search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mutharamman Kovil"

    • முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா வருஷாபிசேகத்துடன் தொடங்கியது.
    • இன்று இரவு 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா நேற்று கணபதி ஹோமம், யாகசாலைபூஜை வருஷாபிசேகத்துடன் தொடங்கியது. நேற்று மாலை நாட்டில் வறுமை நீங்கி, செழுமை பெற பாடல்கள்பாடி சிறப்பு திருவிளக்கு வழிபாடு நடந்தது.வில்லிசை, நள்ளிரவு 1மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம்தெருவீதிபவனிவந்தது.

    இன்று காலை 10 மணி மற்றும் இரவு 9 மணிக்கு வில்லிசை, பக்தர்கள் நேமிசங்கள் படைத்தல், நண்பகல் 1 மணி, நள்ளிரவு 1 மணி ஆகிய நேரங்களில் கும்பம் தெருவீதி வருதல், இன்று இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை 2-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சல் பெட்டி ஊர்வலம், காலை 11 மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் வில்லிசை, நண்பகல் 1 மணி, நள்ளிரவு 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பூஜைகளுடன் கும்பம் தெருவீதிவருதல் மாலை 3மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கும். 3-ந்தேதி காலை கொடை விழா நிறைவு பூஜையுடன் பக்தர்களுக்கு வரி பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    ×