என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் உலகக்கோப்பை தொடர்"
- முதலில் ஆடிய வங்கதேசம் 178 ரன்கள் எடுத்தது.
- இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 103 ரன்களுக்கே 6 விக்கெட் இழந்து தடுமாறியது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 தொடரில், இன்று கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
முதலில் ஆடிய வங்கதேசம் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. சோபனா மோஸ்தாரி 60 ரன்கள் அடித்தார்.
இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
179 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 103 ரன்களுக்கே 6 விக்கெட் இழந்து தடுமாறியது.
பின்னர், கேப்டன் ஹீதர் நைட் மற்றும் சார்லி டீன் இணை சேர்ந்து, ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் சேர்த்து, இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.
- பிரதிகா ராவல் (31), ஸ்மிருதி மந்தனா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32), தீப்தி சர்மா (25) ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தனர்
- பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில், டயானா பெய்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கையின் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆடி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் பிரதிகா ராவல் (31), ஸ்மிருதி மந்தனா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32), தீப்தி சர்மா (25) ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தனர்
அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்து அசத்தினார். ஹர்லீன் டில் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில், டயானா பெய்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் பாத்திமா சனா மற்றும் சாதியா இக்பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தானுக்கு 50 ஓவர்களில் 248 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.
பெங்களூரு:
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கேரளாவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அங்கு போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது.

இதனால் பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டள்ளது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் முதல் அரையிறுதி போட்டி கவுதாத்தி அல்லது இலங்கையில் நடைபெறும். 2-வது அரையிறுதி நவி மும்பையில் நடைபெறும். இறுதிப்போட்டி நவி மும்பை அல்லது இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.
பெங்களூரு:
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.
இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மைதானத்தில் போட்டியை நடத்த காவல்துறையின் அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. விதித்த காலக்கெடு கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக சின்னசாமி மைதானம் மகளிர் உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை பி.சி.சி.ஐ. தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






