என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சோனியா, ராகுலுடன் சந்திப்பு- குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் சந்திப்பு.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்ற நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சோனியா, ராகுல் உடனான ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது.
சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






