டி20 உலகக் கோப்பையில் 13 கேட்ச்களை தவறவிட்டு இந்திய அணி மோசம்..!

நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா 2 கேட்ச்களை தவறவிட்டார்.சூப்பர் 8 சுற்றில் அதிக கேட்ச்களை தவறவிட்டது இந்திய அணிதான்.
டி20 உலகக் கோப்பையில் 13 கேட்ச்களை தவறவிட்டு இந்திய அணி மோசம்..!
Published on

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இரு அணிகளுக்கும் இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து அற்புதமாக விளையாடினார்கள். அதேவேளையில் இந்திய வீரர்கள் மோசமாக பீல்டிங் செய்தனர். அபிஷேக் சர்மா சுத்த மோசம். இரண்டு கேட்ச்களை தவறவிட்டார். ஷாய் ஹோப் மற்றும் ரோவ்மேன் பொவேல் ஆகியோரது கேட்சை பிடிக்க தவறினார். திலக் வர்மா பவுண்டரி லைனில் கடினமான கேட்சை பிடிக்க தவறினார்.

இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவின் பீல்டிங் மிகச் சிறப்பானதாக அமையவில்லை. 13 கேட்ச்களை தவறவிட்டுள்ளது. சூப்பர் 8 சுற்றில் அதிக கேட்ச்களை தவறவிட்டது இந்திய அணிதான்.

கேட்ச் பிடிப்பதில் இந்திய அணியின் திறன் 72 சதம்வீதம்தான். அரையிறுதியில் இதுபோன்று கேட்ச்களை தவறவிட்டால், வெற்றி தவற விடுவதற்கு சமமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com