என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ViratKohli"

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    பிரபல இந்தி இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப், வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இதேபோல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    மேலும் மலையாள திரைப்படமான ரைஃபில் கிளப் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    பாலிவுட்டில் ஹிட் படங்களை இயக்கிய அனுராக் கஷ்யப் சமீப காலமாக இந்தி சினிமாவைவிட தென்னிந்திய படங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி

    வாழ்க்கையை படமாக்குவது குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர்," விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை நான் இயக்க விரும்பவில்லை. ஏனெனில் பல்வேறு மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர் ஏற்கனவே ஒரு ஹீரோவாக உள்ளார்.

    ஒரு வாழ்க்கை படத்தை இயக்க வேண்டுமெனில் நான் வேறொருவரைதான் தேர்வு செய்ய வேண்டும்.

    கோலி மிகவும் அழகானவர் மற்றும் அற்புதமான மனிதர்!" என்றார்.

    • அருண் ஜெட்லி மைதானத்தில் இளம் வீரர்களுடன் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.
    • ரெயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

    புதுடெல்லி:

    விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

    இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.

    இந்நிலையில், ரஞ்சி டிராபி போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி நேற்று ஈடுபட்டார். 36 வயதான அவர் டெல்லி அணி வீரர்களுடன் அருண் ஜெட்லி மைதானத்தில் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.

    விராட் கோலி பயிற்சி தொடங்கும் முன்னர் தனது கிட் பையை இழுப்பதைக் கண்ட டெல்லி அணி மேலாளர், அவருக்கு உதவுமாறு சில இளம் வீரர்களிடம் சைகை செய்தார். ஆனால் இந்த வாய்ப்பை கோலி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

    கோலியின் ஆரம்ப நாட்களில் பயிற்சியாளராக இருந்த பதி, விராட் அவர்கள் உங்களுக்கு உதவட்டும் என கூறியதற்கு, கோலி, என்ன சொல்கிறீர்கள்? இது என்னுடைய கிட், நானே அதை எடுத்துச் செல்கிறேன் என தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 133 ரன்கள் விளாசினார்.
    • 1 ரன் தேவை என்றபோது பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்ததுடன், 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது. பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சன் (133 நாட்அவுட்), கான்வே (97) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 48.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து 304 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமநிலை செய்தபோது, கேன் வில்லியம்சன் 6,997 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேன் வில்லியம்சன் பவுண்டரி விளாசினர். இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, கேன் வில்லியம்சன் 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வில்லியம்சன் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    150 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்து ஹசிம் அம்லா முதல் இடத்தில் நீடிக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்சில் கடந்து 4-வது இடத்தில் உள்ளார்.

    டோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார். #ViratKohli #Dhoni

    புதுடெல்லி:

    இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    போட்டியின் தன்மையை ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் கணிக்க கூடியவர் டோனி. முதல் பந்தில் இருந்து 300-வது பந்துவரை என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர், ஸ்டம்புக்கு பின்னால் டோனி இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.

    அவரை பலரும் விமர்சனம் செய்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும் டோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்த விரும்புவேன்.

    டெத் ஓவர்களில் எல்லை கோட்டில் இருந்து பீல்டிங் செய்ய விரும்புவேன். அதன் மூலம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்த முடியும் என்று நம்புகிறேன். அந்த நேரத்தில் யாரேனும் ஒருவர் என்னுடைய பொறுப்பை மேற் கொள்ள வேண்டும்.

    30-35 ஓவர்களுக்கு பின்னர் நான் எல்லை கோட்டுக்கு அருகில் பீல்டிங் செய்ய சென்று விடுவேன் என்று டோனிக்கு தெரியும். பின்னர் என்ன நடக்கும் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையில் அதிக அளவில் நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது.

    ஆரம்ப கட்டத்தில் எனக்கு டோனியிடம் இருந்து நிறைய ஆதரவு இருந்தது. 3-வது வரிசையில் விளையாடும் வாய்ப்பு அளித்தவர். நிறைய இளைஞர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். டோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விசுவாசமே எப்போதும் முக்கியத்துவம் பெறும்.

    இவ்வாறு கோலி கூறினார். #ViratKohli #Dhoni

    விராட் கோலி, தவான், டோனியின் ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli #MSDhoni #Dhawan
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு போட்டிகளை காட்டிலும் இந்த போட்டிக்கான ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது.



    இதனால் ரோகித் சர்மா - தவான் ஜோடி ரன்கள் குவிக்க திணறியது. முதல் ஐந்து ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6-வது ஓவரை வில்லே வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், அதே நேரத்தில் சீரான வேகத்தில் ரன்களும் குவித்து வந்தனர். பவர்பிளே ஆன முதல் 10 ஓவரில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    13-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரில் தவான் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். 17-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி இரண்டு பவுண்டரி விரட்டினார். 18-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அவர் 49 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.



    அடுத்து விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 19.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 24-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் அடித்தார் விராட் கோலி. 25-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் கார்த்திக் போல்டானார். இவர் 22 பந்தில் 21 ரன்கள் சேர்த்தார்.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார்கள். ஆனால் 31-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி போல்டானார். அவர் 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 30.1 ஓவரில் 156 ரன்கள் சேர்த்திருந்தது.

    அடுத்து வந்த ரெய்னா இந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஓரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இந்தியா, அதன்பின் மீள முடியவில்லை. ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 21 ரன்களும், டோனி 66 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    புவனேஸ்வர் குமார் (21), சர்துல் தாகூர் (13 பந்தில் 22 ரன்கள்) ஓரவிற்கு விளையாட இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ×