என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "May 17 movement"

    • காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ரெியல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். இதற்காக அவர் இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தார்.

    இதற்கிடையே பிரதமரின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கினார்.

    இதில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பசும்பொன் பாண்டியன், விடுதலை தமிழ்ப்புலிகள் அமைப்பு தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மோடிக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் மோடி வருகையை கண்டித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கையில் கருப்பு கொடியுடன் பிரதமர் மோடியை கண்டித்தும், புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, பழனிக்குமார் வட்டார தலைவர்கள் ஜெயராஜ், வேல்முருகன், செல்வராஜ், செந்தில், நகரத் தலைவர் சவுந்தர், எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட தலைவர் ராஜா தேசிங்கு மற்றும் நிர்வாகிகள் மனோகரன், பாலகிருஷ்ணன், முனியசாமி போஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.#May17movement #ThirumuruganGandhi
    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம் எனும் சமூக அமைப்பினை துவக்கினார். இந்த இயக்கத்தினை தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கினார்.  இது தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியீடாக வைத்து தமிழர் உரிமைகளைச் சார்ந்து இயங்கும் சமூக அமைப்பாகும்.



    இந்த அமைப்பின் தலைவரும் , ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், அவரது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் உரையாற்றிய திருமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவறான செய்திகளை பரப்பியதாகவும், பொது மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மே 17 இயக்கத்தின் இதர ஆதரவாளர்கள் பெரியசாமி, அருள் முருகன், டைசன் ஆகியோரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #May17movement #ThirumuruganGandhi 

    ×