என் மலர்
நீங்கள் தேடியது "டெரிக் ஓ பிரையன்"
- SIR தொடங்கியதிலிருந்து, அச்சத்தின் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர்.
- மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுடெல்லி:
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.
SIR அச்சம், துன்புறுத்தல் மற்றும் நிர்வாகத் தன்னிச்சையான செயல்களைத் தூண்டிவிட்டு, உயிரிழப்புகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது என குற்றம்சாட்டும் மம்தா பானர்ஜி, இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் தன்னிச்சையான தன்மை மற்றும் நடைமுறை முறைகேடுகள் இருக்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ'பிரையன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை தொடங்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் முறையான எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களை வழங்குவதற்குப் பதிலாக, "முறைசாரா மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சேனல்கள்" மூலம், வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் வீடியோ மாநாடுகளின்போது தெரிவிக்கப்படும் வாய்மொழி வழிமுறைகள் மூலம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக, கேலிக்குரிய முறையில் செயல்படவோ அல்லது சட்டத்தை மீறவோ முடியாது. சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட மற்றும் தற்காலிக அல்லது முறைசாரா வழிமுறைகளுடன் நடைமுறைகளை அமைக்கவோ முடியாது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- காங்கிரசுடன் உறவை முறிக்க காரணமானவர் குறித்து திரிணமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறினார்.
- அவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை நிருபர்கள் சந்திப்பில் மூன்று முறை குறிப்பிட்டார்.
கொல்கத்தா:
மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியது.
சுமார் 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜியும், பஞ்சாப்பில் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என முதல் மந்திரி பகவந்த் மானும் அறிவித்தனர்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணிக்கு 2 முக்கிய எதிரிகள் உள்ளனர். ஆதிர் ரஞ்சன் பா.ஜ.க.வின் மொழியில் பேசுகிறார். காங்கிரசுடன் உறவை முறிக்க இவரே காரணம் என தெரிவித்தார்.
மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை 3 முறை குறிப்பிட்டு தனது கோபத்தையும் வெளிப்படுத்தினார்.






