என் மலர்
நீங்கள் தேடியது "Jamie Smith"
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் ஜெய்ஸ்வால் 87 ரன்னில் வெளியேறினார்.
இங்கிலாந்து சார்பில் பஷீர் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.
இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18 ரன்னும், ஹாரி புரூக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் விரைவில் அவுட்டாகினர். 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது.
6வது விக்கெட்டுக்கு ஹாரி புரூக்குடன் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இருவரும் சதமடித்தனர்.
6வது விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாரி புரூக் 158 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேமி ஸ்மித் 184 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- ப்ரூக் 158 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஸ்மித்- ப்ரூக் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதனையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருநாள் போட்டி போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தொடர்நது விளையாடிய இருவரும் 150 ரன்களுக்கு மேல் குவித்தனர். இவர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.
இந்நிலையில் இந்திய அணி புது பந்தை எடுத்தது. புது பந்தை எடுத்த சில ஓவர்களில் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஹாரி ப்ரூக் கிளின் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜோ ரூட் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் முதல் பந்திலேயே வெளியேறினார்.
- ஜேமி ஸ்மித் 80 பந்தில் சதம் விளாசினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும், ப்ரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6ஆவது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருநாள் போட்டி போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ப்ரூபக் 73 பந்திலும், ஸ்மித் 43 பந்திலும் அரைசதம் அடித்தனர்.
தொடர்நது விளையாடிய ஸ்மித் 80 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் விளாசினார். மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இங்கிலாந்து 3ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்க 249 ரன்கள் அடித்துள்ளது. ப்ரூக் 91 ரன்களுடனும், ஸ்மித் 102 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 25.3 ஓவரில் 165 ரன்கள் குவித்துள்ளது.
- முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னும், அட்கின்சன் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஹாரி ப்ரூக்56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்ம், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.
- இலங்கை 2வது இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார். ஹாரி ப்ரூக் 56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்கத்தில் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 65 ரன்னில் அவுட்டானார்.
கமிந்து மெண்டிஸ் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் சண்டிமால் 79 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ பாட்ஸ் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது.
- இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடக்கும் இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், லபுசேன், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜம்பா, நாதன் எல்லீஸ், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினர். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபத்தில் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. இதனால் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியில் முழு திறமையை வெளிப்படுத்த போராடும்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோரூட், பென் டக்கெட், பிலிப் சால்ட், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், மார்க் வுட், ஆதில் ரஷித், ஆர்ச்சர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது. அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்க முயற்சிக்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயமடைந்த பேட்டர் ஸ்மித் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி:
பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்.






