search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Studio"

    • ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த்.
    • சினிமாவில் சிகரம் தொட்டு அரசியலுக்கு காலடி வைக்கும் போது கூட மதுரை மண்ணில் தான் விஜயகாந்த் முதல் அரசியல் மாநாட்டை தொடங்கி கட்சி பெயரையும் அறிவித்தார்

    ஒருவனின் மரணத்தில்... குழந்தை அழுதால் அவன் நல்ல தகப்பன்..., மனைவி அழுதால் அவன் நல்ல கணவன்..., ஆனால் அந்த ஊரே அழுதால் அவன் தான் தலைவன்...!!

    இது ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் பேசிய பஞ்ச் டயலாக். எப்போதுமே பஞ்ச் டயலாக் பேசுவதில் ரஜினிக்கு போட்டியாக விஜயகாந்த் படங்களிலும் குறையிருக்காது. தனது ரசிகர்களை மகிழ்விக்க அரசியல் நெடி கலந்த பஞ்ச் டயலாக்குகள் பேசுவதில் விஜயகாந்த்துக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம்.

    சிறு வயது முதலே தான் வளர்ந்த மதுரை மண்மீது அளவற்ற பாசம் கொண்டவர் தான் விஜயகாந்த். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகர காவல் திரைப்படத்தில் "வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை" என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரசித்தம் பெற்றது என்றால் மிகையில்லை.

    சினிமாவில் சிகரம் தொட்டு அரசியலுக்கு காலடி வைக்கும் போது கூட மதுரை மண்ணில் தான் விஜயகாந்த் முதல் அரசியல் மாநாட்டை தொடங்கி கட்சி பெயரையும் அறிவித்தார். அந்த அளவுக்கு தன்னை வளர்ந்த மதுரை மண்ணை தாயாக நேசித்தவர் விஜயகாந்த். அவரது ஆரம்ப கால வாழ்க்கையின் சில பிளாஷ் பேக், இதோ...

    அழகர்சாமி- ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த விஜயராஜ் மதுரை தெற்கு வாசல் பகுதியில் பள்ளி படிப்பை தொடர அவரது தந்தை கீரைத்துரை பகுதியில் ரைஸ்மில் நடத்தி வந்தார். விஜயராஜூக்கு படிப்பு சரியாக வராததால் பத்தாம் வகுப்போடு பள்ளிக் கூடம் செல்வதற்கு குட்பை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த நேரத்தில் தன் தந்தை நடத்தி வந்த ரைஸ்மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்தார் விஜயராஜ். அப்போதே அவருக்கு சினிமா மீது அளவற்ற மோகம் இருந்தது. பகலில் ரைஸ் மில்லில் வேலை பார்த்துவிட்டு இரவுகளில் சினிமா கொட்டகைகளில் படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டார் அதிலும் எம்.ஜி. ஆர். படங்களை விரும்பி பார்த்து வந்தார் விஜயராஜ்

    எம்.ஜி.ஆர். போல நாமும் பிற்காலத்தில் நடிகராக, தலைவராக வரவேண்டும் என்று உத்வேகம் அப்போதே அவருக்குள் முளைவிட தொடங்கியது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தனது வாலிப நண்பர்களுடன் அவ்வப்போது பேசிக் கொண்டும், இரவு நேரங்களில் பார்த்த சினிமாவின் கதைகளை அப்படியே அவர்களுக்கு பாடம் எடுப்பது போல ஒப்பிப்பதும் அவரது அன்றாட வழக்கமாக இருந்தது .

    இந்த நேரத்தில் அவரது நண்பர்கள் மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒரு ஸ்டு டியோ இருக்கிறது அதன் பெயரே ராசி. அந்த ஸ்டுடியோவில் போய் படம் எடுத்தால் நீ சினிமாவுக்கு போய்விடலாம் என்று ஆசை காட்டினார்கள். எப்போதும் சினிமா வாய்ப்புக்காக கனவு கண்ட விஜயராஜுக்கு அது நன்றாக தோன்றி யது. இந்த வாய்ப்பை கெட்டி யாக பிடித்துக் கொள்ள விரும்பினார் விஜயராஜ்.


