என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி கேபிடல்ஸ்"
- ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- தரமசாலாவில் இன்று பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. .
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், தரம்சாலாவில் இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை நடத்த பிசிசிஐக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் மே 11ம் தேதி தரம்சாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 12 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
- எனவே 206 என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணி சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
தொடர்ந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து பேட்டிங் செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 வரை ஸ்கோர் செய்தனர். எனவே 206 என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.
- டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுர்கிறது.
- 5 முறை சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தடுமாறி வருகிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் 4 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
5 முறை சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தடுமாறி வருகிறது. 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மெக்குர்க், கேப்டன் அக்ஷர் பட்டேலிடம் இருந்து இன்னும் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை.
- ஒருங்கிணைந்து செயல்பட்டு எழுச்சி காண மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும்.
நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக டெல்லி விளங்குகிறது. அந்த அணி லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பாராட்டும் விதமாக உள்ளது. பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரல், அஷூதோஷ் சர்மாவும், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகமும் நல்ல நிலையில் உள்ளனர். மெக்குர்க், கேப்டன் அக்ஷர் பட்டேலிடம் இருந்து இன்னும் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. இந்த சீசனில் டெல்லி அணி சொந்த ஊரில் விளையாடும் முதல் ஆட்டம் இதுவாகும். இதனால் அவர்கள் தங்களது வெற்றியை தொடர முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள்.
5 முறை சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி (3-வது ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) தகிடுதத்தம் போட்டு வருகிறது. கடந்த 4 ஆட்டங்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பார்முக்கு வரமுடியாமல் தடுமாறுவது தலைவலியாக இருக்கிறது. காயம் காரணமாக 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த ஆட்டத்தில் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார். ஒருங்கிணைந்து செயல்பட்டு எழுச்சி காண மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும். டெல்லி அணியின் வீறுநடைக்கு மும்பை முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)
- ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
- 2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அந்த தொடரில் அவர் வெறும் 190 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனை அடுத்து ஹாரி ப்ரூக்கை அந்த அணி கழட்டி விட்டது. பின்னர் 2024 தொடரில் ரூ.4 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.






