என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.கே.சிவகுமார்"

    • கர்நாடக சட்டப்பேரவையில் இன்று உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சட்டப்பேரவை வளாகத்துக்கு கர்நாடக துணை முதலமைச்சர் சைக்கிளில் வந்தார்.

    உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகத்துக்கு கர்நாடக துணை முதலமைச்சர் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நடைப்பயணத்தை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நடைப்பயணத்தை முடித்துவிட்டு, சட்டப்பேரவை வளாகத்துக்கு டி.கே.சிவக்குமார் சைக்கிளில் வந்தார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவரது அருகில் இருந்த பாதுகாப்புப் படையினர் டி.கே.சிவக்குமாரை பிடித்ததால், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

    • ஆர்.சி.பி. அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது.
    • சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இச்சம்பவத்துக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து, இன்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். அங்குள்ள மகாத்மா காந்தி சிலையின் படிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    • என் பாஜக நண்பர்களுக்கு நமஸ்காரம், உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்
    • யாத்திரையில் இறங்கியவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.

    வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

    ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    முன்னதாக கர்நாடக பாஜக நேற்று 16 நாள் 'ஜனக்ரோஷ யாத்ரே' என்ற மாநில அளவிலான ஜனக்ரோஷ யாத்திரை பிரச்சாரம் ஒன்றை தொடங்கியது. கர்நாடகாவில் விலைவாசி உயர்வு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி இந்த பிரசார யாத்திரையை கர்நாடக பாஜக தொடங்கியது.

    இதையும், மத்திய அரசு கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் தொடர்புபடுத்தி டி.கே.சிவகுமார் விமர்சனம் வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட காணொளியில் கூறியதாவது, "என் பாஜக தோழர்களுக்கு நமஸ்காரம், நீங்கள் அனைவரும் ஜனக்ரோஷ யாத்திரை செய்கிறீர்கள், உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ஆனால் அதே நேரத்தில் இந்திய அரசு, உங்கள் பாஜக அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளது.

    இப்போது மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களின் எதிர்வினையை நான் அறிய விரும்புகிறேன். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் போதிலும், மத்திய அரசு ஏன் பெட்ரோலியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது என்பதை பாஜக தலைவர்கள் மாநில மக்களுக்கு விளக்க வேண்டும்.

     ஜனக்ரோஷ யாத்திரையில் இறங்கியவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ள விலைகளைக் குறைக்க பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், அல்லது அவர்கள் யாத்திரையை முடித்துவிட்டு, பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்.

    இதை விட்டுவிட்டு, இந்த யாத்திரையின் கேலிக்கூத்தை அவர்கள் தொடர்ந்தால், அவர்கள் நிச்சயமாக பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று தெரிவித்துள்ளார். 

    • கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார்.
    • அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கறுப்புக்கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், "அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    இந்த வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சித்தராமையாவை முதல்வர் நார்காலியில் இருந்து அகற்றி கர்நாடக முதல்வராக பாடுபடும் டி.கே.சிவகுமாரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து கர்நாடகா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், "அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை" என்று தெரிவித்தார்.

    • நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது.
    • ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், "கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல். இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது"

    • நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது
    • நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது

    கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசினார் டி.கே.சிவகுமார். அப்போது, "நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

    நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் இந்தியா கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார்.
    • டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கடந்த சனிக்கிழமை தார்வாட் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது ஹாவேரி சவனூர் நகரில் பிரசார பேரணியில் பங்கேற்பதற்காக காரில் இருந்து இறங்கியபோது அவரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் டி.கே.சிவகுமாரால் அங்கிருந்து மெதுவாகதான் நகர முடிந்தது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த நகராட்சி உறுப்பினரும், காங்கிரஸ் தொண்டருமான அல்லாவுதீன் மணியார் என்பவர் ஆர்வத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார். இதனால் டி.கே.சிவகுமார் அந்த காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அல்லாவுதீன் மணியாரை கூட்டத்தில் இருந்து ஒதுக்கி தள்ளி டி.கே.சிவகுமாரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி காமிராக்களில் பதிவானது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டி.கே.சிவகுமார் காங்கிரஸ் உறுப்பினரை அறைந்த சம்பவம் குறித்து பா.ஜனதா ஐ.டி.விங் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் டி.கே.சிவகுமார் ஒருவரை தாக்குவது இது முதல் முறையல்ல. டி.கே.சிவகுமாரின் தோளில் கை வைத்தது காங்கிரஸ் மாநகர உறுப்பினர் செய்த குற்றமா? காங்கிரஸ்காரர்கள் ஏன் காங்கிரசுக்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்களின் தலைவர்கள் அவர்களை அறைகிறார்கள்.

    அவமானப்படுத்துகிறார்கள். போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை, ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் சுயமரியாதை இல்லையா? என பதிவிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.
    • 50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில், எனது அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேரை விலைக்கு வாங்க தலா ரூ.50 கோடி வழங்க பா.ஜ.க. முன்வந்தது.

    ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். இவ்வளவு பணம் பா.ஜ.க.வுக்கு எங்கிருந்து வந்தது ? என பரபரப்பு தகவலை வெளிப்படுத்தினார்.


    இந்த நிலையில் இதை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் 2008-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை திட்டத்தை கொண்டு வந்து 2019-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்த்தார்கள். இதில் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. செல்வாக்கின் கீழ் சென்றதால் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நிர்வாகத்திற்கு வழிவகுத்தது.

    தற்போது காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் பெரும்பான்மையுடன் உள்ளது. தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.

    50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர். இதுபற்றி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் என்னிடம் கூறினர். அதை தான் சித்தராமையா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் பிறகு பேசுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இந்த குற்றச்சாட்டை கர்நாடக பா.ஜ.க. முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜ.க. கட்சி தலைவர் விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி கொடுப்பதாக பா.ஜ.க.வினர் பேரம் பேசியதாக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?. நாங்கள் அவ்வாறு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    இது பொய் குற்றச்சாட்டு என்பது குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். பொய் செய்திகளை பரப்புவது காங்கிரசின் தொழிலாக மாறிவிட்டது. மூடா நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால், சித்தராமையா இப்படி பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். அதிகாரத்தை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் சித்தராமையா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

    ரூ.50 கோடி விஷயத்தில் அமலாக்கத்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதன் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×