search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanatana Dharma"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றதற்கும், சனாதன தர்மத்தை ஒழிப்பதாக உதயநிதி பேசியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

    புதுடெல்லி:

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் தொடர்பாக தமிழ்நாடு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே மத வெறுப்பு பேச்சு தொடர்பாக அளித்த தீர்ப்புக்கு எதிராக இந்த பேச்சு உள்ளது என்றும் தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மத வெறுப்பு பேச்சுக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பாட்டியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிராக அமித்த சச்தேவா என்பவர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர், 'ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதி மத வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பான மனுக்களுடன் இணைத்து விசாரிக்க வேண்டும்' என்று முறையிட்டார்.

    அதற்கு நீதிபதிகள், 'மத வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பான மனுக்கள் தனித்தனியாக விசாரிக்கப்படும். அமைச்சர் உதயநிதி பேசிய சனாதனம் குறித்த பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது. எனவே அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நீங்கள் ஐகோர்ட்டை நாடி மனுதாக்கல் செய்யுங்கள்' என்றும் வாய்மொழியான உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரம்பரிய விளையாட்டுகளை தடுப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன.
    • பாரம்பரிய விளையாட்டு முதல் முறையாக பெங்களூருவில் நடைபெறுகிறது.

    பெங்களூரு தெற்கு பாராளுமன்ற உறுப்பினரும், பா.ஜ.க. யுவா மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா சனாதன தர்மத்தை காப்பாற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை தடுப்பதை குறிக்கோளாக கொண்டு சில அமைப்புகள் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    கேரளாவின் கசர்கோட் மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான கம்பாளா முதல் முறையாக பெங்களூருவில் நடைபெறுகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "இன்று பல அமைப்புகள் வெவ்வேறு குறிக்கோளுடன் நீதிமன்றத்தை நாடி, நமது பாரம்பிரய விளையாட்டு போட்டிகளான ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாளாவை தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களின் வேறுபாடுகளை கலைந்து நமது பாராம்பரிய கொண்டாட்டங்களான ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாளாவை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். இந்த விளையாட்டுக்களை காப்பாற்றினால் தான் சனாதன தர்மத்தையும் நம்மால் காப்பாற்ற முடியும்," என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆன்லைன் மூலம் ‘நீட் தடை’ என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் 3 லட்சம் பேர் பங்கேற்று கையெழுத்து போட்டுள்ளனர்.
    • நீதிமன்ற வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்.

    சென்னை:

    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி மற்றும் மாணவர் அணி ஆகியவை சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற சத்தியமூர்த்தி பவன் சென்றார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்களிடம் கையெழுத்து பெற்றார்.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கையெழுத்து பெறுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கட்சித் தலைவர் திருமாவளவனிடம் அவர் கையெழுத்து பெற்றார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் , எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு மற்றும் நிர்வாகிகள் கையெழுத்து போட்டனர்.

    இதில், திமுக எம்.எல்.ஏ. மயிலை வேலு கலந்து கொண்டார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் விலக்கு நம் இலக்கு என்ற கையெழுத்து இயக்கம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறுவதற்காக தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 6 வருடத்தில் அனிதா ஆரம்பித்து 22 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 10 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம்.

    ஆன்லைன் மூலம் 'நீட் தடை' என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் 3 லட்சம் பேர் பங்கேற்று கையெழுத்து போட்டுள்ளனர்.

    அனைத்து இயக்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்தகட்டமாக அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நாங்கள் உண்மையாக போராடி வருகிறோம், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று என்று இல்லை. இது தி.மு.க. பிரச்சனை மட்டும் இல்லை.

    கேள்வி:- சனாதன மாநாட்டில் பேசியதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளாரே?

    பதில்:- அம்பேத்கர், பெரியார் பேசியதை விட தவறாக ஒன்றும் நான் பேசவில்லை. நான் பேசியது தவறு இல்லை. அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்கு போகும். சட்டமன்ற உறுப்பினர் பதவி இன்றைக்கு வரும், நாளைக்கு போகும். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு இன்றைக்கு வரும், நாளைக்கு போகும். அதைவிட முக்கியம் முதலில் மனிதனாக இருக்க வேண்டும்.

