என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kohli"

    • முதல் ஒருநாள் போட்டியில் கோலி சதம் அடித்தார்.
    • சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.

    முன்னதாக முதல் 2 போட்டியிலும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்திருந்தார். இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார். உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

    இந்நிலையில் அவரை ஜெயில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவக் வெளியாகி உள்ளது. அதில் போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன் என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • விராட் கோலிக்கு 100 ரன்கள் மீது ஒருவிதமான போதை இருக்கிறது.
    • விராட் இருந்தால் எதுவும் சாத்தியமே என கூறினார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி தோல்வியடைந்தது. முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு 53-வது ஒருநாள் சதம் ஆகும். முதல் ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்திருந்தார்.

    இந்நிலையில் நாம் சதங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அசால்ட்டாக அடிக்கிறார் என விராட் கோலியை முன்னாள் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலிக்கு 100 ரன்கள் மீது ஒருவிதமான போதை இருக்கிறது. நாம் சதங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அசால்ட்டாக அடித்து நொறுக்குகிறார். விராட் இருந்தால் எதுவும் சாத்தியமே என கூறினார்.

    • பேட்டர் தரவரிசையில் ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார்.
    • பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.

    ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார். இதை தவிர டாப் 10-ல் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார். கேஎல் ராகுல் 2 இடம் முன்னேறி 14-வது இடத்தில் உள்ளார்.

    ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். மற்றபடி பந்து வீச்சு தரவரிசையில் பெரிய மாற்றம் இல்லை.

    • ரோகித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ரன்களைக் குவித்துள்ளார்.
    • இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.

    ராய்ப்பூர்:

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே உள்ள பிரம்மாண்ட சாதனைப் பட்டியலில் ரோகித் இணைய அதிக வாய்ப்பு உள்ளது.

    ராய்ப்பூரில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், அவர் இன்னும் 41 ரன்கள் எடுத்தால் வரலாற்றுச் சாதனை படைப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    ஏனென்றால் 2025-ம் ஆண்டு ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 561 ரன்களைக் குவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கூட 51 பந்துகளில் 57 ரன்கள் விளாசி நல்ல ஃபார்மில் உள்ளார். அதற்கு முன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் அடித்து இருந்தார். தான் விளையாடிய கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ரன்களைக் குவித்துள்ளார். 20,000 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை அடைய அவருக்கு இன்னும் வெறும் 41 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.

    அந்த பட்டியல்:

    சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள்

    விராட் கோலி - 27,808 ரன்கள்

    ராகுல் டிராவிட் - 24,064 ரன்கள்

    ராய்ப்பூரில் 41 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், இந்த ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்வார்.

    • விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் தற்சமயம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்திய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

    விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாட ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வராமல் இருந்தது.

    இந்நிலையில் விராட் கோலியும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அவரது மாநில அணியான டெல்லிக்கு விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24-ந் தேதி ஆந்திராவுக்கு எதிராகவும் 26-ந் தேதி குஜராத்துக்கு எதிராகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி ரெயில்வே அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளார்.

    இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி விஜய் ஹசாரே தொடரில் விளையாட உள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொடரில் தமிழ்நாடு, மும்பை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 32 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட போட்டிகளில் பங்கேறவுள்ளன. இதில் மும்பை அணி குரூப் சி பிரிவிலும், டெல்லி அணி குரூப் டி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்கிறது.
    • இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி ராய்பூர் சென்றடைந்தது.

    டெஸ்ட் தொடரை தொடந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்க உள்ளது.

    இதற்காக இந்திய அணி வீரர்கள் ராய்பூருக்கு சென்றனர். இந்நிலையில் அங்கு இந்திய வீரர் விராட் கோலியை குழந்தைகள் பூ கொடுத்து வரவேற்றனர். அவர்களின் அன்பு பரிசை ஏற்ற விராட் கோலி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
    • ரோகித் மற்றும் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.

    டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பிசிசிஐ தரப்பிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியின் போதே அந்த வதந்தி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவேன் என விராட் கோலி கூறியுள்ளார்.

    சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி தனது 52-வது சதத்தை பதிவு செய்தார்.
    • ஒரு வடிவில் அதிக சதம் அடித்த டெண்டுல்கரை (டெஸ்டில் 51 சதம்) விராட் கோலி முந்தினார்.

    ராஞ்சி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 52-வது சதத்தை (306-வது போட்டி) பதிவு செய்தார்.

    இதன் மூலம் ஒரு வடிவில் அதிக சதம் அடித்த டெண்டுல்கரை (டெஸ்டில் 51 சதம்) அவர் முந்தினார்.

    டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். அவரை 37 வயதான விராட் கோலி ஏற்கனவே முந்தி இருந்தார். ஒரு நாள் போட்டியில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா, டெண்டுல்கரா? என்ற விவாதம் எழுந்து உள்ளது.

    இது குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

    விராட் கோலியுடன் ஆடியவர்களும் அவருக்கு எதிராக விளையாடியவர்களும் அவர் ஒருநாள் போட்டியில் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

    ரிக்கிபாண்டிங்கும் அவரை ஒருநாள் போட்டியின் எல்லா கட்டத்திலும் ஒரு சிறந்த வீரர் என்று மதிப்பிட்டார். ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவது மிகவும் கடினமானது. நீங்கள் டெண்டுல்கரை கடந்து செல்லும் போது இந்த மனிதர் எங்கே நிற்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார்.
    • இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 52-வது சதமாகும்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 52-வது சதமாகும்.

    இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெத்தியூ ப்ரீட்ஸ்கி 72 ரன்னும் மார்கோ யான்சன் 70 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய கார்பின் போஸ் 67 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதனால் 49.2 ஓவர்களில் தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது சர்வதேச போட்டிகளில் அவர் பெறும் 70வது ஆட்ட நாயகன் விருதாகும்.

    அதிக ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியலில் சச்சின் (76) முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 2 ஆம் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மர்க்ரம் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.
    • ஆட்டத்தின் இறுதியில் பாஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.

    இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.

    அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.

    எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.

    கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.

    எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

     தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மர்க்ரம் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.

    2வது ஓவரிலேயே ரியான் ரிக்கெல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். ரியான் ரிக்கெல்டனுக்கு பிறகு அடுத்து வந்த குயிண்டன் டிகாக், 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் இல்லாமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    4வது ஓவரில் ஏய்டன் மர்க்ரம் 7 ரன்களுடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதையடுத்து வந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் ப்ரீட்ஸ்கி ஜோடி நிலைத்து நின்று விளையாடி பங்காளி ஆட்டத்தில் 66 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து மெத்தியூ ப்ரீட்ஸ்கி நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். மார்கோ யான்செனும் அரைசதம் கடந்தார். ஆட்டத்தின் இறுதியில் பாஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

    ஆனால் 49.2 ஓவர்களில் ஹர்ஷித் ரானா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகவே கடைசி விக்கெட்டையும் இழந்து, தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.  

    • இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
    • இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.

    இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது கேள்விக்குள்ளாகி உள்ளது.

    இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஆலோசிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

    அகமதாபாத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பி.சி.சி.ஐ அதிகாரிகள், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.

    • மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.
    • ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது.

    சீனியர் வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2027-ல் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியதாவது:-

    ரோகித் சர்மா, விராட் கோலி உலகத் தரத்திலான வீரர்கள் ஆவார்கள். 2027-ல் நடைபெறும் உலக கோப்பையில் விளையாடுவதற்காக முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு கடின உழைப்பை வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர். மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.

    ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. ரோகித் , கோலி முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றார்.

    ×