என் மலர்
கிரிக்கெட் (Cricket)

3வது போட்டி: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா
- முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றியது.
- டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
கவுகாத்தி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வென்று டி20 தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், டி20 தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ய நியூசிலாந்தும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.






