என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்டூடியோவிற்குள் பொருட்கள் சிதறிக் கிடப்பதை படத்தில் காணலம்.
ஸ்டூடியோவிற்குள் இருந்தடிரோன், டிஜிட்டல் கேமிரா, லேப்டாப் திருட்டுபண்ருட்டி போலீசார் விசாரணை
கடலூர்:
பண்ருட்டி அருகேயுள்ள கட்டமுத்துபாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). இவர் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இன்று முகூர்த்த தினம் என்பதால் இவருக்கு திருமண ஆர்டர் கிடைத்தது. இதற்காக நேற்று மாலையில், கடையை பூட்டிவிட்டு ஊழியர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.இந்நிலையில் ஸ்டூடியோவிற்கு அருகில் உள்ள கடைக்காரர்கள் இன்று காலையில் அவர்களது கடையை திறக்க வந்தனர். அப்போது பாலமுருக னின்விஸ்டூடியோன் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக பால முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அவர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாலமுருகனும், போலீசாரும் விரைந்து வந்தனர்.ஸ்டூடியோவிற்குள் சென்று பார்த்த போது, உயர்ரக டிஜிட்டல் கேமிரா, டிரோன் கேமிரா, லேப்டாப், சேமிப்பு உண்டியல் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






