என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YouTube Channel"

    • பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • இந்த மற்றம் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

    யூடியூப் சேனல்கள் மூலம் பலர் அதிகளவு பணம் ஈட்டி வரும் நிலையில் அந்நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

    யூடிட்யூப் சேனல்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு பணம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள், ஒரு வீடியோ போலவே உருவாக்கப்பட்ட மற்றொரு வீடியோ, செயற்கை நுண்ணறிவை பயனப்டுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள், மிகக்குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், மற்றவர்களின் வீடியோவை காப்பியடித்து சில திருத்தங்கள் மட்டும் செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், தரம் குறைந்த வீடியோக்கள், டெம்ளேட் மாடல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றுக்கு பணம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மற்றம் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை ரகானே பதிவிட்டு வருகிறார்.
    • குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

    அதில் கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    ஏற்கனவே அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் யூடியூப் சேனல் தொடங்கி கிரிக்கெட் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார்.
    • அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

    நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார்.

    கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கார் ரேஸில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அஜித், Formula Maruti Indian Championships மற்றும் Formula BMW Asia Championship போன்ற பந்தயங்களில் பங்கேற்றார்.

    2003-ல், அவர் MRF Racing Series-ல் பங்கேற்று, தனது முதல் பந்தய அனுபவத்தைப் பெற்றார்.

    2010-ல், அஜித் குமார் FIA Formula Two Championship பந்தயத்தில் பங்கேற்றார். சர்வதேச அளவிலான கார் பந்தயத் தொடரான இதில், அவர் பல ஐரோப்பிய பந்தயங்களில் போட்டியிட்டார்.

    கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

    இதற்கிடைய, அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார். இந்த அணி மூலம் அவர் பந்தயங்களில் பங்கேற்றதோடு, இளம் பந்தய வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் AjithKumarRacing என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த சேனல் அவரது கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த சேனல் மூலம் அஜித் குமார் தனது ரேசிங் ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அஜித் குமாரின் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

    அஜித் குமாரின்  அதிகாரப்பூர்வ யூடியூட் சேனலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

    • பயங்கரவாதிகளை(Terrorists) போராளிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
    • ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான பாலோயர்கள் உள்ளனர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பல யூடியூப் சேனல்களை இந்திய அரசு இப்போது தடை செய்துள்ளது.

    இதனுடன் பயங்கரவாதிகளை(Terrorists) போராளிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் சேனல்கள் மீதான தடை குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவிற்கு எதிராக எரிச்சலூட்டும், வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 16 யூடியூப் சேனல்களில் (முன்னலா கிரிக்கெட் வீரர்) சோயிப் அக்தரின் சேனல் மற்றும் அங்குள்ள பல முக்கிய ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும். டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார் டிவி, தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், ஜியோ நியூஸ், சாமா ஸ்போர்ட்ஸ் மற்றும் உசைர் கிரிக்கெட் ஆகியவை முடக்கப்பட்டன என்று தெரிவித்தார் 

    முடக்கப்பட்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான பாலோயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
    • குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அதில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்தி சென்னை மாவட்ட செயலாளர் சுரேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    யூடியூப் சேனல் ஒன்றில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பொய்யான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அதில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    இதுதொடர்பாக வீடியோக்களும் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதில் பேசும் நபர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை கூறிவருகிறார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் மத மாற்றத்தை தூண்டும் வகையிலும் அதில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

    எனவே யூடியூப் சேனல் மீதும் அதில் பேசும் நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியது.
    • இந்த சேனல்கள் மொத்தமாக சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள், பாராளுமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைகள், அரசின் இயக்கம் உள்ளிட்டவை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக 6 யூடியூப் தளங்கள் மீது புகார்கள் எழுந்தன.

    இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் மேற்படி யூடியூப் சேனல்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தது தெரியவந்தது. இந்த சேனல்கள் மொத்தமாக சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளதும், இவை வெளியிட்ட வீடியோக்கள் 51 கோடிக்கு அதிகமான பார்வைகளைப் பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், அரசின் முக்கிய நிறுவனங்கள் தொடர்பாக பொய் தகவல்களைப் பரப்பிய இந்த சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியது.

    • ஆன்லைன் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறது.
    • இதுவரை 35 பேர் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.

    சென்னை:

    ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. உங்கள் செல்போன் நம்பருக்கு குறிப்பிட்ட அளவுக்கு பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது.

    அதனை பெறுவதற்கு நீங்கள் பாதி அளவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று ஆசை காட்டுவார்கள். இதை நம்பி பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு மோசடிக்காரர்கள் கேட்கும் தொகையை கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம்.

    இது போன்று குறிப்பிட்ட சில லிங்க்குகளை அனுப்பி அதனை கிளிக் செய்தால் உங்களுக்கு இத்தனை லட்சம் பணம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி மோசடி செய்வதும் மோசடியின் இன்னொரு வகை.

