என் மலர்
நீங்கள் தேடியது "ஹாரி ப்ரூக்"
- இங்கிலாந்து 244 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
- 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 ரன்களும் விளாசினர். இதனால் இங்கிலாந்து 407 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இன்று சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்துக்கு 400 ரன்களுக்கு மேலாக இமாயல இலக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இதனால் இங்கிலாந்து அணி தற்போதைய நிலையில் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது.
இந்த நிலையில் ஹாரி ப்ரூக் சேஸிங் குறித்து கூறியதாவது:-
தற்போது வரை இந்த டெஸ்டில் எங்களால் வெற்றி பெற முடியும் என நினைக்கிறேன். 4ஆவது நாள் காலையில் (இன்று) இந்தியாவின் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், இந்தியா எவ்வளவு ஸ்கோர் இலக்காக நிர்ணயித்தாலும், நாங்கள் களத்தில் சென்ற சேஸிங் செய்ய முயற்சி செய்வோம் என்பது உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
- ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் 158 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.
- ஹாரி ப்ரூக்-ஸ்மித் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்நது விளையாடிய இருவரும் 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். இவர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.
இந்நிலையில் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் 158 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பல சாதனை பட்டியலில் இந்த பாட்னர்ஷிப் இடம் பெற்றுள்ளது.
அதன்படி இங்கிலாந்துக்கான 6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த 2-வது ஜோடி என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனர்.
அந்த பட்டியல்:-
399: பென் ஸ்டோக்ஸ் & ஜானி பேர்ஸ்டோ vs ?? SA, கேப்டவுன் - 2016
303: ஹாரி புரூக் & ஜேமி ஸ்மித் vs ?? IND, பர்மிங்காம் - இன்று
281: கிரஹாம் தோர்ப் & ஆண்ட்ரூ பிளின்டாஃப் vs ?? NZ, கிறைஸ்ட்சர்ச் - 2002
இதனையடுத்து ஒரு இன்னிங்சில் குறைந்த பட்சம் 3 டக் அவுட் & இரண்டு 150-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் எடுத்த நிகழ்வில் இது 5-வது முறையாகும். மேலும் முதல் 7 பேரில் 3 டக் அவுட் & இரண்டு 150-க்கும் மேற்பட்ட ஸ்கோர் எடுத்த நிகழ்வு இதுவே முதல் முறை ஆகும். இந்த போட்டியில் மொத்தமாக இங்கிலாந்து வீரர்கள் 6 பேர் டக் அவுட் அவுட் ஆகியுள்ளது. இதன் மூலம் ஒரு இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்கள் 5 பேருக்கு மேல் அவுட் ஆவது இது 5-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 3 டக் அவுட்கள் & இரண்டு 150-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள்:-
ENG vs AUS, மெல்போர்ன், 1911/12
ENG vs PAK, லார்ட்ஸ், 2010
SA vs AUS, பெர்த் 2012/13
AFG vs ZIM, புலவாயோ, 2024
ENG vs IND, எட்ஜ்பாஸ்டன், 2025
- ப்ரூக் 158 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஸ்மித்- ப்ரூக் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருநாள் போட்டி போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தொடர்நது விளையாடிய இருவரும் 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். இவர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.
இந்நிலையில் இந்திய அணி புது பந்தை எடுத்தது. புது பந்தை எடுத்த சில ஓவர்களில் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் கிளின் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜோ ரூட் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் முதல் பந்திலேயே வெளியேறினார்.
- ஜேமி ஸ்மித் 80 பந்தில் சதம் விளாசினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும், ப்ரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6ஆவது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருநாள் போட்டி போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ப்ரூபக் 73 பந்திலும், ஸ்மித் 43 பந்திலும் அரைசதம் அடித்தனர்.
தொடர்நது விளையாடிய ஸ்மித் 80 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் விளாசினார். மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இங்கிலாந்து 3ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்க 249 ரன்கள் அடித்துள்ளது. ப்ரூக் 91 ரன்களுடனும், ஸ்மித் 102 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 25.3 ஓவரில் 165 ரன்கள் குவித்துள்ளது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது
- ஹாரி ப்ரூக் 99 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிலையில் தவறவிட்டார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய ஒல்லி போப் 106 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஹாரி ப்ரூக் 99 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிலையில் தவறவிட்டார்.