    நேராக கரிமேடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்றார். ஸ்டுடியோவின் உரிமையாளரான ஆசைத்தம்பியை சந்தித்து தன்னை அறிமுகம் செய்தார் விஜயராஜ் அப்போது அவரும் மதுரைக்கார வாலிபரின் ஆசைக்கு பச்சை கொடி அசைத்து தானும் உதவுவதாக கூறினார். ஆசை தம்பிக்கு பல்வேறு பணிகள் இருந்த காரணத்தால் இரவு 11 மணிக்கு மேல் வரும்படி விஜயராஜியிடம் கூறி அனுப்பி வைத்தார். விஜயராஜ் சோர்ந்து விடவில்லை பகலில் ரைஸ்மிலில் பணிபுரிந்து விட்டு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அந்த ஸ்டூடியோவில் விதவித மாக போஸ்களை கொடுத்து தன்னை ஒரு திரை கலைஞ ராக உருவாக்க அடித்தள மிட்டார். ஆசைத்தம்பி எடுத்த நள்ளிரவு நேர ஸ்டில்கள் தான் விஜயராஜின் சினிமா ஆசைக்கு கை கொடுத்து வாய்ப்புக்கு வலுசேர்க்கும் வரப்பிரசாதமாக அமைந்தது.

    இந்த படங்களை எடுத்து கொண்டு பல சினிமா கம்பெனிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள் என்று ஏறி இறங்கினார் விஜயராஜ். 1979-ம் ஆண்டு "இனிக்கும் இளமை" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் தான் ரஜினி காந்த், கமலஹாசனுக்கு போட்டியாக விஜயராஜ் உருவெடுத்தார். அவரது நண்பர்களின் ஆலோசனைப்படி தனது பெயரையும் விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டு திரையுலகத்தில் தடம் பதித்தார். அவர் தொட்ட சிகரம் மலைப்பானது. தனது நிறத்தால், உடல் தோற்றத்தால் தமிழ் திரையுலகில் பல்வேறு அவமானங்களையும் சந்திக்க விஜயகாந்த் தவறவில்லை. அவமானத்தை அவார்டாக மாற்றி மாபெரும் சாதனையை தமிழ் திரை உலகில் நிகழ்த்தினார் என்றால் அது விஜயகாந்த் ஒருவரால் தான் முடியும். ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த்.

    சினிமா துறை மட்டுமல்ல அரசியலிலும் மாபெரும் வெற்றியை விஜயகாந்த் பெற்றார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகி எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். வாழ்நாளில் பலருக்கு ஏணியாக வாழ்ந்த வர். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகத்தை பட்டித் தொட்டி எங்கும் ஒலிக்க செய்தவர் விஜயகாந்த். இவரது மரணம் மதுரை மண்ணில் நீங்காத சோக அலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல் மது ரையின் அனைத்து பகுதிக ளிலும் விஜயகாந்தின் சோக கீத திரை இசை அவரது நினைவை ஒலித்தபடி உள்ளன. அவனியாபுரம் பகுதியில் அவரது ரசிகர்கள் மொட்டை அடித்து மண்ணின் மைந்தனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    படிப்பு வராவிட்டாலும் வந்த நடிப்பை ஒரு வாய்ப்பாக பிடித்து தமிழக திரையுலக மற்றும் அரசியல் வரலாற்றில் விஜயகாந்த் பிடித்த இடம் மகத்தானது யாரும் குறை சொல்ல முடியாத பொது வாழ்க்கைக்கு சொந்தக்கார ரான இந்த "நல்லவன்" புகழ் இம்மண்ணில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    பாலமுருகனின் ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பால முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகேயுள்ள கட்டமுத்துபாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). இவர் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இன்று முகூர்த்த தினம் என்பதால் இவருக்கு திருமண ஆர்டர் கிடைத்தது. இதற்காக நேற்று மாலையில், கடையை பூட்டிவிட்டு ஊழியர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.இந்நிலையில் ஸ்டூடியோவிற்கு அருகில் உள்ள கடைக்காரர்கள் இன்று காலையில் அவர்களது கடையை திறக்க வந்தனர். அப்போது பாலமுருக னின்விஸ்டூடியோன் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக பால முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அவர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாலமுருகனும், போலீசாரும் விரைந்து வந்தனர்.ஸ்டூடியோவிற்குள் சென்று பார்த்த போது, உயர்ரக டிஜிட்டல் கேமிரா, டிரோன் கேமிரா, லேப்டாப், சேமிப்பு உண்டியல் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உடுமலை அண்ணா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வர்கீஸ் என்பவர் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் இவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .இருப்பினும் கடையில் இருந்த கேமராக்கள், பிரிண்டர் மற்றும் மின்சாதன பொருட்கள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

    தீ விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பஸ் நிலையம் அருகில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×