search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்னம்பிக்கை"

    பிறருடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பழக்கத்தை அடிக்கடி பின்பற்றுவது நாளடைவில் நோயாகவே மாறிவிடும். நிம்மதியின்மை, பாதுகாப்பின்மையை உணரக்கூடும்.
    வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது. தங்கள் வாழ்க்கை எவ்வித சச்சரவுகளுமின்றி நல்லபடியாக அமைந்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தங்களிடம் இருப்பதை கொண்டு திருப்தி அடைந்துவிடும் சுபாவம் கொண்டவர்கள் ரொம்பவே குறைவு. மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கும் மனோபாவம்தான் பலரிடமும் இருக்கிறது.

    தன்னால் அவரை போல் வாழ முடியவில்லையே? என்ற ஏக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அதன் காரணமாக மன அமைதியை இழந்து தவிப்பார்கள். பிறருடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பழக்கத்தை அடிக்கடி பின்பற்றுவது நாளடைவில் நோயாகவே மாறிவிடும். நிம்மதியின்மை, பாதுகாப்பின்மையை உணரக்கூடும்.

    பிரபல அமெரிக்க எழுத்தாளர், பாடலாசிரியர் ஸ்டீவன் பர்டிக், ‘‘ஒவ்வொருவரும் தங்களுக்குள் முகத்திரை இட்டுக்கொள்கிறார்கள். அந்த திரைக்குள் இருந்து மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அதுவே நாம் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கிறது’’ என்றார்.

    மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவது சிறந்ததல்ல என்பதை புரிந்துகொள்ள உதவும் வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அந்த அனிமேஷன் வீடியோவில், மற்ற பறவைகள் தன்னை விட சிறந்தவை என்று நினைக்கும் காகம், அவற்றுடன் பேசி படிப்படியாக உண்மை நிலையை கண்டறிகிறது. அந்த காணொளியின் தொடக்க காட்சியாக காகம் ஒன்று ஏரிக்கரையின் ஓரத்தில் இருக்கும் மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கிறது. அப்போது ஏரியில் நீந்திக்கொண்டிருக்கும் அன்னப்பறவையை காகம் அழைக்கிறது. உடனே காகத்தை நாடி அன்னப்பறவை நீந்தி வருகிறது. அதனிடம் காகம், ‘‘உலகில் நீதான் மிகவும் மகிழ்ச்சியான பறவையா?’’ என்று கேட்கிறது.

    அதற்கு அதற்கு அன்னப்பறவை, ‘‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? நீங்கள் கிளிகளை பார்த்ததில்லையா. ஒன்றல்ல.. இரண்டு கிளிகளை பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்’’ என்கிறது. ஏரிக்கரையில் உள்ள மற்றொரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் கிளியோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. தன்னை விட மயில்தான் அதிக வண்ணம் கொண்டிருக்கிறது.

    பார்க்க அழகாகவும் இருக்கிறது என்று சொல்கிறது. இதையடுத்து மூன்று பறவைகளின் கவனமும் மயிலை நோக்கி திரும்புகிறது. ஆனால் மயிலோ கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ‘‘தான் அழகாக இருப்பதால்தான் கூண்டில் அடைக்கப்பட்டு வியாபாரத்திற்காக விற்கப்படுவதாக’’ வேதனை கொள்கிறது. அத்துடன் ‘‘யாருடைய பேச்சையும் கேட்காமல் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக பறந்து செல்லக்கூடிய காகமாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ என்கிறது.

    மற்றவர்கள் நம்மை விட சிறந்தவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்கு தெரியாது என்பதை இந்த வீடியோ விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது. யாரும், யாருடனும் ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தாலே மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

    மற்றவர்கள் நம்மை விட சிறந்தவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்கு தெரியாது என்பதை இந்த வீடியோ விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
    கல்லூரி, அலுவலகம், நேர்காணல் ஆகியவற்றில் நீங்கள் தனியொருவனாக மிளிர்வதும், கூட்டத்தில் ஒருவனாக மங்கிப் போவதும் உங்கள் உடல்மொழி வாயிலாகவே நிர்ணயிக்கப்படுகிறது.
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். கல்லூரி, அலுவலகம், நேர்காணல் ஆகியவற்றில் நீங்கள் தனியொருவனாக மிளிர்வதும், கூட்டத்தில் ஒருவனாக மங்கிப் போவதும் உங்கள் உடல்மொழி வாயிலாகவே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் உடல்மொழி பழகுங்கள். உங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ளுங்கள். அதற்கான சில வழிகாட்டல்கள் இதோ...

    1. பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது, தாடையை சொறிவது, மேலும் என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு அந்த விஷயத்தில் ஆர்வமில்லை என்பதை காட்டி உங்கள் சக ஊழியரை, அலுவலக மேலதிகாரியை, கல்லூரி பேராசிரியரை சலிப்படையச் செய்யும். அதனால் இதுபோன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள்.

    2. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண்களைப் பார்த்து பேசுவதின் மூலம் சொல்லிவிட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள் சின்னச்சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் நேர்காணலில், கல்லூரி 'வைவா' உரையாடலில், அலுவலக சந்திப்பில் சம்பந்தப்பட்டவரின் கண்களை நேராக பார்த்தே பேசுங்கள்.

    3. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும், உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் காட்டுவதாய் இருக்கும். அதனால் இடுப்பில் கை வைப்பதை மறந்துவிடுங்கள்.

    4. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.

    5. அலுவலகத்தில் போலியாக புன்னகை செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மனநிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது. மனம் விட்டு சிரித்து உங்கள் இருப்பை பூர்த்தி செய்யுங்கள்.

    6. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர் காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ, அது போலத்தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின்போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது, காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா என பார்ப்பது போன்றவையெல்லாம் நம் மீதான நம்பிக்கையை சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். பிறருடனான உரையாடலில் கண்களைப் பார்த்து பேசிப் பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள். பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம்.

    தனியொருவனாக இருப்பதற்கும், கூட்டத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைப்பிடித்துவிட முடியாது தான். ஆனால் நம் உடலை, நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்...!
    ×