search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kohli"

    • டோனி உள்ளுணர்வுகளை நம்பி நிறைய எனக்கு பாதுகாப்பு கொடுத்தார்.
    • ரோகித் தலைமையில் நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

    டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பெயர் அதிகமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி காயமடைவதால் அவரை கேப்டனாக அறிவிக்க முடியாது என தேர்வு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில போட்டிகள் மட்டுமே கேப்டனாக பணியாற்றிய சூர்யகுமாரை நியமித்தது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நான் தான் எனக்கு மிகவும் பிடித்த கேப்டன் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வெளிப்படையாக பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து பும்ரா கூறியதாவது:-

    நான் தான் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த கேப்டன். சில போட்டிகளில் நானும் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அதே சமயம் இங்கே மகத்தான கேப்டன்களும் உள்ளனர். இருப்பினும் நான் என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வேன்.

    இந்தியாவுக்காக அறிமுகமான போது எம்எஸ் டோனி உள்ளுணர்வுகளை நம்பி நிறைய எனக்கு பாதுகாப்பு கொடுத்தார். எனர்ஜியால் செயல்படக்கூடிய விராட் கோலி ஆர்வத்துடன் பிட்னஸை பின்பற்றுமாறு தள்ளினார். ரோகித் சர்மா வீரர்களின் உணர்வுகளை அறிந்து அவர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து உதவினார்.

    அந்த வகையில் அனைவரும் இந்திய அணி முன்னோக்கி செல்வதற்கு உதவினர். குறிப்பாக ரோகித் சர்மா இளம் வீரர்களிடம் சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் பழகுவார். குறிப்பாக அவர் இளம் வீரர்களை நாம் அணியில் இல்லை என்று நினைக்க விட்டதில்லை. எனவே ரோகித் சர்மா கேப்டனாக கிடைத்ததற்கும் அவருடைய தலைமையில் நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று கருதுவேன்.

    என பும்ரா கூறினார்.

    • வைரலான படங்களில், விராட் மற்றும் அனுஷ்கா கேமராவுக்காக தங்கள் புன்னகையை பளிச்சிடுவதைக் காணலாம்.
    • அனுஷ்கா பூக்கள் டிசைன் போட்ட மேக்சி உடையில் காணப்படுகிறார்.

    இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஜோடி தற்போது லண்டனில் உள்ளனர். வேறு நாடுகளைவிட லண்டன் இவர்களின் விருப்பப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர், விராட் கோலியும் அனுஷ்காவும் லண்டனை சுற்றிச் சுற்றி வலம் வந்தனர். நிறைய புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வந்தனர்.

    விராட், அனுஷ்கா தம்பதி லண்டனில் செட்டில் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா தங்களது 2 குழந்தைகளுடன் இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படங்கள் லண்டனில் எடுக்கப்பட்டவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வைரலான படங்களில், விராட் மற்றும் அனுஷ்கா கேமராவுக்காக தங்கள் புன்னகையை பளிச்சிடுவதைக் காணலாம். அவர்கள் சாதாரண உடையில் காணப்படுகின்றனர்.

    இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

    இந்த படத்தில், அனுஷ்கா பூக்கள் டிசைன் போட்ட மேக்சி உடையில் காணப்படுகிறார். விராட் கிளாசிக் வெள்ளை டி-சர்ட், பழுப்பு நிற கால்சட்டையுடன் தொப்பி அணிந்து சாதாரணமாக காணப்படுகிறார். மற்றொரு படத்தில் கிரிக்கெட் வீரர் அனுஷ்காவின் தோள்களில் கை வைத்தபடி சிரிப்புடன் காணப்படுகிறார்.

    இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    • விராட் கோலியுடன் நான் நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறேன்.
    • பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலியுடன் சில மெசேஜ்களை பகிர்ந்து கொண்டேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.

    ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக கூட நியமிக்கபடாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதே போன்று ருதுராஜ், அபிஷேக் சர்மா ஆகியோரும் இலங்கை தொடரில் இடம் பெறவில்லை.

    இப்படி இருக்க அடிக்கடி கம்பீருடன் சண்டை போடும் விராட் கோலியின் நிலைமை என்னனாகுமோ என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு தாமும் விராட் கோலியும் எதிரிகள் அல்ல என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தலைப்புச் செய்தி தரும் வகையில் என்னால் பேச முடியாது. கோலிக்கும் எனக்குமான உறவு, எங்கள் இருவருக்கும் இடையேயானது. களத்தில் நாங்கள் ஒரே பகுதியில் இருக்க வேண்டும். விராட் கோலியுடன் நான் நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறேன். பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலியுடன் சில மெசேஜ்களை பகிர்ந்து கொண்டேன். ஆனால் பயிற்சியாளராக வருவதற்கு முன்பாக அல்லது பின்பாக நாங்கள் என்ன விவாதித்தோம் என்பது முக்கியமல்ல.

    அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். நாங்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம் என்று நம்புகிறேன். ஒன்றாக சேர்ந்து நன்றாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்து நாட்டை பெருமைப்பட வைப்பதே எங்களுடைய வேலை. நாங்கள் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். எனவே நாங்கள் ஒன்றாக ஒரே பக்கத்தில் நின்று செயல்படுவது அவசியம்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    • அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது.
    • நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.

    மும்பை:

    நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் (இந்தியா தகுதி பெற்றால்) விராட் மற்றும் ரோகித் கண்டிப்பாக விளையாடுவார்கள் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

    இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா உடல்தகுதியுடன் இருந்தால் விளையாடுவார்கள் என இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி விரைவில் வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் இருப்பார்கள்.

    ஒருவேளை பிட்னஸை தொடர்ந்து கடைபிடிக்கும் பட்சத்தில் 2027 உலகக் கோப்பையிலும் அவர்களால் விளையாட முடியும். அது அவர்களுடைய சொந்த முடிவு. எவ்வளவு காலம் அவர்களால் விளையாட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இருப்பினும் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அவர்களிடம் இன்னும் ஆட்டம் இருக்கிறது.

    ரோகித் மற்றும் விராட் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்காக மற்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவார்கள். நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது.
    • இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார்.

    இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று அவர் வழிநடத்த இருக்கும் முதல் தொடரை ஒட்டி, கவுதம் காம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தலைமை பயிற்சியாளர் காம்பீர், மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்தித்தனர். பயிற்சியாளராக பொறுப்பேற்றபின் காம்பீர் பங்கேற்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவே.

    "நான் மிகவும் வெற்றிபெற்ற அணியை வழி நடத்துகிறேன். டி20 உலக கோப்பை சாம்பியன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆனால் இன்னும் பல வெற்றிகளை நாம் காண வேண்டும்."

    "விளையாட்டு வீரர்களுக்கு சுதந்திரம் என்பது மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன். எனக்கும், வீரர்ளுக்கும் நல்ல நம்பிக்கையை வளர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு பின்னால் உறுதுணையாக எப்போதும் இருப்பேன்."

    "ரோகித் மற்றும் விராட் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் முழு திறமையை காண்பித்து உள்ளனர். டி20 ஆகட்டும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியாகட்டும், அவர்களுக்குள் இன்னும் நிறய கிரிக்கெட் மீதம் இருக்கிறது."

    "அவர்கள் நினைத்தால் 2027 உலக கோப்பையிலும் விளையாடும் சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் விளையாடுவதும் விளையாடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். அவர்கள் நிச்சயம் உலக தரமிக்க வீரர்கள். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் விளையாடலாம்," என்று கூறியுள்ளார்.

    • ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ஒருமுறை நான் டோனியிடம் கேட்டேன்.
    • இந்த விளையாட்டு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அப்போது ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

    காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வந்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அவர் இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அண்மையில் முகமது ஷமி, யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    அவ்வகையில் எம்.எஸ்.டோனியின் ஓய்வு முடிவு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். "ஒரு வீரர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ஒருமுறை நான் டோனியிடம் கேட்டேன். அதற்கு அவர், இந்த விளையாட்டு உனக்கு சோர்வை தந்தால் ஓய்வு பெறலாம் அல்லது அணியிலிருந்து நீ ஓரம் கட்டப்பட்டால் ஓய்வு பெறலாம். ஆனால் இறுதியாக உனக்கு இந்த விளையாட்டு மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அப்போது ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும்" என்று டோனி கூறியதாக ஷமி தெரிவித்தார்.

    2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி 2020 ஆம் ஆண்டில் சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் டோனி ஓய்வு அறிவித்தது அந்த சமயத்தில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும்.
    • நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்.

    ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.

    வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

    ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் காயம் காரணமாக முகமது ஷமி இடம்பெறவில்லை.

    இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு முகமது ஷமி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

    அதில், 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் முதல் சிலபோட்டிகளில் நான் விளையாடவில்லை. அடுத்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்களையும், பின் ஐந்து மற்றும் 4 என அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்களை எடுத்தேன். 2023 ஆம் ஆண்டும் இதே போன்று நடந்தது. முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. பின் அதிகமான விக்கெட்களை வீழ்த்தினேன்.

    நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவைதான். மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். என்னிடம் அதற்கான கேள்விகளும் இல்லை, பதில்களும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்" என தெரிவித்துள்ளார்.

    2019 உலகக் கோப்பையில் விராட் கோலியின் தலைமையில் முகமது ஷமி விளையாடினார். அப்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.

    • இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பிடித்துள்ளனர்.
    • இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

    இதற்கிடையே, ஆக்ரோஷமான விளையாட்டு காரணமாக விராட் கோலி, கவுதம் கம்பீர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், கவுதம் கம்பீருடன் பணியாற்றுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்தார்.

