என் மலர்
நீங்கள் தேடியது "Virat Kohli"
- சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர்.
- விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 'ஏ+' (Grade A+) பிரிவில் இருந்த இவர்கள், தற்போது 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.
கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அவர்களின் ஆட்டம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் Grade A, B மற்றும் C என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கே 'ஏ' பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதன்படி சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர்.
பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யாகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சி பிரிவில் அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை.
2023-24 சீசனுக்கான மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இஷான் கிஷன் , ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர்; ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரை ஒப்பந்தத்தில் சேர்த்த பிசிசிஐ, இஷான் கிஷனை இன்னும் இணைக்கவில்லை
- நான்கு வீராங்கனைகளுக்கு A தர ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன
- முகமது ஷமி இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை
பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 'ஏ+' (Grade A+) பிரிவில் இருந்த இவர்கள், தற்போது 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.
கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அவர்களின் ஆட்டம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் Grade A, B மற்றும் C என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கே 'ஏ' பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதன்படி சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர். மகளிர் அணியில் ஜெமிமா ரோட்ரிகஸ், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஏ பிரிவில் உள்ளனர். முன்னதாக தரவரிசையில் இருந்து 'A+' பிரிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா முதலில் பேட்டிங் செய்த இந்தியா 411 ரன்கள் குவித்தது.
- இங்கிலாந்து அணியால் 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய இந்தியா 411 ரன்கள் குவித்தது. பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அந்த அணியால் 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விராட் கோலி இளையோர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துகள். இளையோர் கிரிக்கெட்டிலும் அதற்கு அப்பாற்பட்ட தளங்களிலும் நமது ஆதிக்கம் தொடர்கிறது. முழு அணிக்கும் மற்றும் ஸ்டாஃப்களுக்கும் எனது பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்.
- உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம்.
2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம்பெறுவார்களா என்பது தற்போது வரை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் விராட் கோலியின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. சமீபத்திய தொடர்களில் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவை) சிறப்பாக விளையாடி உள்ளார். அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் போன்றவர்கள் அவரை 2027 திட்டத்தில் முக்கியமாகக் கருதுகின்றனர்.
அதே சமயத்தில் ரோகித் சர்மா, சமீப தொடர்களில் சில சிறப்பான இன்னிங்ஸ் ஆடியுள்ளார், ஆனால் சில போட்டிகளில் சொதப்பியுள்ளார். இருப்பினும், அணி அவரை முக்கியமாகக் கருதுகிறது.
இந்நிலையில் இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார்களாக என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து தோனி கூறியதாவது:-
அடுத்த உலகக் கோப்பையில் ஏன் விளையாடக் கூடாது? என்னைப் பொறுத்தவரை, உடற்தகுதியை வயது தீர்மானிக்காது. அவர்களது பெர்ஃபார்மன்ஸ், பிட்னஸ் தான் தீர்மானிக்கும்.
உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம். அனுபவம் மற்றும் ஃபிட்னஸ் இருந்தால் ஏன் விளையாடக்கூடாது.
ஆனால் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். நான் டெப்யூ செய்தபோது 24 வயது, யாரும் என்னிடம் வயது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதே போல், 1, 2, 5 அல்லது 10 வருடங்கள் விளையாடினாலும், வயது பற்றி யாரும் எதுவும் சொல்லக் கூடாது.
அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், அணியில் இருப்பார்கள். சிறப்பாகச் செயல்படாவிட்டால், இருக்க மாட்டார்கள் என தோனி கூறினார்.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன்தான் என மோனங்க் படேல் கூறியுள்ளார்.
- அமெரிக்க அணியின் கேப்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
மும்பை:
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதையொட்டி 5 நாட்கள் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மும்பை டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய 'ஏ' அணி, அமெரிக்காவுடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய 'ஏ' அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. தமிழக வீரர் என்.ஜெகதீசன் 104 ரன்களும் (55 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் ஆயுஷ் பதோனி 60 ரன்களும் (26 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.
பின்னர் ஆடிய அமெரிக்க அணி 19.4 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 'ஏ' அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் நாளை மோதுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான் என அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அணியின் கேப்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.
- இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.
முன்னதாக ஒருநாள் தொடரின் போது நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட இந்திய ஜெர்சியை அவருக்கு வழங்கினார்.