    அதே நேரத்தில் உங்களுக்கு சில லட்சங்கள் பரிசு கூப்பன் விழுந்துள்ளது. அதனை நீங்கள் பெற வேண்டுமென்றால் ஆன்லைனில் நாங்கள் கூறும் லிங்க்கில் சென்று குறிப்பிட்ட பணத்தை கட்டுங்கள் என்று கூறுவார்கள். இதை நம்பி பணத்தை இழந்து பலரும் தவித்து வருகிறார்கள். இப்படி ஆன்லைன் மோசடிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

    அந்த வகையில் புதிது புதிதாக ஆன்லைன் மோசடிகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இதன்படி சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் மோசடிக்கும்பல் ஆன்லைன் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறது.

    புதிய மோசடி கும்பல் இந்த முறை யூடியூப் சேனல் மூலமாக வலை விரித்து உள்ளது. யூடியூப் சேனல் ஒன்றின் லிங்க்கை அனுப்பி இதனை நீங்கள் லைக் செய்தால் போதும். உங்களுக்கு முதலில் சிறிய தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டுவார்கள். பின்னர் தனியாக டெலிகிராம் குரூப் ஒன்றை தொடங்கி இருப்பதாக கூறி அதில் உங்களையும் டீம் லீடர் போல சேர்த்து வங்கி கணக்கு ஒன்றை தொடங்க சொல்லி அதில் சென்று நீங்கள் பணம் செலுத்தினால் அதில் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை காட்டுவார்கள்.

    இதை நம்பி சென்னையை சேர்ந்த என்ஜினீயர்கள், தொழில் அதிபர்கள் லட்சம் முதல் கோடி வரை பணத்தை முதலீடு செய்து ஏமாந்து தவித்து வருகிறார்கள். இதுவரை 35 பேர் ரூ.5 கோடி வரை பணம் கட்டி ஏமாந்துள்ளனர். புகார் கொடுக்காமல் பலர் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை நூற்றுக்க ணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் ரூ.30 லட்சம் பணத்தையும் , தொழில் அதிபர் ஒருவர் ரூ.1.2 கோடியையும் இழந்துள்ளனர்.

    இதில் நீங்கள் தொடக்கத்தில் கட்டும் ஆயிரக்கணக்கான பணத்துக்கு கூடுதல் வட்டியை மோசடி ஆசாமிகள் வழங்கி விடுவார்கள். அந்த பணத்தை நீங்கள் எடுத்து பயன்படுத்தி இருப்பீர்கள்.

    இதன் பின்னர் நீங்கள் முதலீடு செய்யும் லட்சங்களையும் கோடிகளையும் மட்டுமே மோசடி பேர் வழிகள் தடுத்து நிறுத்தி சுருட்டி விடுகிறார்கள். இதனால் கடன் வாங்கி பணம் கட்டிய பலர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறும்போது தேவையில்லாமல் ஆன்லைனில் சாட்டிங் செய்வதை தவிர்த்தலே போதும். இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்ப முடியும் என்று எச்சரித்து உள்ளனர்.

    • யூ-டியூப் சேனல் துவங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
    • சமூக வலைதளங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.

    திருப்பூர் : 

    கோவில் நிகழ்ச்சிகள், திருவிழாக்களை பக்தர்கள் பார்க்க வசதியாக யூ-டியூப் சேனல் துவங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவில்கள், ஆதீன மடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், விழாக்கள், ஆன்மிக நிகழ்ச்சிகளை பக்தர்களிடம் சேர்க்க சமூக வலைதளங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள், சிறப்புபூஜைகள், திருவிழா நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வசதியாகவும், நேரடியாக ஒளிபரப்பவும் கோவில் பெயரில் யூ - டியூப் சேனல்கள்துவக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக, பெரிய கோவில்களில் துவங்கப்படும். அதன்பின், அனைத்து முக்கிய கோவில்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்கின்றனர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.

    • உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமை.
    • பிரேசிலின் முன்னாள் அதிபர் இரண்டாவது இடம்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் சந்தாதாரர் எண்ணிக்கை இரண்டு கோடியை கடந்து புதிய மைல்கல் எட்டியது. யூடியூபில் இத்தனை சந்தாதாரர் பெற்ற உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

    இதுவரை பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் 450 கோடிக்கும் அதிக பார்வைகளை கடந்துள்ளது. யூடியூபில் அதிக சந்தாதாரர்கள் பெற்ற உலக தலைவர்கள் பட்டியலில் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவ் 64 லட்சம் சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

     


    அதிக பார்வைகளை கொண்ட தலைவர்கள் பட்டியலில் உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலன்ஸ்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது யூடியூப் சேனல் 22.4 கோடி பார்வைகளை கொண்டிருக்கிறது. இது பிரதமர் மோடியின் சேனலில் இருப்பதை விட பலமடங்கு குறைவு ஆகும்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் 7.89 லட்சம் சந்தாதாரர்களையும், துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகனின் யூடியூப் சேனல் 3.16 லட்சம் சந்தாதாரர்களையும் பெற்று இருக்கிறது.