இறுதியில் ஜேமி ஸ்மித் 40 ரன்களும் வோக்ஸ் 38 ரன்களும் அடிக்க 465 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆடவுள்ளது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது
- இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் சதம் அடித்தார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்பிற்கு 420 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாரி ப்ரூக் 99 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.
பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஹாரி ப்ரூக் ஆட்டமிழந்தார். ஏற்கனவே 0 மற்றும் 46 ரன்னில் இருக்கும் போது ப்ரூக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். 2 முறை ப்ரூக்கிற்கு இருந்த அதிர்ஷ்டம் 99 ரன்னில் இல்லாமல் போனதால் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
- 2-வது டி20யில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது
- டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து / England whitewashed West Indies in T20
ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் 2 டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெண் டக்கெட் 84 ரன்கள் விளாசினார்.
இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, டி20 தொடரிலும் அனைத்து போட்டிகளில் வென்று ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடி காட்டியுள்ளது.
ஒருநாள் தொடரில் ஜோ ரூட் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் தோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்தது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போதே பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
லண்டன்:
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) பட்லர் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் இங்கிலாந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
இதனையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து பட்லர் விலகுவதாக அறிவித்தார். அதன தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு கேப்டன் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் புதிய கேப்டனாக (ஒருநாள் + டி20) ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
- முதல் நாளான இன்று 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அசத்தினர்
- ஹாரி ப்ரூக் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.
ராவல்பிண்டி:
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கட், ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய நான்கு வீரர்கள் சதமடித்து அசத்தினர்.
அணியின் சிறந்த தொடக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முனைபில் விளையாடிய ஹாரி புரூக், தொடக்கம் முதலே விறுவிறுவென ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆட்டத்தின் 68வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சவுத் ஷகீல் வீச வந்தார். அந்த ஓவரில் ருத்ரதாண்டவமாடிய புரூக், ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை திரட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்திலும் பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடித்த வீரர்கள்:
1982: சந்தீப் பாட்டீல் - பாப் வில்லிஸ் பந்துவீச்சு
2004: கிறிஸ் கெய்ல் -மேத்யூ ஹோகார்ட் பந்துவீச்சு
2006: ராம்நரேஷ் சர்வான் -முனாஃப் படேல் பந்துவீச்சு
2007: சனத் ஜெயசூர்யா -ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு
2022: ஹாரி ப்ரூக் -சவுத் ஷகீல் பந்துவீச்சு.
- முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
- ஹாரி ப்ரூக் 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜாக் கிராவ்லே (2) மற்றும் பென் டக்கர் (9) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த ஓலி போப் 10 ரன்களில் வெளியேறினார்.
இதன்பின் ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் ஜோடி, சிறப்பான பேட்டிங்கின் மூலம் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்ற ஹாரி ப்ரூக் இரண்டாவது போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
ஹாரி ப்ரூக் 169 பந்துகளில் 184 ரன்களும், ஜோ ரூட் 182 பந்துகளில் 101 ரன்களும் எடுத்திருப்பதன் மூலம் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தநிலையில் விளையாடியுள்ள 6 போட்டியில் ( 9 இன்னிங்ஸ்) 4 சதம் அடித்து அசத்தியுள்ள ஹாரி ப்ரூக், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் முதல் 6 போட்டிகளுக்குள் 4 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஹார் ப்ரூக் இணைந்துள்ளார்.
அதே போல் டெஸ்ட் போட்டிகளில் முதல் 9 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி ஹாரி ப்ரூக் முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னாள் இந்திய வீரரான வினோத் காம்ப்ளே தனது முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதனை ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார். அதே போல் முதல் 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் ஹாரி ப்ரூக்கையே சாரும்.
- 6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும்.
- கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோ ரூட் நிதானமாக ஆடி சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 315 எடுத்துள்ளது. ஹாரி புரூக் 184 ரன்களுடனும் ஜோ ரூட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும். 24 வயதாகும் அவர் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 807 ரன்களை குவித்துள்ளார்.
புரூக்கின் மிரட்டல் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர். தற்போது அடுத்த 10 ஆண்டுகளில் அதே குழந்தைகள் ஹாரி புரூக்கை போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்' என கூறியுள்ளார்.
- ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
- 2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் அந்த தொடரில் அவர் வெறும் 190 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனை அடுத்து ஹாரி ப்ரூக்கை அந்த அணி கழட்டி விட்டது. பின்னர் 2024 தொடரில் ரூ.4 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.






