என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » engvsl
நீங்கள் தேடியது "ENGvSL"
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், மார்கன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 112 ரன்களை சேர்த்தது.
சார்ஜா:
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மார்கன் 40 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை சார்பில் ஹசரங்கா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
அதிகபட்சமாக ஹசரங்கா 34 ரன்கள் எடுத்தார். ராஜபக்ச, ஷனகா ஆகியோர் தலா 26 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4வது வெற்றியைப் பதிவு செய்தது.
இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி, அடில் ரஷீத், ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
67 பந்துகளை எதிர்கொண்ட ஜாஸ் பட்லர் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் மொத்தம் 101 ரன்கள் விளாசினார்.
சார்ஜா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் ஜாஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஜேசன் ராய் 9 ரன்களிலும், தாவித் மலன் 6 ரன்களிலும் அவுட் ஆகினர். பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
45 பந்துகளில் அரை சதம் கடந்த பட்லர், தொடர்ந்து சதத்தை நோக்கி முன்னேறினார். அவருடன் கேப்டன் மார்கன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 19வது ஓவரில், அணியின் ஸ்கோர் 147 ஆக இருந்த நிலையில் மார்கன் 40 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து ஆடிய பட்லர் கடைசி பந்தில் சிக்சர் விளாசி சதத்தை பதிவு செய்தார். 67 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் மொத்தம் 101 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.
இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X