என் மலர்
நீங்கள் தேடியது "Bengaluru Chinnaswamy Stadium"
- இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.
பெங்களூரு:
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.
இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மைதானத்தில் போட்டியை நடத்த காவல்துறையின் அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. விதித்த காலக்கெடு கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக சின்னசாமி மைதானம் மகளிர் உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை பி.சி.சி.ஐ. தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருடத்திற்குப் பிறகு கோப்பையை வென்றதால் வெற்றி கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. கடந்த மாதம் 4ஆம் தேதி வெற்றி கொண்டாட விழாவில் கலந்து கொள்ள லட்சகணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
கூட்டல் நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் இரண்டு பகுதிகளான அறிக்கையை கடந்த 11ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த அறிக்கை நேற்று நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சுருக்கம் அனைத்து அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அறிக்கை குறித்து இதுவரை அமைச்சரவையில் விவாதிக்கப்டவில்லை. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதிப்போம். மீடியாக்கள் குறிப்பிட்ட சில விசயங்களை பதிவு செய்துள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் அது குறித்து பேசுவேன்.
சிறப்பு விசாரணைக் குழு தேவை என்றால், அது அமைக்கப்படும். அது காவல்துறையின் அறிக்கையை சார்ந்தது. தனிநபர் (சுமார் 100 உடல்களை புதைக்கப்பட்டதை பார்த்ததாக கூறும் முன்னாள் தூய்மை பணியாளர்) 10 வருடங்களாக தலைமறைவாக இருந்த அவர், இப்போது காவல்துறை முன் வாக்குமூலம் அளித்து, தனக்கு வேண்டியதை சொல்லிவிட்டார்.
இறந்த உடல்களை அடக்கம் செய்ததில் தானும் ஒருவர் என்றும், அவை புதைக்கப்பட்ட இடத்தைக் காண்பிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஓரிரு நாட்களில் போலீசார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என கார்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90% வாய்ப்பு
- மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் வழங்கப்பட்ட உணவினால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக 23 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விரிவான நடத்த நடத்த வேண்டுமென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கேன்டீனில் உள்ள உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் 14 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பல புகார்கள் வந்ததாகவும், அதனால் தான் போட்டிக்கு முன்பே உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள்.
- நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த போட்டி குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், "டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள். நானும் அவரும் திரும்பவும் விளையாடுவோமா? ஒருவேளை இதுதான் கடைசிப் போட்டியா? எது நடக்கும் என்று தெரியாது.
நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம். நாங்கள் இருவரும் ஒரே போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சிறப்பான சந்தர்ப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
42 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற போகிறார் என்பதைத்தான் விராட் கோலி சூசகமாக சொல்கிறாரோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிவராஜ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இன்னைக்கு ஜெயிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
- போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
- இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியை காண பெண்கள் பிரீமியர் லீக் கோப்பை வென்ற RCB மகளிர் அணியை சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா, ஷ்ரேயாங்கா பாட்டீல் உள்ளிட்ட பல வீராங்கனைகள் வருகை தந்துள்ளனர்.
பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
- இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது. ஓவர்கள் குறைக்கப்படமால் 20 ஓவர் போட்டியாகவே மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- கோலி - டு பிளிசிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. கோலி - டு பிளிசிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர். அதிரடியாக விளையாடிய கோலி 47 ரங்களில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் நிதானமாக ஆட்டத்தை துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடிய டு பிளிசிஸ் 54 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார்.
பின்னர் இணைந்த படிதார் - க்ரீன் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சித்தடித்தனர். அதிரடியாக விளையாடிய படிதார் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 14 ரென்னும் மேக்ஸ்வெல் 16 ரென்னும் அடித்து ஆட்டமிழந்தனர். கிறீன் 38 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.
சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
சென்னை அணிக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி. இப்போட்டியில் 201 ரன்கள் அடித்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் கூட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
- தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
- கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளது.
உலக அளவில் பேசப்படும் டி20 தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் 18-வது சீசன் இந்த மாதம் 22-ந் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் நிறைய வீரர்கள் மற்ற அணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஹோம் மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர்தான் பயன்படுத்தப்படும் என பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