    • வில்லேஜ் குக்கிங் சேனல் 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது.
    • இந்த யூடியூப் சேனல் மிகவும் பிரபலமாக உள்ளது.

    யூ டியூபில் பலரும் சமையல் சேனல்கள் வைத்திருந்தாலும் வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இந்த யூடியூப் சேனலை கடந்த 2018-ஆம் ஆண்டு சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம், பெரியதம்பி ஆகியோர் தொடங்கினர்.

    இந்த குழுவை முன்னாள் சமையல் கலைஞரான பெரியதம்பி வழி நடத்துகிறார். இந்த சேனல் வெறும் உணவு சமைப்பதால் மட்டும் பிரபலமாகவில்லை. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கிராமத்து பின்னணியில் உணவு தயாரிக்கப்படுவதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது முன்னிலையில் இருக்கிறது.


    அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு வந்த ராகுல் காந்தி இவர்களின் சமயலை சுவைத்து பாராட்டினார். மேலும், இந்த குக்கிங் சேனல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி என திரைப்பிரபலங்கள் பலர் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தனர். இதன் மூலம் இவர்கள் மேலும் பிரபலமானார்கள்.

    இந்நிலையில், 'விக்ரம்' படத்திற்காக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்று வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழு தெரிவித்துள்ளது. நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இந்த குழு, "இந்த சேனல் ஆரம்பிக்கும் முன்பே கன்டன்-யை தாண்டி எதுவும் செய்ய கூடாது என்று முடிவு செய்துவிட்டோம். விக்ரம் படத்தில் நடித்ததற்கு கூட ஒரு பைசா வாங்கவில்லை. எவ்வளவு ஆஃபர் வந்தாலும் வேண்டாம் என்று கூறியுள்ளோம்.


    ஏன் ஸ்பான்சர்சிப் கன்டன் செய்யவில்லை என்றால் ஒருவரிடம் நாம் பணம் வாங்கிக் கொண்டோம் என்றால் அவர்களுக்காக வேலை பார்க்க வேண்டும். அவங்களுக்கு என்று நம் வீடியோவில் நேரம் ஒதுக்க வேண்டும். அது எங்களுக்கு சரியாகப்படவில்லை என்றதால் இவ்வாறு செய்கிறோம். அதுமட்டுமல்லாமல் பணத்தின் மேல் ஆசை வரக்கூடாது. யூடியூபில் இருந்து வரும் வருமானம் போதும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கிறோம்" என்று கூறினார்.

    • கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி, இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார்.
    • 10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

    பத்திரிகையாளர் ஜியாவின் 'எனக்கொரு WIFE வேணுமடா' குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியானது.

    செபாஸ்டின் அந்தோணி, அக்ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார்.

    கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி, இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். இது முழு நீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. 

    கடந்த ஆண்டு ஜூனில் 'கள்வா' என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை ஜியா இயக்கியிருந்தார். இது அவரது இரண்டாவது குறும்படமாகும். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்த குறும்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

    இந்நிலையில் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் 'எனக்கொரு WIFE வேணுமடா' வெளியாகியுள்ளது.

    10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

    • வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.
    • 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இந்த யூடியூப் சேனலை கடந்த 2018-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது

    யூ டியூபில் பலரும் சமையல் சேனல்கள் வைத்திருந்தாலும் வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இந்த யூடியூப் சேனலை கடந்த 2018-ஆம் ஆண்டு சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம், பெரியதம்பி ஆகியோர் தொடங்கினர்.

    இந்த குழுவை முன்னாள் சமையல் கலைஞரான பெரியதம்பி வழி நடத்துகிறார். இந்த சேனல் வெறும் உணவு சமைப்பதால் மட்டும் பிரபலமாகவில்லை. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கிராமத்து பின்னணியில் உணவு தயாரிக்கப்படுவதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு வந்த ராகுல் காந்தி இவர்களின் சமையலை சுவைத்து பாராட்டினார். மேலும், இந்த குக்கிங் சேனல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி என திரைப்பிரபலங்கள் பலர் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தனர். இதன் மூலம் இவர்கள் மேலும் பிரபலமானார்கள்.

    கடந்த மார்ச் மாதம் குக்கிங் சேனல் மூலம் புகழ்பெற்ற தாத்தா பெரிய தம்பி இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்று அந்த குழுவை சேர்ந்த சுப்ரமணியன் வேலுசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாத்தா பெரியசாமியை ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இது சம்பந்தமாக பெரிய தம்பி வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் மருத்துவமனையில் இருக்கும்போது என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக தம்பி ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். "தாத்தா நல்லாருக்கீங்களா? உங்களுக்கு ஒன்னும் ஆகாது. பூரண குணமடைந்து வருவீர்கள்" என்றார். அவருக்கும் நன்றி" என்று அதில் தெரிவித்துள்ளார். 

    ×