    நீட் தேர்வு என்பது 6 வருட பிரச்சனைதான். முதலில் அதை ரத்து செய்வோம். சனாதனத்தை பற்றி பல ஆண்டுகளாக பேசி வருகிறோம். இது பல நூறு ஆண்டு கால பிரச்சனை. சனாதனத்தை எந்த காலத்திலும், எப்போதும் எதிர்ப்போம். நீதிமன்ற வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இங்கு வந்து பேசும் போது, 'ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில பட்டியலில் கல்வி உரிமை இருக்க வேண்டும் என்றால் அதை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுப்போம். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்று கூறி இருக்கிறார்.

    கேள்வி:- நீட் தேர்வு விலக்கு கிடையாது, நீட் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் சொல்லும் போது மாணவர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதே?

    பதில்:- 6 வருடமாக நீட் விலக்கு கோரிக்கையை வைத்து வருகிறோம். சட்டமன்றத்தில் 230 சட்டமன்ற உறுப்பினர்கள் இதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். மக்களின் எண்ணத்தை சட்டமன்றத்தில் பேசுபவர்கள். இதற்கு ஆதரவு தெரிவிக்காத 4 சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

    நாங்கள் மாணவர்களை குழப்பவில்லை. இன்னொரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நாங்கள் செயல்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில் 'தி.மு.க. நடத்துகின்ற கையெழுத்து இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் முழுமையாக பங்கேற்கிறது' என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார்.
    • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. ராசா ஆகியோரது பேச்சு குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் கிஷோர்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார்.

    இந்த மாநாட்டில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் பங்கேற்றுள்ளார். தி.மு.க. எம்.பி. ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளனர்.

    இதனால் இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கம் கேட்டு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் உதயநிதி, தி.மு.க. எம்.பி. ராசா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர்களின் நியமனம் எந்த சட்டத்திற்கும் எதிரானது அல்ல. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர்கள் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களின் பேச்சு விவரங்கள் மனுவில் தெரிவிக்கப்படவில்லை. அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார்.

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜோதி, அமைச்சர்களின் பேச்சு அல்லது வீடியோ குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு என்பது இரு நீதிபதிகள் அமர்வில் தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. ராசா ஆகியோரது பேச்சு குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது.
    • சனாதன தர்மத்தின் அடிப்படை கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளது.

    சென்னை அண்ணா நகரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற சனாதன உத்சவ் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார்.

    அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள், சனாதன தர்மத்தின் சான்றுகளாக உள்ளது.

    சனாதனத்தில் ஏற்றத்தாழ்வு கிடையாது. சனாதனம் தமிழகத்தில் வளம்பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படை கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளது.

    சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
    • இந்து மத சாமியார்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகியவற்றுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டு அவர் பேசிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பாரதிய ஜனதா. இந்து முன்னணியினர் போராட்டமும் நடத்தினார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு மாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் இன்று இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது.

    அவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் டெல்லி மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்து மத சாமியார்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    தமிழ்நாடு இல்லத்தை அடைந்ததும் அவர்கள் அதன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத் தின் போது அவர்கள் உருவ பொம்மைகளையும் தீ வைத்து எரித்ததால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் தமிழ்நாடு இல்லம் முன்பு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

    இந்து அமைப்பினரின் இந்த பேரணி-ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பேரணி சென்ற சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரதத்தில் சனாதனத்தை மதித்து அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சுமார் 120 கோடி பேர் உள்ளனர்.
    • சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர் அதை மதிக்கும் நாட்டின் 80 சதவீத மக்களை அழிக்க முயல்வதாகவே அர்த்தம்.

    புதுடெல்லி:

    சனாதனத்தை விமர்சித்ததற்கு உதயநிதி மன்னிப்பு கேட்கவில்லை எனில், அவர் எங்கு சென்றாலும் தப்ப முடியாது என அயோத்தி துறவியான ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அயோத்தி தபஸ்வீமடத்தின் தலைவருமான அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:-

    மற்ற மதங்களை உதயநிதி விமர்சித்திருந்தால் அவர் இன்று என்னவாகி இருப்பாரோ தெரியவில்லை. பா.ஜ.க.வின் தலைவர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் ஹதீஸ் மறையில் இருப்பதைத்தான் எடுத்துரைத்தார். ஆனால் அவருக்கு கிளம்பிய எதிர்ப்பால் நுபுரை  கட்சியில் இருந்து நீக்கி பா.ஜ.க.நடவடிக்கை எடுத்தது. ஆனால், உதயநிதி மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

