என் மலர்
நீங்கள் தேடியது "Summer Health"
- அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக்கும்.
- தினமும் 4 முதல் 5 லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும்.
இயற்கையின் நியதி அன்றும், இன்றும், என்றும் ஒன்றுதான். அதன் போக்கில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் அதை மாற்ற முயற்சிப்பது தனிமனித பேராசை தான். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அபாய மணி அடிக்கும் நிலை யில், அதற்கான காரணத்தையும் தெள்ளத்தெளிவாக தெரிவித்து விட்டனர். ஆனால் அதை எந்தநாடும் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. எனவே இயற்கையின் தாக்கத்தில் இருந்து நம்மை நாமே தற்காத்து கொள்வது சாலச்சிறந்தது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது.
ஆரம்பமே அனல் பறக்கிறது. தொடக்கமே சுட்டெரிக்கிறது என்றால் போகப்போக .... தமிழ்நாட்டில் பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும், இரவு வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கமும் மக்களை வாட்டுகிறது. அதிலும், அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக்கும். அதற்கு முன்னதாக ஜனவரி முதல் மார்ச் வரையில் ஓரள வுக்கு மட்டுமே வெயில் நிலவும். ஆனால் இப்போதே அதிக வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க சர்க்கரை, ஐஸ் போடாமல் அதிக அளவில் பழச்சாறு குடிக்க வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் பருகுவது நன்று. மக்கள் அதிக நேரம் வெயிலில் சுற்று வதை தவிர்ப்பது நல்லது. நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலத்தில் கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது சிறப்பு.
நீரின் அளவு குறைவதைத் தவிர்க்க தினமும் 4 முதல் 5 லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும். கம்பில் அதிகநார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளதால், கம்பங்கூழ் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, அம்மை மற்றும் வைரஸ் ஜூரம் ஏற்படுவதை தடுக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடைவதுடன், நுங்கிலுள்ள தண்ணீரை, வியர்குருவில் தடவினால் வியர்குருவும் குணமடை யும். வாரம் ஒரு முறை, சிறிதளவு சீரகத்தை நல்லெண்ணெய்யில் பொறித்து, சூடு தணிந்ததும் அந்த எண்ணெய்யை உச்சந்தலையில் வைத்தும், உடலில் பூசியும் குளிக்கலாம்.
* வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, கேழ்வரகு, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். காலையில் மோர், இளநீர் போன்றவையும், மதியம் தயிரும், மாலை வேளைகளில் தர்பூசணி பழச்சாறு, நுங்கு ஜூஸ் போன்றவற்றை அருந்துங்கள்.
* வீடுகளில் ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை காட்டிலும் மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானை யில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீரை குடியுங்கள்.
* ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளையும், ஜீன்ஸ் போன்றவற்றையும் தவிர்த்து பருத்தியில் (காட்டன்) நெய்யப்பட்ட உடைகளை அணியுங்கள். பெண்களும் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம்.
* வெயிலில் வெளியே செல்பவர்கள் முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் கிரீம் தடவிவிட்டு வெளியே செல்லுங்கள். தரமான கூலிங்கிளாஸ் அணிவது நல்லது.
* தினமும் இரண்டு முறை தலை முடியை தூய்மையான நீரில் நன்றாக அலசுங்கள். இரண்டு மூன்று முறை குளிக்கவும். வீட்டு வாசல்களில், ஜன்னல்கள் வெளியே வாழை இலையை தொங்க விடுங்கள்.
* ஏ.சி. அறையில் அதிக நேரம் இருப்பவர்கள் காலை அல்லது மாலை வேளைகளில் வெயில் இல்லாத நேரத்தில் அரை மணிநேரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதுபோன்று தற்காப்பு முறைகளை கடைப்பிடித்து இந்த கோடை வெயிலை அனைவரும் சமாளித்து பாதுகாப்பாக வாழ்வதோடு இயற்கையை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம் என்று உறுதி ஏற்போம்.
- தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
- கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் வெயிலின் நேரடித்தாக்கம் அதிகமாக இருப்பதால், முதலில் மனிதர்களுக்கு சருமத்தை அதாவது தோல்களை தான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தோல்களை முதலில் பராமரிப்பது அவசியம்.
தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அடிக்கடி சுத்தமான நீரினால் முகத்தை கழுவ வேண்டும். பருத்தி ஆடைகள் உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் வகையில் உடுத்திக்கொள்ள வேண்டும். அதிக வாசனை உள்ள சோப், திரவியங்கள், பவுடர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் வெளியே வெயிலில் செல்ல நேரிட்டால் தொப்பி, குடை போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். கோடை வெயில் சிறுவர், சிறுமிகளை அதிகமாக பாதிக்கக்கூடும், எனவே அவர்களை பாதுகாக்க வேண்டும். கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
அதாவது கீரை, இளநீர், நுங்கு, மோர் மற்றும் இதர பழச்சாறுகள், நீர் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கார உணவு வகைகள் மற்றும் மதுபானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்களை தவிர்க்கலாம்.
மேற்கண்ட தகவலை தோல் சிகிச்சை சிறப்பு நிபுணர் தேவ்ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
- பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிரவைக்கும் உணவுப் பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். அதுதான் பெருஞ்சீரகம். இதனை பயன்படுத்தி கோடை காலத்தில் புத்துணர்வூட்டும் பானங்களை தயார் செய்து பருகலாம்.
செலினியம், துத்தநாகம் போன்ற முக்கிய கனிமங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதிலும் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. வழக்கமாக பருகும் டீ, காபிக்கு பதிலாக பெருஞ்சீரக டீ பருகலாம். இது கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் வயிறு உபாதை சார்ந்த பிரச்சினைகளையும் போக்கும்.
சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
பல்வேறு உணவுகள், பானங்களில் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்து பருகி வர, பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சியும் பருகி வரலாம். இது இரைப்பை பிரச்சினைகளை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும். காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் வழிவகுக்கும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வரலாம்.
- செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும்.
- தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.
கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து கடலூர் முதுநகர் எஸ்.டி. மருத்துவமனை டாக்டர் முகுந்தன் கூறியதாவது:-
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு முதல் வழி தண்ணீர். 10 கிலோ எடையுள்ள குழந்தை தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் பருகவேண்டும் என்ற கணக்கில், குழந்தைகளுக்கு எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் அடிக்கடி பருக கொடுக்கவேண்டும். நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதற்கு முன்பு 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு கழுவி கொடுங்கள். குழந்தைகளுக்கு எல்லா வகையான பழங்களும் கொடுக்கலாம். செயற்கை குளிர்பானங்கள் அறவே தவிர்க்கவும். மோர், இளநீர், எலுமிச்சை சாறு முதலியவற்றில், ஏதாவது ஒன்றை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு மாமிச உணவுகள் (சிக்கன், மட்டன்) வாரம் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதுமானது. அடிக்கடி கொடுத்தால் குழந்தைகளுக்கு அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். குழந்தைகளுக்கு ஓட்டல், துரித உணவகங்களில் இருந்து உணவு வகைகளை வாங்கி தருவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.
வெளியில் விளையாடி விட்டு வரும் குழந்தைகளின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவி விடுங்கள்.குழந்தைகளுக்கு இயற்கையை ரசிக்க கற்றுக் கொடுங்கள்.
செயற்கை பொருட்களை (ஸ்மார்ட்போன், டி.வி.) முற்றிலும் தவிர்க்கவேண்டும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைத்து தடுப்பூசிகளையும் மருத்துவர் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோடை காலத்தில் வெப்ப தாக்கம் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும்.
- தோல் நோய்களும் தோன்றும்.
கோடை காலத்தில் வெப்ப தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இளைஞர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும். அவர்கள் விளையாடும்போது வெளியேறும் வியர்வையின் அளவு வழக்கத்தைவிட அதிகரிக்கும். நாவறட்சி ஏற்படும். சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். உடல் சோர்வு, தலை வலி, காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு, அம்மை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தோல் நோய்களும் தோன்றும்.