    விராட் கோலி கம்பீருடன் பணிபுரிய வசதியாக இருக்கிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பிசிசிஐ அதிகாரிகளிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

    கடந்த காலங்களில் ஐ.பி.எல். போட்டிகளின்போது கேமராக்களால் கைப்பற்றப்பட்ட கசப்பான மோதலால் குறிக்கப்பட்டது, முந்தைய சிக்கல்கள் டிரஸ்சிங் அறையில் அவர்களின் தொழில்முறை உறவைப் பாதிக்காது.

    இருவரும் நாட்டின் நலன்களுக்காகச் செயல்படுவதை அங்கீகரிக்கிறோம். முந்தைய கருத்து வேறுபாடுகளில் இருந்து முன்னேறத் தயாராக உள்ளோம் என சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உறுதியளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றனர்.
    • அந்த இருவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என கபில் தேவ் கூறினார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதையடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர். அதேசமயம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என தெரிவித்துள்ளனர்

    டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

    இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.டோனியை போன்று விராட் கோலி, ரோகித் சர்மாவின் இடத்தையும் இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாது என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கபில் தேவ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்திய அணியில் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வேலையாட்கள். தற்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளனர்.

    அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தமக்கென்று தரத்தை உருவாக்கிய விராட் கோலியை இந்தியா கண்டிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிஸ் செய்யும்.

    அந்த இருவருமே சச்சின், தோனியைப் போன்றவர்கள். அந்த இருவரின் இடத்தை யாரையும் வைத்து மாற்றமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.

    • ரோகித், கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறவில்லை என்றால், உள்நாட்டு தொடரில் விளையாடுவதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெய்ஷா தெரிவித்தார். ஆனால் ரோகித், விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

    மேலும் வங்காள தேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னோடியாக துலீப் டிராபி பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய அணியில் இடம் பிடிக்காத மற்ற அனைத்து டெஸ்ட் வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது.

    இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:-

    இந்த முறை துலீப் டிராபிக்கு மண்டலத் தேர்வுக் குழு இல்லை. தேசிய தேர்வுக் குழு மட்டுமே துலீப் அணிகளைத் தேர்ந்தெடுக்கும். அனைத்து டெஸ்ட் அணி வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். ரோகித், விராட், பும்ரா ஆகியோர் விளையாடுவது அவர்களின் விருப்பம்.

    என கூறுகின்றது. 

    • இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்க உள்ளார்.
    • இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணி 3 வடிவிலான தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அடுத்து ஒருநாள் தொடரும் அதன் பின் டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.

    டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் ரோகித், விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்தனர். இதனால் ரோகித், விராட் மட்டுமின்றி பும்ரா ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள கவுதம் கம்பீர், ரோகித், விராட் கோலி, பும்ரா ஆகியோரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

    மேலும் டி20 தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதாக பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • கோலி காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் புகழ் மற்றும் அதிகாரம்.
    • ரோகித் சர்மா ஒரு நட்சத்திரமாக மாறியதில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் இடையே மைதானத்தில் தகராறு ஏற்பட்டது. மூவரும் மைதானத்தில் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது, கம்பீரும், கோலியும் கட்டிப்பிடித்து தகராறுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது அனைவரும் அறிந்ததே...

    இந்நிலையில், இந்த தகராறு முடித்து வைத்தது கவுதம் கம்பீர் தான் என்று மூத்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.

    மேலும் அமித் மிஸ்ரா கூறுகையில், "கவுதமிடம் நான் ஒரு நல்ல விஷயத்தைப் பார்த்தேன். விராட் கோலி அவரை நோக்கிச் செல்லவில்லை. கவுதம் தாம் விராட் கோலியை நோக்கி சென்றார். அவர் சென்று 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்கள் குடும்பம் எப்படி இருக்கிறது' என்று கேட்டார். எனவே கவுதம்தான் சண்டையை முடித்தார், கோலி சண்டையை முடிக்கவில்லை.

    அந்த நேரத்தில் கவுதம் தனது பெரிய மனதைக் காட்டினார். கோலிதான் சென்று சண்டையை முடித்திருக்க வேண்டும். அவர் சென்று 'கௌதி பாய், இதை முடித்துக் கொள்வோம்' என்று கூறியிருக்க வேண்டும்.

    கோலி காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் புகழ் மற்றும் அதிகாரம். ஆனால், ரோகித் சர்மா ஒரு நட்சத்திரமாக மாறியதில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.

    நான் பல வருடங்களாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இன்னும் ஐபிஎல் அல்லது வேறு எந்த நிகழ்ச்சியில் ரோகித்தை சந்திக்கும் போது, அவர் எப்போதும் என்னை கேலி செய்வார். அவர் என்ன நினைப்பார் என்று நான் யோசிக்க தேவையில்லை.

    விராட் நிறைய மாறிவிட்டதை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் பேசுவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டோம். உங்களுக்குப் புகழும் அதிகாரமும் கிடைத்தால், மற்றவர்கள் ஒரு நோக்கத்திற்காக மட்டுமே தங்களை அணுகுகிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று மிஸ்ரா கூறினார்.

    ×