல். மூலமாகவும், தொலைக்காட்சி உரிமம் மூலமாகவும் கோடிகளை குவிப்பது மட்டுமே சாதனையல்ல.

    இவ்வாறு வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

    லோக்பால் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என காங்கிரஸ் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #LokpalMeet #PMModi #MallikarjunKharge
    புதுடெல்லி:

    பிரதமர், மத்திய மந்திரிகள், மத்திய அரசு அதிகாரிகள் என அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் லோக்பால் அமைப்பை விரைந்து அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை லோக்பால் தேர்வுக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது.

    லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு உறுப்பினர். ஆனால், தற்போதைய நிலவரப்படி மக்களவையில் குறைந்த எம்.பி.க்கள் இருப்பதால் எதிர்க்கட்சி அங்கீகாரம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை. 

    இதனால், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சிறப்பு அழைப்பாளர் என குறிப்பிட்டு அவர் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

    இந்நிலையில், லோக்பால் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக கார்கே பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், மக்களவையில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியான அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு லோக்பால் தேர்வு குழுவில் உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என நாங்கள் கூறி வருகிறோம். 

    ஆனால், சிறப்பு அழைப்பாளர் என்ற பிரிவில் என்னை கலந்து கொள்ள அழைத்துள்ளீர்கள். இப்படி ஒரு உறுப்பினரை அழைக்க கூடாது என விதிகள் உள்ளதை அரசு நன்கு அறியும். எனவே, லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். #LokpalMeet #PMModi #MallikarjunKharge
    ×