வியர்வை அதிகமாக வெளியேறும்போது தண்ணீரால் கழுவாமல் விட்டுவிட்டால் நமைச்சல் உண்டாகி அது கொப்பளங்களாக மாறிவிடக்கூடும். ஆதலால் வெயிலில் விளையாடும் குழந்தைகள் இருமுறை குளிப்பது நல்லது.
வியர்வை அதிகமாக வெளியேறும்போது உடலில் உள்ள உப்புச்சத்தின் அளவு குறைய தொடங்கிவிடும். வியர்வையாக வெளியேறும் நீரை ஈடு செய்ய வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவது கூடாது. அதனுடன் உப்புச்சத்தின் அளவையும் ஈடு செய்ய வேண்டும். அதற்கு தண்ணீருடன் உப்பையும் சேர்த்து அருந்த வேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் உப்பு சேர்த்தும் குடித்து வரலாம். அது உடலில் இருந்து வெளியேறிய நீரையும், உப்புச்சத்தையும் ஈடுகட்டும்.
கோடை காலத்தில் சிறு குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வியர்வை வெளியேற்றம் அதிகமாகும்போது சோர்வு அதிகம் ஏற்படும். தாகம் எடுத்தாலும் விளையாட்டிலேயே முழு கவனமாய் இருப்பார்கள். அதனால் அவ்வப்போது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து, அவர்களுக்கு பருக கொடுக்கலாம். தண்ணீரை நன்கு காய்ச்சி கொடுப்பது நல்லது. குழந்தைகள் காற்றோட்டமான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
காற்றோட்டம் குறைவாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதிலும் எண்ணெய்யை காய்ச்சி, ஆறவைத்து உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டி வரலாம். மஞ்சளை அரைத்து உடலில் தேய்த்து வருவதும் நோய்த்தொற்றில் இருந்து காக்கும்.
- எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
- கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். சரி இந்த பதிவில் கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
* பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.
* தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.
* அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
* மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.
* குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.
* குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.
* குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.
* குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.
* சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
- செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெங்களூருவில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை டாக்டரான மாணிக்க வாசகம் கூறியதாவது:-
பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெப்பம் தொடர்பான நோய்களான அம்மை, சூட்டு கொப்பளம், கண் எரிச்சல், தலை சுற்றுதல், சிறுநீரக கல் உள்ள பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.
* வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
* நமது பாரம்பரிய பானங்களான நீர்மோர், பதநீர், நுங்கு, இளநீர், கூழ் வகைகள் எடுத்து கொள்ளலாம். இவற்றில் உடலுக்கு தேவையான நீர்சத்து கிடைப்பதுடன், வெயிலால் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளும் கிடைக்கிறது.
* இயற்கையாக கிடைக்கும் கரும்பு, தர்பூசணி, எலுமிச்சை சாறு, இளநீர் மற்றும் பழச்சாறுகள் உடலுக்கு தேவையான சத்துகளை கொடுப்பதுடன், நோய் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
* சித்த மருத்துவ மூலிகையான நன்னாரி வேரினை கொண்டு தயாரிக்கப்படும் மணப்பாகுவை தண்ணீரில் கலந்து குடித்தால் கண் எரிச்சலில் இருந்து பாதுகாக்கலாம். நமது தாகமும் தணியும்.
* வாரத்தில் 2 முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் அம்மை, சிறுநீரக கல் போன்றவை வராமல்பார்த்து கொள்ளலாம்.
* இரவில் தூங்கும் போது கால் பாதத்தில் நெய் தேய்த்து கொண்டு தூங்கினால், கண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.
* குறிப்பாக நீர் காய்கறிகளான சுரைக்காய், புடலைங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
* வெள்ளரிக்காய் சாப்பிடுவதுடன், உடலில் அதனை பூசிக் கொள்வதன் மூலம் உடல் மற்றும் தோல் அலர்ஜியில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
* எல்லாவற்றுக்கும் மேலாக குளிர்பானங்கள், குளிர்சாதன பெட்டிகளில் வைத்த குளிர்ந்த தண்ணீர், செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது.
- குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த கோடை காலம் குழந்தைக்கு புது பிரச்சினைகளை உருவாக்குகிறது. அதாவது அடினோ வைரஸ், இன்புளூயன்சா, பாவி இன்புளூயன்சா போன்ற வைரஸ் தொற்றுகள் அதிக அளவில் பரப்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகள்தான் இந்த வைரஸ்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பெரியவர்களையும், இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இணை நோய் உள்ளவர்களையும் போட்டு தாக்கி வரும் நிலையில் இது குழந்தைகளை கஷ்டப்படுத்துகிறது.
பெரும்பாலும் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுதல், தொண்டை வலி, கண்களில் கண்ணீர் பொங்கி வடிதல் போன்ற அறிகுறிகளாலேயே ஆஸ்பத்திரிகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கடந்த 2 மற்றும் 3-வது அலைகளில் ஏற்பட்டதைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால் மூச்சுவிட சிரமப்படும் குழந்தைகளுக்கு தான் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுதல், மிக குறைந்த அளவில் சாப்பிடுவது, ஆக்சிஜன் அளவு குறைவு ஆகிய அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை மட்டுமே ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க பரிந்துரைப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் நேற்றைய நிலவரப்படி சென்னையில் உள்ள பிரபலமான குழந்தைகள் நல மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பெரும்பாலான குழந்தைகளை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லை. ஆனால் கோடை விருந்தாக இந்த சாதாரண வைரஸ்கள் தான் குழந்தைகளை கஷ்டப்படுத்துவதாக கூறினார்கள்.
அரசு பொது சுகாதாரத் துறை ஆய்வகத் தரவுகள் படி கடந்த 2 மற்றும் 3-வது அலையை ஒப்பிடும் போது மிக குறைவான அளவே தொற்றுகள் பதிவாகி உள்ளது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்கள் வீரியத்துடன் இருந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்போது ஒமைக்ரான் வைரஸ் குடும்பத்தின் உட்பிரிவுகள்தான் பரவி வருகிறது. இவை குழந்தைகளை தாக்கினாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதலான விசயம். மேலும் இது வீரியம் குறைந்த வைரஸ் என்ற முடிவுக்கும் வரமுடிவதாக துணை இயக்குனர் ராஜூ கூறினார். மேலும் அவர் கூறும்போது, இணை நோய் பாதிப்பு உடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.
- அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வருடம், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கரூர், சேலம், வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் அதிக அளவில் வெயில் பதிவாகி வருகிறது.
அதாவது, தினமும் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால், மர நிழலை தேடி ஓடுவதை போல், குளிர்பானங்களை தேடி அதனை ஆசையாய் பருகிவருகிறோம். இந்த நிலையில் வெயில் காலங்களில் காது, மூக்கு, தொண்டை பிரச்சினை அதிகமாகி வருகிறது. இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறியதாவது:-
தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், உடலில் உள்ள நீர் சத்துகள் உடனடியாக குறைந்து விடுகிறது. அதனை அதிகப்படுத்துவதற்கு குளிர்பானங்களை சாப்பிடுகிறோம். அதாவது, குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களால் மூக்கடைப்பு பிரச்சினை, அடிக்கடி தும்மல் வரும். அதனை தொடர்ந்து, காது வலி வருகிறது. அதன்பின்னர், தொண்டை வலியும் வருகிறது. குளிர்பானங்களை காட்டிலும் எலுமிச்சை சாறு, டீ போன்றவற்றை அருந்தலாம். வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாக இதுபோன்ற உணவுகள் உள்ளது. முடிந்த வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான பானங்களை கோடைக்காலத்தில் அருந்த வேண்டும்.
அதுபோல், வெயிலில் சென்று விட்டு உடனடியாக வீட்டிற்கு வந்த உடன், குளிர்ந்த பானங்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், உடலில் உள்ள வெப்பநிலையும், அறையில் உள்ள வெப்பநிலையில் சமமாக இருக்காது. எனவே, வெளியில் சென்று விட்டு வந்தால், குறைந்தபட்சம் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த பானங்களை சாப்பிடலாம்.
வெயில் காலத்தில் பெரியவர்களும், குழந்தைகளும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.
கோடைக்காலம் வந்தாலே காது, மூக்கு, தொண்டை பிரச்சினை தான் அதிக அளவில் வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகம் இருப்பதால் காது, மூக்கு, தொண்டை பிரிவிற்கு சிகிச்சைக்கு அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு வருகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும், வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோடை விடுமுறை என்பது குழந்தைகளுக்கு வருடத்தின் மிகவும் சுவாரஸ்யமான காலம்.
- கைவினைப்பொருளை உருவாக்குவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம்.
தமிழகம் முழுவதும் பள்ளி தேர்வுகள் முடிவுற்ற நிலையில் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மற்ற வகுப்புகளுக்கும் அடுத்த வராம் முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தாலும் கொளுத்தும் கோடை வெயிலால் குழந்தைகள் உடல்நலனில் அதிக அக்கற்றை காட்ட வேண்டிய சூழல் பெற்றோருக்கு ஏற்பட்டு உள்ளது.
பள்ளிக்கூடம் இல்லை, சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை, படிப்பு இல்லை என்பதால் கோடை விடுமுறை என்பது குழந்தைகளுக்கு வருடத்தின் மிகவும் சுவாரஸ்யமான காலம். கோடைகாலம் என்பது புதிய விஷயங்களை ஆராய்வதற்கும், பயணம் செய்வதற்கும், கண்டு பிடிப்பதற்கும் சிறந்த நேரம்.
இந்த நேரத்தில் குழந்தைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருக்கிறார்கள். ஒன்றும் செய்யாமல் நாள் முழுவதும் குழந்தைகள் இருக்கும்போது, அவர்களை நிர்வகிப்பது பெற்றோர்களுக்கு கடினமாக இருக்கலாம். எனவே, கோடை விடுமுறையை வீணாக்குவதற்குப் பதிலாக, வீட்டில் இருந்தபடியே அதை சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாடு இல்லாமல் சுத்தமான காற்றில் நடப்பதால் அதிகாலை நடைப்பயிற்சி மிகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது. தவிர, கவனச் சிதறல்களிலிருந்து விலகி உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உரையாடலை நடத்தவும், அவர்களை நன்கு அறிந்து கொள்ளவும் முடியும்.
உங்கள் குழந்தைகளை சமையலறை வேலைகளில் ஈடுபடுத்தும் போது, அவர்களுக்கு சில அடிப்படைக் கற்றலைக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்களுடன் வேடிக்கையாகவும் நேரத்தை செலவிடலாம். இதனால் குழந்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும். நீங்கள் ஒருபோதும் யோசிக்காத யோசனைகளை அவர்கள் கொண்டு வர முடியும்.
செல்போன்கள் மற்றும் டேப்லெட்களில் கேம்களை விளையாடுவதால், நல்ல பழைய போர்டு கேம்கள் பின்சீட்டைப் பெற்றுள்ளன. செல்போன் கேம்களால் உற்சாகமான எதுவும் நடக்கவில்லை. எனவே உங்கள் கோடை விடு முறையை குடும்பத்துடன் சில பலகை விளையாட்டுகளில் செலவிடுங்கள்.
ஆண்டு முழுவதும் குழந்தைகள் பொருட்களை சேகரிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால் அவற்றை அடுக்கி வைக்கவோ, வரிசைப்படுத்த அவர்களுக்கு நேரம் இல்லை. அதை நீங்களே செய்ய தொடங்கும்போது, விரைவில் அவர்களும் இணைவதை நீங்களே காண்பீர்கள்.
