என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இதுவரை நடந்திராத ரோடு ஷோவாக மதுரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ இருக்க வேண்டும்- அமைச்சர் மூர்த்தி
- சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெறாத நிலையில் முதன்முதலாக மதுரையில் தி.மு.க. பொதுக்குழு நடைபெறுகிறது.
- இந்த ரோடு ஷோ வரலாறு காணாத வகையில் இருக்க வேண்டும்.
மதுரை:
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், வருகிற ஜூன் 1-ந்தேதி வரலாறு காணாத வகையில், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெறாத நிலையில் முதன்முதலாக மதுரையில் தி.மு.க. பொதுக்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாநில அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
அதற்கு முதல் நாளான மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இந்த ரோடு ஷோ மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்ரத் புரம், காளவாசல், குரு தியேட்டர், திருமலை நாயக்கர் சிலை வழியாக நடைபெற்று தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த ரோடு ஷோ வரலாறு காணாத வகையில் இருக்க வேண்டும். அனைவரும் திரும்பி பார்க்கக் கூடிய மதுரையின் பத்து தொகுதியின் வெற்றிக்கு அடித்தளமாகவும், தேர்தல் வியூகமாகவும் இந்த ரோடு ஷோ அமையும் அளவிற்கு நமது தொண்டர்கள் அணி திரண்டு வர வேண்டும். தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், அரசியலுக்கு தலைநகரம் மதுரை என்று சொல்லுகின்ற அளவிற்கு பல மாற்றங்களை நமது மதுரை கண்டு இருக்கிறது.
இதற்கு முன்பு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற நமது கட்சியின் மாநாடு மாபெரும் திருப்புமுனை மாநாடாக அமைந்தது. அதேபோல் ஒரே நாளில் மேலூர் டங்ஸ்டன் வெற்றி மாநாடு அமைந்திருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.






