search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caste wise census"

    • ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
    • "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒருவரை சிறியவர் மற்றும் பெரியவர் எனக் கருதும் இந்த மனநிலையை மாற்றுவது முக்கியம்.
    • நாடு முழுவதும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ நீதி யாத்திரை'யின்போது அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எல்லோரது மனதிலும் ஒரு கேள்வி எழுகிறது. பிரதமர் மோடி தன்னை பாராளுமன்றத்தில் 'ஓபிசி' என்று கூறுகிறார். பின்னர் நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழை 2 ஜாதிகள் மட்டுமே உள்ளன என்று சொல்லத் தொடங்கினார்.

    எனவே பிரதமர் முதலில் தெளிவான முடிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

    ஒருவரை சிறியவர் மற்றும் பெரியவர் எனக் கருதும் இந்த மனநிலையை மாற்றுவது முக்கியம்.

    ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினராக இருந்தாலும் அவர்களை கணக்கிடாமல் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூகநீதியை வழங்க முடியாது.

    நாடு முழுவதும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு பிரதமர் ஏன் தயங்குகிறார்? இவ்வாறு கூறினார்.

    • சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரத மருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல.

    இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது. சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம், குறித்த கருத்தரங்கம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட ஓ.பி.சி. பிரிவு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட ஓ.பி.சி தலைவர் ஜான் கென்னடி, மாநகர் மாவட்ட ஓ.பி.சி. துணை தலைவர் ரிச்சர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளர்கள் மோகன், குச்சூரி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் நித்யபிரியா ரவி, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் தனசிங் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினர்.
    • பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    மருத்துவர் சமுதாயத்தின் டீம் என்ற அமைப்பின் 10-வது ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட ஐம்பெரும் விழா வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ரமேஷ் பாபு, அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் நமச்சிவாயம், செயலாளர் செல்வ சூடாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அமைப்பின் முன்னாள் பொருளாளர் மாயாண்டி உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாயாண்டி உருவப்படத்தை திறந்து வைத்து பேசினர். இதனைத் தொடர்ந்து மருத்துவ சமுதாயத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளாக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கும் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு, கல்வி வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ படிப்பில் அந்த சமுதாயத்திற்கு சிறப்பு ஒதுக்கீடு வேண்டும். தியாகி விஸ்வநாததாசுக்கு சென்னை மற்றும் நெல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×