இந்நிலையில் நான் வியந்து பார்க்கும் ஒருவராக விராட் கோலி இருப்பார் என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலியின் கையொப்பமிட்ட ஜெர்சி நிச்சயமாக எனது அலுவலகத்தில் சட்டமிட்டு வைக்கப்படும். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அவர் ஒவ்வொரு நாளும் விளையாடும் விதத்திற்காக விராட் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கடந்த பல ஆண்டுகளாக நான் வியந்து பார்க்கும் ஒருவராக அவர் நிச்சயமாக இருக்கிறார் என அவர் கூறினார்.
- பாபர் அசாம் 36 பந்தில் 50 ரன்கள் அடித்தார்
- டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் ஒயிட்வாஷ் செய்தது.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. சைம் அயூப் 37 பந்தில் 56 ரன்னும், பாபர் அசாம் 36 பந்தில் 50 ரன்னும் அடித்தனர். ஷதாப் கான் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 23 ரென்னும் கேமரூன் கிரீன் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதலிடம் பிடித்தார்.
விராட் கோலி 38 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில் பாபர் அசாம் 39 அரைசதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் (32), ரிஸ்வான் (30) ஆகியோர் உள்ளனர்.
- 27.4 கோடி ஃபாலோவர்களைக் கொண்ட கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது.
- இது தொடர்பாக அவரது மனைவி அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்து ரசிகர்கள் காரணத்தை கேட்டு வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. முன்னாள் கேப்டனான அவர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். கோலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27.4 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் நள்ளிரவில் திடீரென்று முடங்கியது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ரசிகர்கள் அணுகியபோது இந்தப் பக்கம் கிடைக்கவில்லை என்று காண்பித்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் கோலியின் சகோதரர் விகாஸ் இன்ஸ்டாகிராம் கணக்கும் செயலிழக்கப்பட்டிருந்தது.
பல மணி நேரத்துக்கு பிறகு இன்று காலை 8.30 மணிக்கு கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த திடீர் முடக்கம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து கோலி, அவரது நிர்வாகக் குழு அல்லது இன்ஸ்டாகிராம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கிய போது அதற்கான விளக்கத்தை அறிய ரசிகர்கள் முயன்றனர்.
சில ரசிகர்கள் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அண்ணாவின் (கோலி) கணக்கு எங்கே போனது?" என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டனர்.
- முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி 2 ஆம் இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
- தரவரிசையில் 3 ஆம் இடத்தில இருந்த ரோகித் 1 இடம் சறுக்கி 4ஆம் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 352 ரன்கள் குவித்து அசத்திய நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் ஐசிசி பேட்டர்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (845 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி 2 ஆம் இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
தரவரிசையில் 3 ஆம் இடத்தில இருந்த ரோகித் 1 இடம் சறுக்கி 4ஆம் இடம் பிடித்துள்ளார். இப்ராஹிம் சத்ரன் 3-வது இடத்திலும் சுப்மன் கில் 5-வது இடத்திலும், கே.எல்.ராகுல் 10-வது இடத்திலும் உள்ளனர்.
- 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது.
- ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.
ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ, பி மற்றும் சி கிரேடுகளுக்கு முறையே ரூ. 5 கோடி, ரூ. 3 கோடி, ரூ.1கோடி அளிக்கப்படுகிறது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள். சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் கோலி, ரோகித்சர்மா இடம்பெற்றுள்ள ஏ பிளஸ் கிரேடை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது. ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.
கோலி, ரோகித்சர்மாவுடன் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா ஆகியோரும் 'ஏ' பிளஸ் கிரேடில் இடம்பெற்றுள்ளனர்.
- சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள்.
- கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு முறை வென்று தொடரில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் கோட். 52 ஒருநாள் சதங்களை எட்டிய அவரது சாதனை, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததுடன் அவரை ஒரு தனி உயரத்தில் வைத்துள்ளது.
கோலி எந்த ஒரு குறிப்பிட்ட "இமேஜுக்கும்" (Image) கட்டுப்படாமல், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே அவரது வெற்றிக்கான ரகசியம். சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள், ஆனால் கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
இளம் வீரர்கள் கோலியின் மன உறுதி மற்றும் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியின் விளிம்பில் இருந்தபோதும் விட்டுக்கொடுக்காமல் போராடும் அவரது குணம் பாராட்டுக்குரியது.
என கவாஸ்கர் கூறினார்.
- நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
- நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஆளாகப் போராடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 3வது பேட்டராக களம் இறங்கி அதிக ரன்கள் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். கோலிக்கு அடுத்த இடங்களில் பாண்டிங் - 12662 (330 இன்னிங்ஸ்) | சங்ககாரா 9747 (238 இன்னிங்ஸ்) | காலிஸ் 7774 (200 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.