பள்ளி நாட்களில் குழந்தைகள் சீக்கிரம் தூங்கச் செல்ல வேண்டும். விடுமுறை என்பது அவர்கள் சற்று தாமதமாக எழுந்திருக்கும் நேரம். ஒவ்வொரு வார இறுதியில் ஒரு நல்ல திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும். குடும்பமாக ஒன்றாக அமர்ந்து திரைப்படத்தை ரசிப்பதை விட வேடிக்கை வேறு எதுவும் இல்லை
இங்கு புத்தகங்களுக்குப் பஞ்சமில்லை. மேலும் பல வந்துகொண்டும் இருக்கின்றன. புத்தகங்கள் வாழ்க்கை அடிப்படைகளை கற்றுக்கொள்ளவும் உதவும் ஒரு கருவியாகும். ஒவ்வொரு புத்தகமும் கற்பிக்க ஏதாவது உள்ளது.
எனவே படிக்கும் பழக்கம் உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கும் சிறந்த பழக்கங்களில் ஒன்றாகும். புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து படித்து, புத்தகத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் தோட்டம் இருந்தால், அல்லது நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் பிள்ளைக்கு ஒரு செடியை பார்த்துக் கொள்ள சொல்லுங்கள்.
ஒரு செடி எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை அவருக்கு வழி காட்டுங்கள். செடி வளர்வதை பார்ப்பது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருக்கும்.
கைவினைப்பொருளை உருவாக்குவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஓவியம் வரைய செய்வது போன்ற விஷயங்களிலும் ஈடுபட செய்யலாம்.
ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு கோடை விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கும் குழந்தைகளின் நேரத்தை, ஒரு சரியான திட்டமிடல் மூலம் ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் மறக்கமுடியாத விடுமுறையாக மாற்றிக் கொள்ளலாம்.
எனவே, இந்த திட்டங்களை கடைபிடித்து விடுமுறையை நிச்சயமாக வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றலாம்.
- மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
- உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது.
கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது. இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மாணவர்கள் கோடைகாலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.
ஆடை தேர்ந்தெடுப்பிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது. கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதிக வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஒவ்வாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதனை சமாளிக்க சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.
கோடைகால விடுமுறையில் நேரத்தை டி.வி, மொபைல் போன் பார்ப்பது என வீணடிக்காமல் கோடைக்கால பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், நீச்சல் பயிற்சி போன்ற வகுப்புகளில் சேரலாம். காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நிற்பதால் வைட்டமின் டி அதிகளவில் உடம்பில் உற்பத்தி ஆகிறது. மேலும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது. காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.
ப.கோபிகா
12-ம் வகுப்பு,
ஜெ.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
- கோடைக்காலத்தில் வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.
- உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே.
நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.
பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.
இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.
இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.
எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..
கோடை வெயில் கொளுத்ததொடங்கினாலும், மதுக்கடைகளில் விற்பனைவெளுத்து வாங்குகிறது. குறிப்பாக மது பானங்கள் தவிர மதுப்பிரியர்களின் கிக் கேற்றும் குளிர்பானமாக திகழும் பீர் விற்பனை பொங்கி வழிகிறது. இதனால் அதற்கு சில வேளைகளில்தட்டுப்பாடும் உள்ளதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் வெயில் காலங்களில் பீர், மற்றும் மது பானங்களை அருந்துகிறவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக கூறுகின்றனர். வெயில் காலங்களில் மது அருந்தும்போது உடலில் உள்ள ரத்த குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிகளவில் வெளியேறும்.
இந்த நிலையில் போதையால் தாகம் தடைபடும்போதும், தவிர்க்கப்படும் போதும், தண்ணீர் அருந்தக்கூடிய உணர்வு ஏற்படுவதில்லை. இந்த நிலையில் போதையில் தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது உடம்பில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறும். இதனால் ரத்த நாளங்களில் அதிக பாதிப்புஏற்படும்.
இதனால் அடைப்புஏற்பட்டு இதயத்தில் பிரச்சினை ஏற்படும் என்கின்றனர். ஆகவே ஜில்பீர் மட்டுமின்றி, எந்த வகையான பீர் மற்றும் மது பானங்களை வெயில் காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆபத்தானது என்பது மருத்துவர்களின் ஆலோசனை.