    தமிழக அமைச்சர் உதயநிதி தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விடுவார் என எதிர்பார்த்தேன். இதை அவர் செய்யாததால்தான் நான் அவரது கழுத்தை வெட்டி வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு என அறிவித்தேன். இதற்கு பின்பும் அவர் தனது தலையை சீவ ரூ.10 கோடி தேவையல்ல, 10 ரூபாய் சீப்பு போதுமானது எனக் கிண்டலடித்தார்.

    இதனால் 2 தினங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான ஆச்சாரியார்கள் கொண்ட தர்மசபையை கூட்டி ஆலோசனை செய்தேன். இதன்படி அவர் தனது வார்த்தைகளை வாபஸ் பெற்றால் நாமும் நம் எச்சரிக்கையை வாபஸ் பெறுவோம். இல்லையெனில் எங்கு ஒளிந்திருந்தாலும் அவர் எங்களிடமிருந்து தப்ப முடியாது. அவர் தலையை கொய்ய நான் அறிவித்த ரூ.10 கோடியை தற்போது ரூ.25 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளேன்.

    அவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். சனாதனத்தின் மீது நம்பிக்கை இல்லை எனில் உதயநிதி வேறு மதத்திற்கு மாறிக் கொள்ளலாம்.

    இதை விடுத்து அவர் சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. இது உலகம் முழுவதிலும் அமைதியை குலைக்கும் செயல். இவருக்கு பின் ஆ.ராசாவும் இதேபோன்று விமர்சித்தது தவறு.

    பாரதத்தில் சனாதனத்தை மதித்து அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சுமார் 120 கோடி பேர் உள்ளனர். 5,000 ஆண்டுகளுக்கு முன் சனாதனம் மட்டுமே இருந்தது. வேறு எந்த மதங்களும் இல்லை. இதன் குறிப்பு பழம்பெருமை வாய்ந்த ஆன்மிக நூலான ரிக் வேதத்திலும் உள்ளது.

    சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர் அதை மதிக்கும் நாட்டின் 80 சதவீத மக்களை அழிக்க முயல்வதாகவே அர்த்தம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு போய் மனுதாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி நீதிபதிகள் வழக்கை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்தனர்.
    • மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதா?

    புதுடெல்லி:

    சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் என்பவர் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் கடந்த 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25, 26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணைக்கு வந்ததும் நீதிபதிகள், "இந்த வழக்கை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏன் தலையிட வேண்டும்" என்று கேட்டனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "நீங்கள்தான் முதன்மையான கோர்ட்டாக இருக்கிறீர்கள். நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.

    அதற்கு நீதிபதிகள், 'இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஐகோர்ட்டுகள் உள்ளன. நீங்கள் எந்த ஐகோர்ட்டில் வேண்டுமானாலும் இந்த விவகாரத்துக்காக அணுகலாம்.

    இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு போய் மனுதாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்தனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள், குறிப்பாக சனாதனத்தை வேரறுப்போம், சனாதனத்தை ஒழித்து விடுவோம் என்று கொசுவோடு சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது, கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது ஆகிய விஷயங்களை சொல்லிக்கொண்டே இருந்தார்.

    அதன்பிறகு வழக்கு மனுவை மீண்டும் ஒருமுறை பார்த்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் நோட்டீசு அனுப்புகிறோம். அவர்கள் பதில் அளிக்கட்டும் என்று கூறினார்கள். அதன்பிறகு சனாதனம் பற்றிய பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் அமைச்சர் சேகர் பாபு, சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்திய திராவிடர் கழகம் ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதா? என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? என்றும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு பங்கேற்றது தொடர்பாகவும் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.
    • தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்.

    சென்னை:

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

    இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி சேஷசாயி கூறியதாவது:-

    சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு ஆகும்.

    இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா? குடிமகன் நாட்டை நேசிக்கக்கூடாதா? நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா?

    சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.

    மத பழக்க வழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம். அவற்றை களை எடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்.

    ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொரு வரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo