உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பாஜகவின் அரசியல் முடிந்துவிடும் - ராகுல் காந்தி

மோடிக்கு சரணடையும் வரலாறு உண்டு.பாஜக மக்கள் தொகை கணக்கெடுப்பு மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளை முடிவு செய்வார்கள்.
உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பாஜகவின் அரசியல் முடிந்துவிடும் - ராகுல் காந்தி
Published on

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.

நாட்டில் சாதி இருப்பதை மறுக்கும் மோடி எப்படி ஓ.பி.சி.யாக ஆனார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிகாரில் ராஜிகிர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "தாம் ஒரு ஓபிசி என்று எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கும் மோடி, சாதி கணக்கெடுப்பு விஷயத்தில் நாட்டில் சாதி இல்லை என்று கூறுகிறார். மோடிக்கு சரணடையும் வரலாறு உண்டு. டிரம்ப் கூட நரேந்திர மோடியை பணிய வைத்ததாக 11 முறை பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

ஆனால் மோடி ஒரு முறை கூட அதற்கு எதிராக எதிர்வினையாற்றவில்லை. ஏனென்றால் அதில் உண்மை இருக்கிறது. அவர்கள் ஒருபோதும் சாதி கணக்கெடுப்பை உண்மையாக செயல்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் அப்போது அவர்களின் அரசியல் முடிவுக்கு வரும்" என்று ராகுல் கூறினார்.

மேலும் தனது எக்ஸ் பதிவில் , சாதிவாரி கணக்கெடுப்புக்கு ராகுல் காந்தி இரண்டு மாதிரிகளை முன்வைத்தார். ஒன்று பாஜக மாதிரி, மற்றொன்று தெலுங்கானா மாதிரி. சாதிவாரி கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் முக்கியமானவை.

பாஜக மக்கள் தொகை கணக்கெடுப்பு மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளை முடிவு செய்வார்கள்.

அதே நேரத்தில், தெலுங்கானா மாதிரியில், கேள்விகள் வெளிப்படையாகக் கேட்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பது குறித்து பழங்குடி குழுக்கள், சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்டதாகவும், சுமார் 3 லட்சம் பேர் கேள்விகளைத் தயாரித்துள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும், அதில் சாதியும் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com